Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கிளப்பப்படும் புலிப்பூச்சாண்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கிளப்பப்படும் புலிப்பூச்சாண்டி

 

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததற்கு பின்னர் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும், சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளினால்  தேர்தல் ஒன்றுக்கு முன்னதாக எப்போதுமே புலிப்பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் நிலைமை வேறுபட்டதாக இல்லை.

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பையே பிரதான பிரச்சினையாக மக்கள் முன்கொண்டுசெல்லும் கடும்போக்காளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச அக்டோபர் 14 முன்னாள் விடுதலை புலிகள் என்று கூறப்படுகின்றவர்கள் கைதுசெய்யப்பட்ட இரு சம்பவங்களின் வடிவில் ஒரு  உத்வேகத்தைப் பெற்றிருக்கிறார். ஒரு கைது வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மற்றைய கைது மலேசியாவிலும் இடம்பெற்றிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகளுடனான போரில்  2009 ஆம் ஆண்டில் வெற்றியடைந்தபோது கோதாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்தார்.கோதாபயவின் மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகக் கூட, அவர் முக்கியத்துவம் கொடுத்த பிரதான பிரச்சினைகளில் ஒன்று இலங்கையின் பாதுகாப்பு பற்றியதாகும்.அந்த தேர்தலிலின்போது கூட இலங்கை அரசுக்கு எதிராக சதிசெய்ததாக சில தமிழர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

kotha.jpg

இத்தடவை யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இரு கிளமோர் கண்ணிவெடிகள்  கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே அந்த கண்ணி வெடிகள்  கைப்பற்றப்பட்டதாக பொலிசார் கூறுகிறார்கள்.கிளமோர் கண்ணிகள் இலங்கையின் வடபகுதியில் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்படுகின்றன.ஏனென்றால், விடுதலை புலிகளினால் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட பகுதிகளில் சில இன்னமும் துப்பரவு செய்யப்படாமல் கிடக்கின்றன.வடக்கில் பெரும்பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட அதேவேளை, வடபகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதிகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஒரு முழுமையான விளக்கம் கிடையாது.

மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளைப் பொறுத்தவரை, பயங்கரவாத பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு பின்னரே நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுகளையும்  அவற்றுக்கு கொடுமையான 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் ( விசேட ஏற்பாடுகள் சட்டம் ( சொஸ்மா ) பயன்படுத்தப்பட்டதையும் மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது திங்கட்கிழமை நியாயப்படுத்தினார்." பொலிசார் எனக்கு நிலைவரத்தை விளக்கிக்கூறினார்கள். அந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.பொலிசாரின் விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்" என்று பிரதமர் ஊடகங்களுக்கு கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஆளும் நான்கு கட்சி பகதான் ஹரபான் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக நடவடிக்கை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உள்ளக இயக்கவிசையொன்றும் செயற்படுகிறது என்று தோன்றுகிறது.இது தவிரவும், விசாரணைகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்ட நேரம் தேர்தல் போட்டியில் முன்னணியில் நிற்கும்  கோதாபயவைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் உதவவில்லை.

மலேசியாவில் இடம்பெற்ற கைதுகள் இலங்கையில் பத்திரிகைகளில் முனபக்க தலைப்பு செய்திகளாக இடம்பெற்றிருக்கின்றன.விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுவதாகவும் உள்நாட்டுப்போர்க் கால நெருக்கடி மிகுந்த நாட்கள் மீண்டும் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சிங்கள மக்கள் மத்தியில்  பிரசாரம் செய்துவருகின்றன என்று வெளியாகும் தகவலுக்கு  இந்த செய்திகள் வலுச்சேர்க்கின்றன.

( ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ஃபுரொண்ட் லைன் )

 

https://www.virakesari.lk/article/66967

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.