Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறார்களை வருத்தும் புலமைப் பரிசில் பரீட்சை இனிமேலும் எதற்கு?

Featured Replies

Monday, October 28, 2019 - 6:00am
fea01.jpg?itok=PKe9xY1e

மாணவரின் மனச்சுமையை நீக்க கல்விச் சமூகம் இனிமேலாவது தீர்மானமொன்றுக்கு வர வேண்டும்

தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றது. எனவே அவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சு முன்னர் கூறியிருந்தது. ஆனால் அதுபற்றி பின்னர் எதுவும் பேசப்படவில்லை.

நாட்டிலுள்ள பிரபல மனோவியல் நிபுணர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயை கல்வியமைச்சு கவனத்தில் எடுத்தது. பின்னர் அப்பரீட்சை கட்டாயமில்லை என்று அறிவித்தது. ஆனாலும் இந்த வருடம் உதவித்தொகை அதிகரிக்கப்பட்ட அதேவேளை, சித்தியடைந்தோர் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளமை இப்பரீட்சை குறித்த தெளிவின்மையையே ஏற்படுத்தி நிற்கின்றது.

வியாபாரிகள் பழங்களை கனிய வைப்பதற்காக காய்களுக்கு இரசாயன மருந்துகளை தெளிக்கின்றனர். அது போலவே ஆரம்பக் கல்வியை கற்கும் பிஞ்சுகளுக்கும் புலமைப் பரிசில் என்ற ஊசி ஏற்றப்படுகின்றது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை நியாயமானது என வாதிடுவோரும் உள்ளனர்.

கிராமப்புறங்களில் கற்கும் வறிய மாணவர்கள் சிறந்த கல்வியைத் தொடர்வதற்கு நகர்ப்புற பாடசாலைகளை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் தரம்-5 மாணவர்களுக்கு கிடைக்கப் பெறுவதால் இப்பரீட்சை நியாயமானது என அவர்கள் வாதிடுகின்றனர்.

வசதிகள் குறைந்த மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூபா 7500 கிடைக்கப் பெறுவதால் தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை நியாயம் என்கின்றனர் அவர்கள்.

எவ்வகையான அரச பரீட்சை ஒன்றையும் எதிர்கொள்ளக் கூடிய மனவுறுதியும்,தைரியமும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சையினூடாக நுண்ணறிவு மற்றும் பொது அறிவு வினாக்கள் வினவப்படுவதனூடாக மாணவர் மத்தியில் அறிவுத் தேடலுக்கான கதவுகள் திறக்கப்படுவதாக இத்தரப்பினர் நம்புகின்றனர்.

சில பாடசாலைகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களே அடுத்தடுத்த வருடங்களிலும் தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவித்தொகை வழங்கி வருவதால் அந்த உதவிகளை மாணவர்கள் தமது எதிர்கால கற்றலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இவ்வாறெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் தரம் -5 புலமைப்பரிசில் பரீடசையானது அந்த மாணவர்களுக்கு நன்மையளிப்பதை விட்டுவிட்டு அப்பரீட்சையை வைத்து பணம் ஈட்டும் மூன்றாவது நபர்களுக்கே இன்று நன்மைகளை அளித்து வருவதனைக்காண முடிகின்றது.

இப்பரீட்சையானது மாணவர்களது நன்மைக்காகவே என கருதினாலும் பல தீமைகளையும் ஏற்படுத்தி வருவதைக் காண முடிகின்றது. இப்பரீட்சை அவசியமற்றது எனக் கருதுவோர் தெரிவித்து வரும் கருத்துகள் பின்வருமாறு அமைகின்றன.

இப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவனை படித்தவன் என்றும் சித்தியடையத் தவறிய மாணவனை படியாதவன் என்றும் பேதம் உருவாக்கப்படுதல்.

120 புள்ளிகளைப் பெற்ற மொனறாகலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன் சித்தியடைந்த மாணவன் என்றும், 140 புள்ளிகளைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மாணவன் சித்தியடையாத மாணவன் என்றும் வெட்டுப்புள்ளி வேறுபாடு அடிப்படையில் பகிரங்கப்படுத்தி வருதல்.இதனால் மாணவர்கள் உளப்பாதிப்புக்களை சந்தித்து வருதல்.

வெட்டுப்புள்ளி அடிப்படையில் 1அல்லது இரண்டு புள்ளிகளால் சித்தியடையத் தவறிய மாணவர்கள் மனம் நொந்து வெம்புதல். அந்த துன்பகரமான நிகழ்வை அம்மாணவன் மறக்காதிருத்தல்.

தனியார் கல்வி நிலையங்களுக்கும், தனிப்பட்ட ரீதியாக ஆசிரியர்களின் வீட்டுக்கும் பிள்ளைகளை இராப்பகலாக பெற்றோர் அனுப்பி வைத்தல்.

தனது பிள்ளை சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவுப் பொருட்கள், புத்தாடைகள், விருந்தோம்பல்கள் என்பவற்றை பெற்றோர் செய்து வருவதுடன் அறியாமை காரணமாக பெற்றோரின் பணம் வீண்விரயம் செய்யப்படுதல்.

தரம் - 05 கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு அதிகமான வருமானம் கிடைக்கப் பெற்று வருவதனால் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களிடையே முரண்பாடு ஏற்படுதல்.

ஆசிரியர் பலர் கல்வியின் பெயரால் பணத்தை உழைத்து தனவந்தராக முயற்சித்தல். புலமைப்பரிசில் பரீட்சைக்கென பெயர் போன ஆசிரியர்கள் சிலர் கார், காணி, பெரிய வீடு என்று சொகுசு வாழ்க்கையில் உள்ளனர்.

சில பாடசாலை நிர்வாகத்தினர் தங்கள் பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கெட்டிக்கார மாணவர்களை ஒரு வகுப்பாகவும், திறமையற்ற மாணவர்கள் என்று இனங்காணப்பட்ட மாணவர்களை வேறு வகுப்பாகவும் ஆக்கி தரம் - 5 மாணவர்களை பிரித்தாளுதல் அல்லது இயலாமையுடைய மாணவர் சமூகத்தை உருவாக்க வழிகோலுதல்.

தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வைத்து கோட்டத்தில், வலயத்தில் தங்களுடைய பாடசாலைகள்தான் சிறந்த பாடசாலைகள் என்ற மடைமையான தீர்மானங்களை சில பாடசாலைகள் எடுத்தல்.

சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிப்பதாகக் கூறிக் கொண்டு சில அமைப்புக்கள் பிள்ளைகளின் பெற்றோரிடத்தில் பணம் அறவிட்டு வருவதைக் காண முடிகின்றது. அத்துடன் மலர் வெளியீடுகளின் தங்கள் பிள்ளைகளின் புகைப்படத்தை பிரசுரிப்பதாகக் கூறிக் கொண்டு சில நிறுவனங்கள் பெற்றோரை ஏமாற்றி பணம் பறித்தல்.

இவையெல்லாம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு எதிரான கருத்துகளாகும். புலமைப் பரிசில் பரீட்சை நியாயமானது அல்லது அநியாயமானது என்ற வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அப்பரீட்சையானது பிள்ளைகளை உளரீதியான பாதிப்புகளுக்கு இட்டுச் செல்கின்றது என்பதனை அப்பிள்ளைகளின் நடத்தைகளில் இருந்து அவதானித்துக் கொள்ள முடியும். அவ்வாறான நடத்தைகள் பின்வருமாறு,

இளம்வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் நிலை. பயந்த அல்லது புன்னகையற்ற முகங்களாக பிள்ளைகள் வகுப்பில் காட்சியளித்தல். பிள்ளைகளிடத்தில் தூக்கம் குறைவு. சரியாக சாப்பிடுவதில்லை போன்ற குறைபாடுகளை பெற்றோர் வெளிப்படுத்தல்.

எவ்வாறாயினும் பிள்ளைகளுக்கு பிரச்சினைக்குரிய விடயமாக வலம் வரும் இந்தப் புலமைப் பரிசில் பரீட்சையானது பிள்ளைகளுக்குத் தேவையானதே என்று கருதும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் நலனை வைத்து சிந்திப்பதில்லை. மாறாக தனியார் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களை புலமைப்பரிசில் பரீட்சை வாழ வைத்துக் கொண்டிருப்பதனால் தங்களது நன்மைக்காகவே புலமைப் பரிசில் தேவை என்கின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் அடைவைத் தீர்மானிக்கின்ற ஒரு பரீட்சையாக நினைத்து வரும் சில பெற்றோர் அப்பரீட்சையின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஓட்டமாவடி கோட்டத்தில் வைத்தியர்களாகக் கடமையாற்றும் 4 வைத்தியர்களிடம் விசாரித்த போது, தாங்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை என்றனர். ஆனால் ஓட்டமாவடி கோட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு சிலர் இன்று கல்வியில் முன்னேற்றமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிந்தது.

எனவே இப்பரீட்சை இளம் சிறார்களுக்கு அவசியமா அல்லது அவசியமில்லையா என்பதை கல்வியியலாளர்கள் இனியாவது தீர்மானிக்க வேண்டும்.

https://www.thinakaran.lk/2019/10/28/கட்டுரைகள்/42797/சிறார்களை-வருத்தும்-புலமைப்-பரிசில்-பரீட்சை-இனிமேலும்-எதற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.