Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை 11, உலக போர்வீரர் நினைவு தினம்

Featured Replies

இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

   
அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க  உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூரியது தெரிந்ததே.

முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.

Why might you want to consider wearing a poppy? Possibly to recognize the personal bravery, honour, loyalty and determination of veterans, Roy Green says.

  • தொடங்கியவர்

பெர்லின் சுவர் கட்டப்பட இரண்டாம் உலகப்போர் காரணமானது எப்படி?

பெர்லின் சுவர் விழுந்தது 20ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வாகும். கம்யூனிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சியை இது குறித்தது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை போலவே, கட்டப்பட்டதும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அங்கு கட்டி எழுப்பப்பட்டிருந்த வலுவான சுவர் பெர்லினை மட்டும் பிரிக்கவில்லை. 30 ஆண்டுகளாக இரண்டு வேறுபட்ட அரசியல்-சமூக-பொருளாதார  கொள்கைகளைப் பிரித்தது.  20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

எதற்காக இந்த பெர்லின் சுவர்?

இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து தோல்வியுற்ற ஜெர்மனியை இரண்டாக பிரிக்க முடிவு செய்தன.  பெர்லின் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பெர்லின் தலைநகரமாக இருந்ததால், தலைநகரத்தையும் பிரிக்க வேண்டிய சூழல் உண்டானது.

முதலாளித்துவ நாடுகள் ஜெர்மனியின்  மேற்கு பகுதியையும், கம்யூனிஸ்ட் நாடுகள் கிழக்கு பகுதியையும் கைப்பற்றின.

ஐரோப்பிய கண்டம் சர்வதேச அரசியல் சண்டைக்கான இடமானது. பனிப்போர் துவங்கியது.

மேற்கில், ஜெர்மனி பெடரல் குடியரசு உருவானது, கிழக்கில் ஜெர்மனி ஜனநாயக குடியரசு உருவாக்கப்பட்டது. 

இது சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாக இருந்தது. பெர்லின் முதலாளித்துவ நாடுகளின் செயல்பாட்டுகளின் மையமானது.

நாளடைவில், கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு இது பெரும் சிக்கலானது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  இந்த நகரத்தை உளவு பார்க்கும் தளமாக பயன்படுத்தின.

1949 மற்றும் 1961ம் ஆண்டுக்கு இடையில்,  மேற்கு ஜெர்மனியில் நல்ல வாய்ப்புகளைத் தேடி சுமார் 25 லட்சம் மக்கள் கிழக்கு ஜெர்மனிக்கு தப்பிச் சென்றனர்

இந்த சூழலை நிறுத்த, நகரத்திற்கு இடையே சுவர் எழுப்ப வேண்டுமென கம்யூனிஸ்ட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எனவே, 1961ம் ஆண்டு  ஆகஸ்ட் 13ம் நாள் இரவு,  ஒரு சில மணி நேரத்தில் பெர்லின் சுவர் கட்டியமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இந்த சுவர், வலிமைமிக்கதாக நின்றது. 3.5 மீட்டர் உயரத்தில், எஃகு கம்பிகள் கொண்டு கட்டப்பட்டது.

155 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மேற்கு பெர்லின் முழுவதும் இந்த சுவர் சூழ்ந்திருந்தது. கிழக்கு பெர்லினை சேர்ந்த 5000 பேர் தப்பித்து சென்றனர். தப்பிக்க முயன்ற பலர் எல்லையில் கைது செய்யப்பட்டனர். பலர் உயிரிழந்தனர்.

இந்த சுவர் பெர்லினை முப்பது ஆண்டுகள் பிரித்துவைத்தது.

இது கட்டப்பட்டதைப் போலவே பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  

https://www.bbc.com/tamil/global-50352301

 

  • தொடங்கியவர்

உலகப்போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரிட்டனில் உள்ள போர் நினைவுச்சின்னத்தின் மீது மலர்கள் தூவப்பட்டன.

பிரிட்டனின் கடற்கரை நகரமான டோவர் பகுதியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தின் மீது உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானத்தின் மூலம் பாப்பி மலர்கள் தூவப்பட்டன.

இரண்டு உலகப்போர்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரிட்டன் வீரர்கள் உயிரிழந்த நிலையில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அங்கீகரிப்பதற்கான சின்னமாக பாப்பி மலர்களை காமன்வெல்த் நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இதேபோல், உலகப் போரில் உயிழந்தவர்களுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ், பிரிட்டன் பிரதமர் போரி ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களும் பாப்பி மலர்களை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

https://www.polimernews.com/dnews/88260/உலகப்போரில்-உயிரிழந்தராணுவ-வீரர்கள்-மற்றும்பொதுமக்களுக்கு-அஞ்சலி

 

 

  • தொடங்கியவர்

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.