Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக

Featured Replies

(எம்.மனோசித்ரா)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

sambika.jpg

குறித்த கடிதத்தை மகா சங்கத்தினரிடம் சமர்பித்து விளக்கமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ' ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக ' சஜித் பிரேமதாச அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்புகின்றனர்.

எனினும் அவரது விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து கடிதம் மூலம் மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்தோம்.

எம்.சீ.சீ ஒப்பந்தம்

மிலேனியம் செலெஞ்ச் ஒப்பந்தம் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் மகா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டாமல் ஒப்பந்தம் ஒரு போதும் கையெழுத்திடப்பட மாட்டாது என்பதும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க இராணுவம் குறித்து எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான நவீன போக்குவரத்து திட்டம் தொடர்பிலேயே இந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து முகாமைத்துவ நிலையம் நிறுவப்படும்.

இதன் மூலம் கொழும்பில் சீ.சீ.டி.வி கமரா பொறுத்தும் வேலைத்திட்டம் முறையாக பேணப்படும். காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பான காணொளி சீ.சீ.டி.வி கமராக்களில் இருந்துபெறப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து வாகன இலக்கங்களைக் கூட இனங்காண முடியவில்லை.

எனவே தான் இதனை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையாவார். நாட்டின் இடங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் மாத்திரமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே அமெரிக்க பிரஜையான கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை அறிந்து சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/68822

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

நாட்டில் ' ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக ' சஜித் பிரேமதாச அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்புகின்றனர்.

எனினும் அவரது விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து கடிதம் மூலம் மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்தோம்.

தமிழர்களை ஏமாற்றும் நாடகத்தில் இதுவும் ஒன்று. ஒற்றையாட்சிக்குள் அதி உச்ச தீர்வு தமிழருக்கு தரப்படும் 😞 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.