Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான  கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பட்­டி­ருப்புத் தொகுதி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன், வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார்

ariyanenthiran.jpg

அவ­ரு­ட­னான முழு நேர்­கா­ணலும் வரு­மாறு,

கேள்வி :- தமிழ்க் ­கட்­சி­களின் வெளிப்­ப­டை­யான ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் தோற்­க­டிக்­கப்­ப­டுவார் என்ற சூழல் தெற்கில் கட்­ட­மைக்­கப்­பட்ட நிலையில், தமிழ் மக்­களின் செல்­வாக்­குள்ள ஒரு வர் தோல்­வியை தழு­வு­வ­தென்­பது யதார்த்­தம்­தானே, இது தொடர்­பாக தங்கள் கருத்து?

பதில்:- தமிழ் மக்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் இலங்கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யி­னதும் ஆத­ரவு ஒரு ஜனா­தி­ப­தி வேட்பாளருக்கு வழங்­கும்­போது, எதிர்­த்த­ரப்பு இன­வாத பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொள்­வது, நாட்டை பிரிக்­கப்­போ­கி­றார்கள் என தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பது எல்லாம் உண்­மைதான். ஆனால் இது இப்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது, காரணம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தென்­ப­கு­தி­களில் உள்ள சிங்­கள மக்கள் விரும்­பு­கின்­றனர். தமிழ்த் தலை­மைகள் தங்­களின் உரி­மை­களை மட்­டுமே கேட்­கி­றார்கள். நாட்டைப் பிரித்துத் தரு­மாறு கேட்­க­வில்லை என்ற உண்­மையைப் பலர் விளங்­கி­யி­ருக்­கின்­ற                                                                           னர்.

இருந்த போதும் வெளிப்­ப­டை­யாக ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்­கும்­போது இன­வாத பிர­சா­ரங்கள் தென்­ப­கு­தியில் தலை­தூக்கும் என்­பது யதார்த்­தம்­தானே. அதற்­காக எமது இனப்­பி­ரச்­சினை, அன்­றாட பிரச்­சினை, அபி­வி­ருத்தி, காணாமல் ஆக்கப்­ பட்­டோர்கள் விடயம், போரினால் பாதிக்­கப்­பட்ட தலைமை தாங்கும் பெண்கள் தொடர்­பான வாழ்­வா­தாரம், முன்னாள் போரா­ளிகள் தொடர்­பான வாழ்­வா­தாரம், வேலை வாய்ப்­புகள் என்­பன போன்ற விட­யங்­களை முன்­நி­றுத்­தி­ய­தா­க எந்த வேட்­பாளர் கூடிய அக்­கறை காட்­டு­வ­தற் காக பதில் தரு­கி­றாரோ அவரை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுப்­பதில் தவ­றில்லை. அதற்­காக எல்லா விட­யங்­க­ளையும் குறிப்­பிட்ட வேட்­பாளர் தருவார் என்றும் இல்லை.

கேள்வி :- ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயல்­முறை முன்­னெ­டுக்­க­ப்ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­குமா?

பதில்:- சஜித் வெற்றி பெறு­வது, வெற்றி பெறா மல் விடு­வது வேறு விடயம். ஆனால் சஜித் பிரே­ம­தாச முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வுகாண சபை­க­ளுக்­கான அதிகாரப்­ ப­கிர்வு கடந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் எமது தமிழ்த் தலை­மைகள் அவர்கள் ஊடாக முன்­வைத்து அவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அல்­லது அவர்­களும் கலந்துகொண்டு எட்­டப்­படும் தறு­வாயில் இருந்த தீர்வு யோச­னைகள் அடிப்­ப­டையில் பேச்­சு­வார்­த்தைகள் இடம்பெறும் என்ற விடயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­காக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடும் வாக்­கு­று­திகள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் இல்லை. இருந்­த­போதும் அது எழுத்து மூல­மான ஆவ­ண­மாக இருக்கும்போது எதிர்­கால பேச்­சு­வார்த்­தைகள் சில­வேளை சர்­வ­தேச மத்­தி­யஸ்தம் ஒன்­றுக்கு வாய்ப்பு ஏற்­பட்டால் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் அடிப்­படை ஆவ­ண­மாக அமைய வாய்ப்­புள்­ளது. யார் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சி­ய­ல­மைப்பு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் அதற்­கான அழுத்­தங்கள் சர்­வ­தேசம் ஊடாக வெற்­றி­பெறும் ஜனா­தி­பதிக்கு வழங்­கப்­படும்.

கேள்வி :- ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன வின் ஆட்­சிக்­கா­லத்தில் பெய­ர­ள­வி­லேயே அவர் ­ செயற்­பட்ட நிலையில், இடம்­பெ­ற­வுள்ள தேர்­த லில் ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் தமிழ் ­மக்­க­ளுக்­கான சமூக பொரு­ளா­தார வேலை வாய்ப்பு அபி­வி­ருத்தி முன்னெடுக்கப்படுமா?

பதில்:- ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள வேட்­பாளர் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாவார். எந்த சிறு­பான்மை வேட்­பா­ளரும் ஜனா­தி­ப­தி­யாக இலங்­கையில் கனவில் கூட வர­மு­டி­யாது. அப்­படி வரு­வ­தானால் 50 சத­வீத வாக்­கு­களை பெற வேண்டும் என்ற விதி மாற்­றப்­பட வேண்டும். சஜித் வெற்­றி­யீட்­டினால் சமூக  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வீட்­டுத்­திட்டம் என்­பன முன்­னேறும்.

கேள்வி :- ஐக்­கிய தேசியக் கட்சி 2010, 2015 களில் நிறுத்­திய பொது­வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்த ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்­தி­யாக களம் இறங்­கி­யுள்­ள­தனால் தமிழ்க் ­கட்­சி­க­ளி­னதும் சஜித்­தி­னதும் நிலை சவால்­க­ளுக்கு உள்­ளாகும் தானே?

பதில் :- இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் எல்லாம் ஒரே கட்சி ஒரு­வேட்­பா­ளரை ஆத­ரித்த வர­லா­றுகள் இல்லை, ஜே.வி.பி.யை பொறுத்­த­மட்டில் கடந்­த­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­தாலும் இம்­முறை தனி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இறக்­கி­யுள்­ளது. இதனால் பிர­தான ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் 5 வீதம் குறை­வான வாக்­கு­களை மட்­டுமே ஜே.வி.பி. பெறு­வ­தற்­காக சந்­தர்ப்பம் உள்­ளது. இதனால் தமிழ் கட்­சி­க­ளுக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, தமிழ் மக்­களின் வாக்­குகள் பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­கலாம். ஆனால் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு, தமி­ழ­ரசு கட்சி ஆத­ரவு வழங்கும் வேட்­பா­ளரே வடக்கு, கிழக்கில் கூடிய வாக்­கு­களை பெற­மு­டியும்.

இதற்கு நல்ல உதா­ரணம் கடந்த கால அனு­பவம். வடக்கு, கிழக்கு மக்கள் மாவட்ட ரீதி­யாக கடந்த 2010, 2015, ஆம் ஆண்டு தேர்­தல்­களில் எவ்­வாறு வாக்­க­ளித்­தனர் என்ற புள்­ளி­வி­ப­ரத்தை பார்த்தால் தெளி­வாகப் புரியும். மிக முக்­கி­ய­மாக கடந்த 2010, 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­களை நோக்­கும்­போது ­மே­ல­தி­க­மாக வாக்கு வித்­தி­யா­சத்தில் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்கு கிடைத்­துள்­ளது என்ற உண்­மையை மறு­த­லிக்க முடி­யாது அல்­லவா? வடக்கு, கிழக்கு மக்­களின் வாக்­க­ளிப்பு ஏறக்­கு­றைய இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஒரே அள­வான முடி­வா­கவே அமைந்­தி­ருந்­தது.

இம்­முறைத் தேர்­தலில் தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பு (இலங்கை தமி­ழ­ரசு கட்சி) “அன்னம்” சின்­னத்தில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. கடந்த 2010, 2015, இரண்டு தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு மக்கள் எப்­ப­டி­யாக தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தார்­களோ அதேநிலை தான் இம்­மு­றையும் வரலாம், வித்­தி­யா­சங்கள் பெரி­ய­ளவில் இருக்­காது என்­பதே எனது கருத்து.

கேள்வி :- கடந்த 2018 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன, நாடுபூரா­க­வு­முள்ள 340 சபை­களில் 234 சபை­களை கைப்­பற்றி விஸ்­வ­ரூப வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு, ஜனா­தி­பதி தேர்தல் சவா­லாக அமையும் என கரு­து­கின்­றீர்­ களா?

பதில் :- உள்­ளூ­ராட்சித் தேர்தல் கலப்பு தேர்தல் முறை அது பர­வ­லாக ஊர், உறவு, வட்­டாரம், இனம், சனம், சொந்தம் என்­ப­வற்றை பார்த்து கட்­சி­க­ளுக்கு அப்பால் தனி­நபர் நற்­பண்பு செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்த உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் இடம்­பெற்­றது.

அதன் முடி­வு­களை செல்­வாக்­கு­களை ஜனா­தி­பதி தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. இது தென்­ப­கு­தியில் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிலும் கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிலைமை முடி­வுகள் இப்­ப­டித்தான் அமைந்­தது, கலப்பு தேர்தல் முறை மாற்­றப்­பட்டு விகி­தா­சார தேர்­தல்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கடைப்­பி­டித்­தி­ருந்தால் வடக்கு கிழக்கில் சகல தமிழ் உள்­ளூ­ராட்சி சபை ண­களும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்கும், இதுவே எல்லா இடங்­க­ளிலும் யதார்த்தம். அந்த தேர்­தலை இந்த தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது.

கேள்வி :- சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை சீற்­றத்­துக்­குள்­ளாக்­காமல் தமிழ்க்­கட்­சி­களின் "வர்ண சாய ஆத­ரவை" பெற்­றுக்­கொள்­ளத்­தக்க சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில் :- சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமிழ்­மக்­களின் அர­சியல் அதி­காரப் பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை. இதிலே பார்க்க வேண்­டிய விடயம் யாதெனில் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளிலும் கூடிய கொடூ ரம் செய்­தவர் யார்? குறைந்த கொடூரம் செய்­த வர் யார்? கூடிய கொடூரம் செய்­தவர் இந்த தேர்­தலில் வெற்றி பெறாமல் இருக்க வேண்­டு­மானால் குறைந்த கொடூரம் செய்­த­வரை ஆத­ரிக்க வேண்டும்.

இந்த தேர்தல் “சூத்­தி­ரம்தான்” கடந்த 2010, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கடைப்­பி­டித்த கொள்கை. அதைத்தான் இந்த தேர்­த­லிலும் கடைப்­பி­டிக்க வேண்­டுமே அன்றி வேறு உபா­யங்கள் இல்லை. கொடூர கொடுமை செய்­த­வரை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்­க­வில்லை என்ற செய்தி இத் தேர்­தலின் பின்­னரும் வரும். இதுதான் கடந்த 2010, 2015 தேர்தல் முடி­வாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வாக்குச்சீட்டு மூலம் நிரூ­பித்­தனர் அதை இம்­மு­றையும் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை உண்டு. ஆத­ரிப்­ப­வர்கள் வெற்றி பெறு­வதும் இல்லை, வெற்றி பெற்­ற­வ­ரெல்லாம் நாம் ஆத­ரித்­த­வரும் இல்லை.

கேள்வி :- வவு­னி­யாவில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் முடி­வ­டைந்து, வாக­னத்தில் சென்ற இரா.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனின் வாக­னத்­தொ­ட­ரணி மீது, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சேர்ந்த தாயொ­ருவர் செருப்பை கழற்றி எறிய முற்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து, தமி­ழ­ர­சுக்­கட்சி ஆதிக்கம் செலுத்­து­கின்ற கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் காலங்­களில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள்?

பதில் :- வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்ட உறவைச் சேர்ந்த ஒரு தாயார் சம்­பந்தன், சுமந்­திரன் வாக­னத்­திற்கு செருப்பைக் காட்ட தூண்­டி­ய­வர்கள், அந்த தாயின் உண்­மை­யான கோரிக்கைக்கு செருப்பு காட்­டி­ய­தா­கத்தான் இதை பார்க்க வேண்டும். உண்­மையில் காணாமல் போனவர்கள் யார் வெள்ளை வானில் கடத்­தி­னார்­களோ, யார் அர­சினால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்­களோ, யார் அதற்கு கார­ண­கர்த்­தா­வாக இருந்­தாரோ அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு பன்னீர் தெளிப்­பதும், மாலை இடு­வதும் பொட்டு வைப்­பதும், கட்டி முத்தம் கொடுப்­பதும் இடம்­பெறும் நிலையில் ஒரு­வ­கையில் குற்­ற­வா­ளி­களை தமிழ் மக்­களே காப்­பாற்றும் செய­லாக உள்­ளது. சம்­பந்தன் அல்­லது சுமந்­திரன் ஜனா­தி­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு செருப்பு காட்­டு­வது பொம்மை எரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளலாம். இது ஒரு சாராரின் தூண்­டு­தலால் அந்த அப்­பா­விப்பெண் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் அவ்­வ­ள­வுதான். உண்­மைகள் ஒருநாள் வெளி­வரும்.

கேள்வி:- நல்­லாட்­சியில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­பவம், புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ?

பதில் :- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நான் கரு­த­மாட்டேன். இந்த தாக்­கு­த­லுக்கு அப்பால் பல இடங்­க­ளிலும் இஸ்­லா­மிய மக்கள், வர்த்­த­கர்கள் கூடிய பாது­காப்பு சோத­னைக்கு முகம் கொடுத்­தனர் இதனால் தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இஸ்­லா­மிய வியா­பார வேலை­க­ளுக்கு தடை ஏற்­பட்­டது என்­ப­தெல்லாம் உண்மை, தற்­போது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தனால் யார் வெற்றி பெற்­றாலும் லாபமே அன்றி நஷ்டம் இல்லை. அதனால் தேர்­தலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது.

கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் எதிர்­பார்த்துக் கோரி க்கை விடுத்­தவை சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு சிலரும் சிலர் புறம்­பா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ்­வ­கையில் விஞ்­ஞா­­பனத்­தி­லுள்­ளவை நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில் :- ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றித்து முன்­வைத்த 13 அம்சக் கோரிக்­கை­களில் ஒரு சிலவற் றையாவது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனைய வேட்பாளரான கோத்தபாய முழுமையாக நிராகரித்துவிட்டார். அந்தவகை யில் சஜித் எல்லாவற்றையும் ஏற்காத போதும் சிலவை ஏற்றுள்ளதை காணமுடிகிறது.

கேள்வி :- முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட சிறிய சிறிய விவகாரங்க ளுக்கு, தீர்வு பெற்றுத் தராதவர்களுக்கு, வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா, வெற்றியீட்ட வழிகோலுவார்களா?

பதில் :- கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை, தமிழ் தேசிய கூட்ட மைப்பு ஏற்கனவே எடுத்த முயற்சிகள் நிலுவை யில் உள்ளன. அது தொடரப்படும். எப்படியும் கல் முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதன் செயற்பாடுகள் தொடரும்.

இருந்தபோதும் இந்த விவகாரம் ஒரு இனம் இரண்டு ஊர் அல்லது பல ஊர் பிரதேசம் சார்ந்த விடயமில்லை, இரு இனம் இரண்டு இனங் கள் வாழும் ஊர்கள் பிரதேசங்கள் என்பது உண்மை. அதனால் ஒரு இனம் வேண்டுகோளை முன்வைக்கும் போது இன்னோர் இனம் எதிர்க் கிறது. இரண்டு இனங்களும் சில விட்டுக்கொடு ப்புகள் புரிந்துணர்வுகள் அடிப்படையில் பேசி இணக்கப்பாட்டு அடிப்படையில் இதற்கான தீர்வை பெறவேண்டுமே அன்றி ஒரு இனம் சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றைய இனம் சார்ந்த அரசியல் தலைவர்களும் முட்டி மோது வதாலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேட்பா ளரை ஆதரிப்பதாலோ பரிகாரம் கிடையாது.

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத் தபாய வெற்றி பெற்றாலும் கல்முனை தமிழ் பிர தேச செயலக விடயம் பேச்சுவார்தைகள் மூலமா கவே தீர்வை பெறலாம் என்பது கசப்பான உண்மை.


நேர்காணல் - பாக்கியராஜா மோகனதாஸ்

https://www.virakesari.lk/article/68887

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.