Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

`வாழ்க்கையைப் புரியவைத்த இரவு; சொற்ப வருமானத்திலும் தாராள உதவி!' - `தன்னம்பிக்கை' மனிதர் ஜோசப்

Featured Replies

'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார்.

ஜோசப்

சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகம், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகம் போன்றவை மாறி மாறி இடம்பிடித்திருக்கும்.

அந்த வரிசையில், '100% டெங்கு கொசுவை ஒழிப்போம்' என்ற வாசகங்களுடன் வீதி வீதியாக வலம்வருகிறார், ஜோசப். வாடகைக்கு எடுத்த கொசு மருத்து இயந்திரத்தைத் தனது சிறிய தோளில் சுமந்துகொண்டு கழிவுநீர் வாய்க்கால்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். சக்தி நகர் என்ற பகுதியில் மருந்து அடித்துவிட்டு, தனது கடையில் அமர்ந்தவரை சந்தித்தோம். “மருந்து தீர்ந்துபோயிடுச்சி சார்.

 

நாளைக்குத்தான் வாங்கணும். இன்னைக்கு வருமானம் அந்த அளவுக்கு இல்லை” என்று பேசத் தொடங்கினார். “நீங்க பேட்டி எடுக்கற அளவுக்கு நான் பெருசா எதுவும் பண்ணிடல சார். என்னால முடிஞ்ச உதவிய என்னை சுத்தியிருக்கிறவங்களுக்கு செய்யறேன். அப்பா அல்போன்ஸ், அம்மா அற்புதம் மேரி. ஏழு பேருல 5-வது பையன் நான். 9-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறல.

ரப்பர் ஸ்டாம்ப் செய்யிற கடைக்கு வேலைக்குப் போயிட்டேன். 2011 வரைக்கும் அந்த வேலைதான். அந்த வருஷம்தான் கண்ணன்னு ஒரு நல்ல மனிதர் மூலமா தனியா ஒரு கடையை நடத்துற வாய்ப்பு கெடச்சுது. மாசம் ஐயாயிரம், எட்டாயிரம்னு வருமானம் வந்துட்டு இருந்துச்சி. இப்போல்லாம் புத்தகங்களுக்கு பைண்டிங் பண்ணுறது குறைஞ்சிட்டதால வருமானமும் குறைஞ்சிடுச்சி. கவருமென்டு பள்ளிக்கூடத்துல படிக்கிற ஏழைப் புள்ளைங்க புத்தகங்களுக்கு நான் பணம் வாங்குறது இல்ல.

ஒருநாள் கடைய முடிச்சிட்டு வீட்டுக்குக் கெளம்பும்போது, கண்ணு தெரியாத பெரியவர் ஒருத்தர் கீழ விழுந்துட்டாரு. அவரைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போதான் நாம வாழுற வாழ்க்கை யாருக்காவது உபயோகமா இருக்கணும்னு எனக்குப் புரிஞ்சுது. மறுநாள், கவருமென்டு ஆஸ்பிட்டல், பஸ் ஸ்டாண்டு பகுதியில இருந்த கண்ணு தெரியாத, நடக்க முடியாம இருந்தவங்களுக்கு கைலி, துண்டு, சாப்பாடுனு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

எனக்கு வரும் கொஞ்ச வருமானத்துக்கு, எல்லா நாளும் இதைச் செய்ய முடியாது. வேலை அதிகமா வரும்போது, அவங்களுக்குத் தேவையானதை வாங்கிட்டுப் போவேன். சக மனிதர்களை நேசிக்கிறதுதான் உண்மையான வாழ்க்கைனு புரிய ஆரம்பிச்சுது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு பல் டாக்டர் உதவியால இலவச பல் மருத்துவமனை முகாம் நடத்தியிருக்கிறேன். வீடு வீடா நானே போய் நோட்டீஸ் கொடுத்து மக்களைத் திரட்டினேன்.

அதேபோல, இலவச கண்சிகிச்சை முகாம் ஒண்ணு நடத்தணும்னு ஆசை. அதுக்கான முயற்சிகளையும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2018 நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தினேன். இப்போது டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிக்கிட்டு இருக்குன்னு பேப்பர்ல படிச்சேன்.

என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். எல்லா இடத்துக்கும் போயி மருந்து அடிக்கிறதுக்கு என் உடம்பு ஒத்துழைக்காது. அதனால, எனக்குப் பக்கத்துல இருக்கிற இடங்கள்ல கொசு மருந்து அடிக்கலாம்னு முடிவு எடுத்து வாடகைக்கு அந்த மெஷினை எடுத்தேன். அதுல மருந்து ஊத்தி நானே வாய்க்கால்ல அடிக்க ஆரம்பிச்சேன். சிலர் அவங்க வீட்டுலயும் அடிக்கச் சொல்லி உரிமையோட கேட்டப்ப சந்தோஷமா இருந்துச்சி. இதுதாங்க வாழ்க்கை.

வாழுற வரைக்கும் நம்மால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யணும்னுதான் என் ஆசை. என்னால வண்டி ஓட்ட முடியாததால, எங்க போனாலும் நடந்தே போகவேண்டியிருக்கு. எனக்குத் தகுந்த மாதிரி வண்டி செய்ய முடியும்னு ஒரு ஷோரூம்ல சொல்லி இருக்காங்க. பணம் வந்தவுடன் வாங்கிடுவேன். அதுக்கப்புறம் நடக்க முடியாதவங்களை ஏத்திக்கிட்டுப் போகலாம்” என்கிறார் உற்சாகமாக.

உடலளவில் உயரம் குறைவாக இருக்கும் ஜோசப் போன்ற உள்ளங்கள், தங்களின் மனித நேயத்தால் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள்.

?ref=external&v=533858707212545

https://www.vikatan.com/news/miscellaneous/story-about-pondicherry-confident-man-joseph

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.