Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை தீர்மானித்தது சிறுபான்மை மக்களின் வாக்குகளா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரின் வாக்குகளில்லாமல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியிருக்க முடியுமா என்று கட்டுரையாளர் சகாதேவராஜா தனது கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தமது கட்டுரையில்,

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித்தேர்தல் முடிந்து நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகி பதவியேற்பும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தநிலையில் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பாணியில் அவர் ஜனாதிபதியானது வெறும் பெரும்பான்மையின வாக்குகளால் மட்டும்தானா? என்ற வாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு விடைகாணும் நோக்கில் ஓரளவாவது இக்கட்டுரை அமையலாம்.

பெரும்பான்மையின வாக்குகளால்தான் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்ற கருத்து சமகாலத்தில் பேசுபொருளாகவுள்ளது. அப்படியானால் சிறுபான்மையினம் அவருக்கு வாக்களிக்கவில்லையா? அல்லது அளிக்கப்பட்ட வாக்குகள் வெற்றிக்கு துணைபோகவில்லையா? என்ற வினாக்கள் கூடவே எழுகின்றன.

நடந்து முடிந்த நாட்டின் 8ஆவது ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ 52.25 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 41.99 வீத வாக்குகளைப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியைத் தழுவியுள்ளார். அவரது தோல்விக்குக் காரணம் உட்கட்சிப்பூசல் மற்றும் கூட்டுச் சேர்ந்த சிறுபான்மையினத் தலைவர்கள் என்றெல்லாம் பேசப்பட்டுவருகிறது.

முழு நாட்டிலே கோட்டாபய ராஜபக்‌ஷ பெற்ற மொத்த வாக்குகள் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255. சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239. அதாவது சுமார் 14 இலட்சம் வாக்குகளால் கோட்டபாய வெற்றிபெற்றுள்ளார். கோட்டபாய வெற்றியடைந்ததற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் காரணமல்ல என்று சொல்லமுடியாது என்பதற்கான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து கூடுதலாக வாழ்கிறார்கள்.

தவிரவும் மலையகம் மற்றும் இதர பகுதிகளிலும் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் அளித்த வாக்கு விபரங்களை தேர்தல் திணைக்களம் வெளியிட்ட உறுதியான புள்ளவிபரங்களோடு பார்ப்போம்.

முதலில் வடக்கு மற்றும் கிழக்கை பார்ப்போம். வடக்கில் சகல தேர்தல் தொகுதிகளிலும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருந்தார். யாழ்.மாவட்டத்தில் மட்டும் அவர் 312,722 வாக்குகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். அங்கு கோட்டபாயவிற்கு ஆக 23,261 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 174,739 வாக்குகளை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார். அங்கு கோட்டபாய 26,105 வாக்குகளையே பெற்றுள்ளார். அதன்படி கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கில் 49 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கிழக்கிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பிரதான வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அவதானிப்போம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் 238,649 வாக்குகளையும், கோட்டாபய 38,460 வாக்குகளையும், அம்பாறை மாவட்டத்தில் சஜித் 259,673 வாக்குகளையும், கோட்டாபய 135,038 வாக்குகளையும் பெற்றுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் சஜித் 166,841 வாக்குகளையும், கோட்டாபய 54,135 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

அதன்படி கிழக்கில் கோட்டாபய ராஜபக்‌ஷ 2 இலட்சத்து 27ஆயிரத்து 653 வாக்குகளைப் பெற்றுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் அம்பாறை மாவட்டமே கோட்டபாயவிற்கு அதிகூடிய 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட அதாவது 1 இலட்சத்து 35 ஆயிரத்து 38 வாக்குகளை அளித்தது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் அம்பாறைத் தொகுதி அதிகூடிய 89 ஆயிரத்து 674 வாக்குகளை அளித்துள்ளது. பொத்துவில் தொகுதியில் 20,116 சம்மாந்துறைத் தொகுதியில் 7,151 கல்முனைத் தொகுதியில் 7,286 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கில் அம்பாறை மற்றும் சேருவில தொகுதிகள் சஜித்தைவிட கோட்டாபய வெற்றி பெற்றுள்ளமை சுட்டிக் காட்டக்கூடியது. இத் தொகுதிகள் இரண்டும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக்கொண்டன என்பதும் பதிவு செய்யப்பட வேண்டும்.

அம்பாறைத் தேர்தல் தொகுதியில் கோட்டாபய ராஜபக்‌ஷ 89,674 வாக்குகளையும், சஜித் 42,242 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதே போன்று சேருவில தொகுதியில் கோட்டாபய 31303 வாக்குகளையும், சஜித் 28205 வாக்குகளையும் பெற்றுள்ளார். தபால் வாக்குகளும் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுக்கு மட்டாக வந்துள்ளதைக் காணலாம்.

மொத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பாக வடக்கில் 49ஆயிரத்து 366 வாக்குகளையும், கிழக்கில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 653 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 2 இலட்சத்து 77ஆயிரத்து 19 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது தவிர மலையகம் இதர பகுதிகளிலுள்ள சிறுபான்மையினர் அளித்த வாக்குகள் அண்ணளவாக சுமார் 1 இலட்சத்திற்கு மேல் எனலாம்.

அதாவது மொத்தமாக 3 இலட்சத்து 77ஆயிரத்து 19 வாக்குகள் புதிய ஜனாதிபதியாகியிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கிடைத்துள்ளது. 4 இலட்சம் என வைத்துக்கொள்ளலாம். இவற்றில் அம்பாறை,சேருவில, திருகோணமலை மற்றும் லாகுகல, பாணம போன்ற இதர சில பகுதிகளில் சிங்கள சகோதரர்களின் வாக்குகள் சுமார் 1 இலட்சத்திற்கு மேல் வரும். எனவே, அதனைக் கழித்து மேலோட்டமாகப் பார்த்தால் சிறுபான்மையினரின் இந்த மூன்று இலட்சம் வாக்குகள் என்பது அவர் பெற்ற 69 இலட்சம் வாக்குகளில் அடங்கும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அப்படியானால் 69 இலட்சம் வாக்குகளின் சதவீதம் 52.25 வீதமானால் சிறுபான்மையினரின் மூன்று இலட்சம் வாக்குகளை கழித்தால் சுமார் 66 இலட்சம் வரும் இந்தநிலையில் மொத்த சதவீதத்தைக் கணித்தால் 50 வீதத்திற்கு குறைவாக அதாவது கிட்டத்தட்ட 49 சதவீதமாக வருமென்பதை அறியலாம்.

கோட்டாபய ராஜபக்‌ஷ சுமார் 3 இலட்சம் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெற்றிருக்காவிட்டால் சுமார் 66 இலட்சம் வாக்குகளை மட்டும் பெற்று அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 49 வீத வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பார்.

அதாவது முதல்சுற்றில் யாரும் வெற்றிபெற்றிருக்க முடியாது. ஆக கோட்டாபயவை முதல் சுற்றிலேயே வெற்றி பெற வைத்து அவரை வெற்றி வாகை சூடவைத்தது தேசமெங்கும் பரவி இருந்து அவருக்கு வாக்களித்த அந்த 3 இலட்சம் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே!

நாட்டின் ஏனைய பகுதிகளைக் கவனிக்காமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மட்டும் பார்த்தாலும் 2 இலட்சம் வாக்குகள். அந்தவகையில் மொத்த சதவீதத்தை உற்றுநோக்கும் போது சுமார் 49.8 வீதமாகத் தான் வரும். அதாவது முதல் தடவையில் வெற்றிபெற்றிருக்க முடியாது.

சிறுபான்மையினங்களின் வாக்குகள் இல்லாவிட்டால் இரண்டாவது விருப்புவாக்கு கணக்கெடுப்பிற்கு செல்லவேண்டி நேரிட்டிருக்கும் எனலாம்.

அப்படி இருக்கையில் எப்படி சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் வென்றதாக கூற முடியுமா என்பது கவனிக்கத்தக்கது. சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமல்ல சஜித்தோடு அணி சேர்ந்த முஸ்லிம் தமிழ் பிரதான கட்சிகளின் கூட்டும் கோட்டாவின் வெற்றியை இலகுவாக்கின என்று அரசியல் நோக்கர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். எனவே நாட்டில் ஜனாதிபதி உருவாக்கத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அலட்சியத்தோடு பார்க்கப்பட முடியாததொன்று என்பதை இவ்வண்ணம் உணரலாம், என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/articles/01/232004?ref=rightsidebar-article

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.