Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌரவப் போர்

Featured Replies

- கார்­வண்ணன்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூத­ர­கத்தில் வீசா உதவி அதி­கா­ரி­யாகப் பணி­யாற்றும் கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக எழுந்த குற்­றச்­சாட்டை, இலங்கை அர­சாங்கம் கையா­ளு­கின்ற விதம் கடு­மை­யான சர்ச்­சை­களை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. அது­கு­றித்து பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவ­னத்­துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்­றி­ருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊட­கங்­க­ளிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்­கி­யது.

இந்தக் குற்­றச்­சாட்டுத் தொடர்­பாக குற்ற விசா­ரணைத் திணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக அர­சாங்கத் தரப்பில் இருந்து தகவல் வெளி­யி­டப்­பட்ட சம­நே­ரத்­தி­லேயே, அவ்­வா­றான சம்­பவம் ஒன்று நடக்­க­வே­யில்லை என்று அர­ச­ த­ரப்பிலிருந்து மறுப்­பு­களும் வெளி­வரத் தொடங்கி விட்­டன.

சுவிஸ் தூத­ரக பணி­யாளர் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்டார், பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்டார் என வெளி­யா­கிய செய்­தி­களை முற்­றி­லு­மாக நிரா­க­ரிப்­ப­திலும், அதனை பொய் என்று நிறு­வு­வ­திலும், அரச இயந்­திரம் முழு­மை­யான கவ­னத்தை செலுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை, சம்­பந்­தப்­பட்ட பெண் பணி­யா­ளரை, நாட்டை விட்டு வெளி­யே­றாமல் தடுத்து, அவரை சுவிஸ் அதி­கா­ரி­களே குற்ற விசா­ரணைத் திணைக்­க­ளத்தில் கொண்டு வந்து நிறுத்­து­கின்ற நிலை­யையும் அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யது.

அதை­ய­டுத்து அவ­ரிடம் நீண்ட தொடர் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு, மன­நல சோத­னைகள், சட்ட மருத்­துவ சோத­னைகள் என்று உள­வியல் ரீதி­யான நெருக்­க­டிகள் கொடுக்­கப்­பட்­டன.

இவற்­றுக்குப் பின்னர், பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் பெண் அதி­காரி, முரண்­பா­டான தக­வல்­களைக் கூறி­யி­ருப்­ப­தா­கவும், அவர் அர­சாங்­கத்­துக்கு கெட்­ட­பெ­யரை ஏற்­ப­டுத்த முயன்­றுள்ளார் என்றும் குற்­றம்­சாட்டி அவரைக் கைது செய்­தி­ருக்­கி­றது குற்ற விசா­ரணைத் திணைக்­களம்.

இந்தக் கைது நட­வ­டிக்­கையும், அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களும் நியா­ய­மான முறை­களில், அர­சியல் தலை­யீ­டு­க­ளின்றி, சுதந்­தி­ர­மாக இடம்­பெ­று­கின்­றன என்று அர­சாங்கம் கூறிக்­கொள்­கி­றது.

கடந்த 16ஆம் திகதி குறித்த அதி­காரி கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர், அன்று காலை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை சுவிஸ் தூதுவர் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார்.

இதன் பின்னர், ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில், குறித்த அதி­காரி தவ­றி­ழைத்­துள்ளார் என்­பதை சுவிஸ் தூதுவர் ஒப்புக் கொண்டு விட்டார் என விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது, 

ஆனால் அன்­றி­ரவே, சுவிஸ் வெளி­ வி­வ­கார திணைக்­க­ளத்­தினால் பேர்னில் இருந்து ஒரு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அந்த அறிக்கை, இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை நிரா­க­ரிக்கும் வகை­யிலும், குறித்த சுவிஸ் தூத­ரகப் பணி­யாளர் நடத்­தப்­படும் விதம் குறித்து அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும் இருந்­தது.

உடல் நலம் குன்­றி­யி­ருந்த நிலை­யிலும், பாதிக்­கப்­பட்­ட­வ­ரிடம் மூன்று நாட்கள் 30 மணி நேரம் தொடர்ச்­சி­யாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது குறித்து அதில் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டி­ருந்­தது, 

ஆனால், அர­சாங்­கமோ அவ­ருக்கு எந்த உடல் நலக் குறைவும் இல்லை, தெளி­வான மன­நி­லை­யுடன் தான் இருக்­கிறார் என்று நிரூ­பிக்க அடுத்­த­டுத்து உள­நல சோதனை என்ற பெயரில், உள­வியல் ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யது.

அவ­ரிடம் முழு­மை­யான தக­வல்­களைப் பெற முடி­ய­வில்லை. முதல் நாள் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது இரண்டு முறை மயங்கி வீழ்ந்தார் என்று குற்ற விசா­ரணைத் திணைக்­க­ளத்­தினர் நீதி­மன்­றத்தில் கூட கூறி­யி­ருந்­தனர்.

அதை­விட, விசா­ர­ணைகள் நடக்கும் போதே, குறித்த பணி­யாளர் பொய் சொல்­கிறார் என்றும் அவ்­வா­றான சம்­ப­வமே நடக்­க­வில்லை என்றும், தவறை அவர் ஒப்­புக்­கொண்டு விட்டார் என்றும், அர­சாங்கத் தரப்பில் உள்­ள­வர்கள் தக­வல்­களை வெளி­யிட்டு வரு­வது குறித்தும் சுவிஸ் வெளி­வி­வ­கார திணைக்­களம் அதி­ருப்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

விசா­ர­ணைகள் தேசிய – சர்­வ­தேச சட்ட நடை­மு­றை­க­ளுக்கு அமைய இடம்­பெற வேண்டும் என்­ப­தையும், தூத­ரக பணி­யா­ளரின் சிறப்­பு­ரி­மையை மதிக்க வேண்டும் என்றும் சுவிஸ் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

அர­சி­ய­ல­மைப்­புக்கு அமைய செயற்­படும் அரசு என்ற இலங்­கையின் நற்­பெ­ய­ருக்கு பாதிப்பு ஏற்­ப­டாமல் பாது­காத்துக் கொள்ள வேண்டும் என்ற எச்­ச­ரிக்­கை­யையும் சுவிஸ் அறிக்­கையில் காண­மு­டிந்­தது.

ஆனால் அர­சாங்­கமோ இது ஒரு கட்­டுக்­கதை, என்றும் திட்­ட­மிட்டு சிலரின் நிர்ப்­பந்­தத்­தினால் குறித்த பணி­யாளர் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்றும் கூறிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, இந்தச் சம்­ப­வத்­தினால் தானே பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார். 

யார் இதன் பின்­ன­ணியில் இருந்­தார்கள் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும், அர­சாங்கத் தரப்பில் கருத்து வெளி­யி­டு­ப­வர்கள் கூறு­கின்­றனர்.

முன்­ன­தாக, சுவிஸ் தூத­ரகம் நாடகம் நடத்­தி­யி­ருப்­ப­தாக அமைச்­சர்கள் பலரும் கூறி­யி­ருந்­தனர்- குற்­றம் ­சாட்­டி­யி­ருந்­தனர். 

எதற்­காக சுவிஸ் தூத­ரகம் இந்த நாடகம் ஆடி­யது என்று கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்டும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்­புக்­வெ­லவே கூறி­யி­ருந்தார்.

வேறு சில அமைச்­சர்கள், இது அமெ­ரிக்­காவின் வேலை என்று குற்­றம்­சாட்­டினர். இன்னும் சிலர், ஐக்­கிய தேசியக் கட்­சியே இந்த நாட­கத்தை நடத்­தி­யி­ருக்­கி­றது என்­றனர்.

அர­சாங்­கத்தின் பெயரை சர்­வ­தேச அளவில் கெடுக்கும் முயற்­சிகள் நடக்­கி­றது, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் மாட்டி விட சதித் திட்டம் தீட்­டப்­பட்­டி­ருக்­கி­றது என்று கூறி­னார்கள்.

திஸ்ஸ விதா­ரண போன்­ற­வர்கள் ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு அடங்கிப் போக மறப்­பதால் தான் இத்­த­கைய நெருக்­க­டிகள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. இன்னும் பல சூழ்ச்­சிகள் நடக்கும், கவ­ன­மாக கடந்து செல்ல வேண்டும் என்று எச்­ச­ரிக்­கி­றார்கள்.

இவ்­வா­றாக சுவிஸ் மீதும், அமெ­ரிக்கா மீதும், ஐ.தே.க. மீதும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்ள போதும் அந்த தரப்­புகள் அனைத்தும் அதனை நிரா­க­ரித்­துள்­ளன.

சுவிஸ் இவ்­வா­றான ஒரு சம்­ப­வத்தை சோடிக்க வேண்­டிய வெளிப்­ப­டை­யான எந்த தேவையும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அமெ­ரிக்கா இவ்­வா­றான ஒரு காரி­யத்தில் இறங்­க­வில்லை என்­கி­றது, ஐ.தே.க. தம்­மீது வீண் பழி போடப்­ப­டு­கி­றது என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது,

எவ்­வா­றா­யினும், இந்த விவ­கா­ரத்­தினால், சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்தின் பெயர் கெட்டுப் போயி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை. 

இந்தச் சம்­ப­வத்தில் இருந்து வெளியே வரு­வ­தற்கு அர­சாங்­கமும். சுவிஸும் முயற்­சித்­தாலும், அது இப்­போ­தைக்குச் சாத்­தி­ய­மாகும் போலத் தெரி­ய­வில்லை.

ஏனென்றால், அர­சாங்கத் தரப்பில் உள்­ள­வர்கள் சுவிஸ் அர­சாங்­கமும் இணைந்தே இந்தக் குற்­றச்­சாட்டை வைத்­த­தாக, சதியில் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர்.

பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து, இலங்கை அரசை நெருக்­க­டிக்­குள்­ளாக்­கி­யதால், சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்­கப்­பட்­டுள்ளார் என்ற வதந்­தியும் பரப்­பப்­பட்­டது.

அதற்குப் பின்னர், தூத­ரகப் பணி­யாளர் பொய்­யான குற்­றச்­சாட்டை சுமத்­தி­யதை சுவிஸ் ஏற்­றுக்­கொண்டு விட்­டது என்­பது போன்ற மாயையை உரு­வாக்­கவும் முயற்­சிக்­கப்­பட்­டது,

ஆனால், சுவிஸ் அர­சாங்­கமோ, தமது தூத­ரக அதி­கா­ரியின் மீது இன்­னமும் நம்­பிக்கை கொண்­டுள்­ளது என்­பதை சுவிஸ் வெளி­வி­வ­காரத் திணைக்­க­ளத்தின் அறிக்­கை­களில் இருந்து புரிந்து கொள்ள முடி­கி­றது. அவரை பாது­காப்­ப­திலும் உறு­தி­யா­கவே இருக்­கி­றது, இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

எது எவ்­வா­றா­யினும், சுவி­ஸுக்கும் சரி, இலங்கை அர­சாங்­கத்­துக்கும் சரி இது ஒரு கௌரவப் பிரச்­சி­னை­யா­கவே மாறி­யி­ருக்­கி­றது. இந்த இரண்டு தரப்­பு­களில் ஏதோ ஒரு தரப்பின் நிலைப்­பாடு தான் சரி­யா­னது. யாரோ ஒருவர் முன்­வைக்கும் வாதமும், சாட்­சி­யங்­களும் பொய்­யா­னது. அது யார், என்­பது தான் சிக்­க­லான கேள்வி.

சுவிஸ் அர­சாங்கம் தமது பணி­யா­ளரின் குற்­றச்­சாட்டு உண்மை என்று முழு­மை­யாக நம்­பு­வதால், அவரைப் பாது­காக்க வேண்டும் என்று கரு­து­வதால்- தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றது.

இல்­லா­விட்டால் எதிர்­கா­லத்தில் சுவிஸ் மாத்­தி­ர­மன்றி எந்த நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் நம்ப முடி­யாத நிலைக்கு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தள்­ளப்­பட்டு விடு­வார்கள்.

அதே­வேளை, அர­சாங்­கமும் இந்த விவ­கா­ரத்தில் தமது பக்­கத்தில் தவறு இருந்­தாலும் அதனை ஒப்­புக்­கொள்­ளாது. ஏனென்றால்  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தொடக்கம் அனை­வரும் இதனை பொய் என்றும் சோடிக்­கப்­பட்ட கதை என்றும் கூறி விட்­டார்கள். 

திடீ­ரென அந்த முடிவை மாற்றிக் கொள்ள முடி­யாது. அவ்­வாறு மாற்றிக் கொண்டால் அர­சாங்­கத்­துக்கு கெட்ட பெயர் ஏற்­ப­டு­வது மாத்­தி­ரமே அதற்­குள்ள பிரச்­சி­னை­யல்ல.

இவ்­வா­றான ஒரு பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு வந்த போது, அதனை தீர விசா­ரிக்­காமல் அர­சாங்கம் மறைக்க முற்­பட்­டது, என்ற குற்­றச்­சாட்டு எழும்.

தூத­ரக அதி­காரி ஒரு­வ­ருக்கே இந்த நிலை என்றால் சாதா­ரண மக்­களின் கதி என்­ன­வாக இருக்கும் என்ற கேள்­வியும் எழும்.

இவ்­வா­றான நிலை­மை­களை தவிர்க்க, அர­சாங்கம் தான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் என்ற பிடி­வா­தத்தில் இருப்பதை விட வழியில்லை.

அதேவேளை, அமைச்சர்கள் பலரும் சுவிஸ் மீது குற்றச்சாட்டுகளை வீசினாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சற்று அடக்கி வாசிக்கவே முனைந்திருக்கிறார்.

குற்றச்சாட்டு வந்த போது அதனை அரசாங்கத்திடம் கொண்டு வந்தது சுவிஸ் தூதரகத்தின் சரியான நடவடிக்கையே என்றும் தமது தூதரக அதிகாரியின் நலனில் அவர்கள் அக்கறை செலுத்தியது தவறில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பில்லை என்றும், வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி கூறியிருக்கிறார். 

இது சுவிஸுடன் எந்த இராஜதந்திர முறுகலும் இல்லை என்று காண்பிக்கின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உள்ளுக்குள் அவ்வாறான நிலை இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

இத்தகைய நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை வெளிப்படுமா – இரண்டு நாடுகளும் இந்த சிக்கலை எவ்வாறு தீர்த்துக் கொள்ளப் போகின்றன என்ற கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதில் கிடைக்கும் போலத் தெரியவில்லை.

https://www.virakesari.lk/article/71724

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.