Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம்

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்காக வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் காலை 7 மணி முதல் பேருந்து சேவை ஆரம்பமாகியது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அந்தந்த பேருந்து சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/காணாமலாக்கப்பட்டவர்களு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் இன்று காலை 10 மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டத்துக்கு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியுமே தவிர அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 16.12.2019 அன்று தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறீலங்கா இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி கோரியும் மேற்கொள்ளப்படும் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எமது தமிழ் மக்கள் கூட்டணி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தனது கடப்பாட்டில் இருந்து வழுவாது நம்பகரமான விசாரணைகளை சட்டப்படி முன்னெடுக்க முன்வர வேண்டும். குறித்த கண்டனக் கூட்டத்திற்கு எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

போரில் இறந்தவர்கள் வேறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேறு. ஒருவர் கைது செய்யப்படால் அவருக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டிய கடப்பாடு கைது செய்தவருக்கு உண்டு. ஒருவர் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு என்ன நடந்தது என்று கண்டறிந்து கூறும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு.

ஒருவர் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு அவரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று அரச படைகளோ அரசாங்கமோ கூறாவிட்டால் அது மாபெரும் கண்டிக்கத்தக்க குற்றமாகும். அந்தக் குற்றத்தை செய்த அரச படைகளோ, அரசாங்கமோ தமக்குத் தெரியாதென்று கூறித் தப்பித்துவிட முடியாது.

சில காலத்திற்கு முன்னர் சுமார் 20 வருடங்கள் கழிந்து அரச படையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் தெற்கிலிருந்து வடமாகாணம் வந்து சேர்ந்தார். இவ்வாறு எங்கெங்கே யார் யார் வெளி உலகத்துடன் தொடர்பின்றி வைத்திருக்கப்பட்டுள்ளார்களோ நாம் அறியோம்.ஆகவே நம்பத்தகுந்த விசாரணைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. விசாரணை இன்றி மரண சான்றிதழ்களை வழங்குவது பிழையான நடைமுறையாகும்.

ஒவ்வொரு காரணம் தெரியாத இறப்புக்கும் மரண விசாரணை செய்ய வேண்டியது சட்டமாகும். அவ்வாறான விசாரணையின் பின்னரே காரணம் அறிந்தபின் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கலாம்.குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் காணாமல் போனவர் பற்றி அவர்களின் உறவினர்கள் அறியாது தடுக்கப்பார்ப்பது மேலும் ஒரு குற்றமே. அரசாங்கம் தனது கடப்பாட்டை நடைமுறைப்படுத்தாது எம் மக்களை நிவாரணம் கொடுத்து வாங்கப் பார்ப்பது கேவலமான ஒரு செயலாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/கிளிநொச்சியில்-இன்று-முன/

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published by T Yuwaraj on 2019-12-30 14:38:26

 

 

கிளிநொச்சியில் இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

_MG_9754.JPG

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

_MG_9774.JPG

புதிய ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடில்லை என அண்மையில்  தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரியும், இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

_MG_9782.JPG

எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?, ஜனாதிபதியே தாங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகளை கையளித்தோம் அவர்கள் எங்கே? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து. இரவோடு இரவாக ஓ.எம்.பி அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப் போகிறது? கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே, கையளிக்கப்பட்ட சிறுவர்களை எங்கே மறைத்து வைத்திருக்கின்றாய்? சிறுவர் உரிமை சமவாயத்தில் இலங்கைக்கு அங்கீகாரமா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

_MG_9830.JPG

இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் செ.கஜேந்திரன், வடக்கு மாசகாண முன்னாள் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன்,பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள்  உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டனர்.  ,  

https://www.virakesari.lk/article/72111

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

7-A4-F7-A2-C-5-DFC-481-D-9069-B023-EDFB4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.