Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வைத் தந்துவிடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

0-BE251-E4-428-F-45-F1-AEF8-D2-BEB9-BE02

Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த  ஒரு துருக்கியப் பெண்

தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய  புகைப்படத்தைப் பார்த்துஎன்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது”  என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

 Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான  Ali Khalil திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள்

வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த  Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இருந்து நிறையவே வாங்கியிருக்கிறேன். "கொன்று விடுவேன்" என்று அச்சுறுத்துவான். ஏதேனும் அவனுக்குப் பிடிக்காத விசயங்கள் செய்தால் "யேர்மனியில் இருந்து துருக்கிக்கு திருப்பி அனுப்பி விடுவேன்" என்ற பயமுறுத்துவான்பயத்துடன்தான் எனது ஒவ்வொரு நாளும்  கழியும்என்கிறாள்.

ஒரு குடும்பத் தகராறு காரணமாக தனது மைத்துனியை தாக்கியதில் Ali மூன்று வருடங்கள் யேர்மன் சிறையில் இருந்திருக்கிறான் . விடுதலையாகி அவன் வந்த போது அவனுடனேயே Zeynep   வாழ்ந்திருக்கிறாள். அங்கும் ஒரு முடிவு இருந்தது. இதற்குமேல் முடியாது என்ற நிலை வந்த போது 2019 செப்ரெம்பர் முதல்  Aliஐப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் வேறு ஒரு வீட்டில் வாழத் தொடங்கினாள் Zeynep. 

வழக்கு நீதிமன்றம் வந்தது. ஒவ்வொரு இரண்டாவது வாரத்திலும் வார இறுதியில் Aliயுடன்  அவனது ஐந்து குழந்தைகளும் இருக்கலாம் என நீதிமன்றம் அனுமதி கொடுத்து அவர்களது வழக்கை முடித்து வைத்தது.

கடந்த வருடம் நவம்பரில் ஒரு வாரஇறுதியில் தங்கள் தந்தையுடன் இருப்பதற்காக Zeynep தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தாள். அடுத்த வாரம் திங்கட்கிழமை பிள்ளைகளை Ali அவளிடம் கொண்டு வந்து ஒப்படைத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக Ali,  Zeynep க்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தான். அந்தப் புகைப்படத்தில் Ali தனது ஐந்து பிள்ளைகளுடன் விமான நிலையத்தில் நின்றிருந்தான். Zeynepக்கு Ali ஒரு செய்தியையும் புகைப்படத்துடன் சேர்த்து  அனுப்பியிருந்தான்இந்த விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடு. இல்லையென்றால் உன்னைக் கொன்று  விடுவேன்என்பதுதான் அந்தச் செய்தி.

யேர்மனியில் இருந்தாலும் கொன்று விடுவேன் என்கிறான். துருக்கிக்குப் போனாலும் அதுதான் நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட Zeynep  டிசம்பரில் காவல்துறையை நாடினாள்.

துருக்கிய பிறப்புரிமையை அவளும் அவளது  பிள்ளைகளும்  வைத்திருந்தாலும் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயின் உரிமைக்கான சட்ட நடவடிக்கைகளை நாம் மேற் கொள்வோம் என காவல்துறை அவளுக்கு ஆறுதல் சொன்னது.

இந்த நிலையில்தான் புதிதாக ஒரு புகைப்படத்தை Ali துருக்கியில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறான். நான்கு வயதில் இருந்து பதினாறு வயதில் இருக்கும் அவனது ஐந்து பிள்ளைகளும் கையில் துப்பாக்கிகளைப் பிடித்த வண்ணம் அந்தப் புகைப்படத்தில் இருந்தார்கள். இம்முறையும் புகைப்படத்துடன் Ali ஒரு செய்தி Zeynepக்கு அனுப்பியிருக்கிறான். “எனது நான்கு பிள்ளைகளும் என்னுடன் இருக்கவே விரும்புகிறார்கள்அவர்கள் தங்களின் தாயுடன் வாழ விரும்பவில்லை. அவர்கள் துருக்கியில் புது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் Zeynep செய்ய வேண்டியது ஒன்றுதான். அது என்னையும் என் பிள்ளைகளையும் நிம்மதியாக வாழ விடுவதுதான்

அப்படியானால் Zeynepஇன் நிம்மதியான வாழ்க்கை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.