Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

supreme-court-india-720x424.jpg

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சட்டபூர்வமானது எனவும் இதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பெண் வழக்கறிஞர் புனீத் கவுர் தண்டா என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஒரு மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியானது எனவும் சட்டப்பூர்வமானது என்றும் அறிவித்து, அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

அரசியல் கட்சிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையைத் தூண்டுகின்றன. அந்தக் கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தேர்தல் ஆணையகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

ஊடகங்களும், நாளேடுகளும் கூட இந்த சட்டம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புகின்றன. அந்த ஊடகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம், நடைமுறைக்க வந்தால் அவர்கள் நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகள் தவறான தகவலைப் பரப்பி வன்முறையை தூண்டிவிடுகின்றன. இது தேசத்துக்கு அவப்பெயரையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே, குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல, எந்த குடிமகனுக்கும் எதிரானது அல்ல என்று அறிவிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதி பி.ஆர்.காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், “இந்த மனு எனக்கு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியானதென அறிவியுங்கள் என்று கோரி தாக்கல் செய்த முதல் மனு இதுவாகத்தான் இருக்கும். தேசம் தற்போது கடினமான சூழலில் உள்ளது. அமைதியை நிலைநாட்டுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற மனுக்கள் அதற்கு உதவாது.

நீதிமன்றத்தின் பணி என்பது, ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதுதான். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைத் தீர்த்து வைக்கலாம். ஆனால் இயற்றப்பட்ட ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சரியானது, சட்டப்பூர்வமானது என்று அறிவிக்க இயலாது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு ஏற்க முடியாது. வழக்கம் போல் பட்டியலிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி 60இற்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

http://athavannews.com/குடியுரிமைத்-திருத்தச்-ச/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.