Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவமயப்படுத்தும் தந்திரோபாயத்தை முன்னெடுக்கின்றது கோத்தாபய அரசாங்கம் - சர்வதேச அமைப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை இராணுமயப்படுத்தும் நடவடிக்கையில் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் தலைமையிலான புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச அமைப்புகள் தன்னை  விமர்சிப்பவர்களையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் இலக்குவைத்து இலங்கை அரசாங்கம் அச்சம் தரும் ஒடுக்குமுறையை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச நீதிமற்றும் உண்மைக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியனவே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுள்ள 69 சம்பவங்களை பதிவு செய்துள்ள இந்த அமைப்புகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் சட்டத்தரணிகள் வழக்குதாக்கல் செய்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் அச்சுறுத்தல் மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்கள் சிலவேளைகளில் மிக மோசமானவையாக காணப்பட்டதால் சிலர் இலங்கையை விட்டு வெளியேவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி தனது முன்னைய  படைத்தரப்பு சகாக்கள் பலரை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளதன் மூலம் தனது ஆதிக்கத்தை எப்படி விரிவுபடுத்தியுள்ளார் அதிகளவிற்கு காவல்துறை மற்றும் புலனாய்வு பணிகளை இராணுவமயப்படுத்தியுள்ளர் எனவும் இந்த அறிக்கை விபரித்துள்ளது.

yasmin_sooka.jpg

மோசடி உட்பட கடந்த கால குற்றங்களை விசாரணை செய்தவர்கள் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

பொறுப்புக்கூறலிற்கான எந்த நடவடிக்கையையும் நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உதவிகள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படாமலிருப்பதை சர்வதேச சமூகம் உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/73162

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.