Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை திரேசாவின் அன்பு மொழிகள்

Featured Replies

01. தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். தனிமையாகவே செய்யுங்கள், தனி மனிதனாக தனிமனிதனுக்கு செய்யத் தொடங்குங்கள்.

02. கிறீஸ்துவை அறிதல் என்பது பிரசங்கம் வைப்பதல்ல வாழ்ந்து காட்டுவது.

03. நம்மிடமும் குற்றம் குறைகள் இருப்பதைப் பார்க்க மறுப்பதுதான் பாவங்களில் எல்லாம் மகாபாவம்.

04. கிறிஸ்துவின் சமயம் அன்பு அன்பைப் பரப்புவதே கிறீத்தவம்.

05. கடவுளுக்கு விருப்பமான செயலைச் செய்ய வேண்டுமா உங்கள் குடும்பத்தையும் அருகில் இருப்பவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

06. தொழு நோயும், கசரோகமும் நோயல்ல கவனிக்க ஆளில்லாமையே பெரிய நோயாகும்.

07. தோல்விகள் என்றால் இறைவன் தருகிற முத்தங்கள்.

08. சந்தோசம் ஒரு தொற்று நோய் ஏழைகளுக்கு சேவை செய்யும்போது சந்தோசத்துடன் புறப்படுங்கள்.

09. துன்பத்தை ஒன்றாகச் சேர்த்து சுமந்தால், சகித்துக் கொண்டால் துன்பமும் இன்பமாகும்.

10. அன்பில்லாமையே உலகத்தின் பெரிய தீமை.

11. சந்தோசம் புன்னகையில் தொடங்குகிறது ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது யாரையாவது பார்த்துப் புன்னகையுங்கள்.

12. நாம் எதையும் சாதித்துவிடுவதில்லை புகழ் இறைவனுக்கே திருப்பப்பட வேண்டும்.

13. இன்றைய உலகம் துன்பப்படுகிறது, தலை கீழாகப் புரண்டு கொண்டிருக்கிறது ஏன் தெரியுமா ? நமது வீடுகளில் குடும்பங்களில் அன்பு குறைவாகவே உள்ளதுதான் அதற்குக் காரணம்.

14. பல்கலைக் கழகங்கள் எனக்கு பட்டங்களைத் தருகின்றன. இவற்றை ஏற்பதா விடுவதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றால் எனக்கு எதுவும் இல்லை.

15. நீ உற்சாகமின்றி இருக்கிறாயா? இது பெருமைக்கு எடுத்துக்காட்டாகிறது. ஏனென்றால் நீ உன்னில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கிறாய்.

16. அன்பும் அக்கறையும்தான் உலகில் சமாதானத்தைக் கொண்டு வரும்.

17. இறைவன் முன்பு நாம் அனைவரும் இல்லாதவர்கள் தான்.

18. நாம் ஏழைகள் என்பதில் பெருமை கொள்கிறோம். வாங்க விரும்பினால் மலிவான பொருட்களையே வாங்குகிறோம்.

19. இரண்டு மனிதர்களை ஒரேமாதிரி நேசிக்க முடியாது. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் இறைவனை நேசித்தால் எல்லாரையும் நம்மால் நேசிக்க முடியும்.

20. ஏழ்மை கற்றறிவதல்ல ஏழ்மையில் வாழ்ந்துதான் அதை அனுபவிக்க வேண்டும்.

21. இயேசுவை எங்கேயும் தேடாதீர்கள் அவர் அங்கே இல்லை இதோ உங்களுக்குள் இருக்கிறார்.

22. நன்றாக விளையாடுகிறாயா ? நன்றாகத் தூங்குகிறாயா? நன்றாகச் சாப்பிடுகிறாயா? இவையும் பணிகள்தான். இறைவனுக்கு எதுவுமே அற்பமானதல்ல.

23. தொழு நோயாளிகளை குளிப்பாட்டுவதை விட சிரமமானது பத்திரிகையாளரை சந்திப்பது.

24. மாபெரும் பரிசு அன்பு என்பதை இயேசு நிரூபித்தார். துன்புற்று சிலுவையில் மரித்ததால் பாவத்தின் விலையையும் கொடுத்துத் தீர்த்தார்.

25. செய்வதையே திரும்பத்திரும்ப செய்வதால் எனக்கு சோர்வு ஏற்படாது காப்பாய் இறைவா.

26. பரபரப்பிலும் நாரசாரமான ஓசையிலும் கடவுளைக் காண முடியாது கடவுள் அமைதியின் நண்பன்.

27. அன்பில்லாமையே உலகில் மிகப்பெரிய தீமை.

28. பொருட்கள் வீணாவதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் வருகிறது.

29. விளம்பரமா எனக்கு வேண்டாம் அனைத்தும் கடவுளின் பாணியிலேயே செய்யப்படட்டும்.

30. எல்லாவற்றிலும் வெற்றிபெற கடவுள் என்னை அழைக்கவில்லை எல்லாவற்றிலுமே உண்மையாக நடந்துகொள்ளவே அழைத்துள்ளார்

நன்றி:அலைகள்

  • தொடங்கியவர்

அன்னை தெரசாவின் பணி

வாழ்க்கை ஒவ்வொரு மனிதனையும் தனக்குள்ளேயும் வெளியேயும் இரண்டு பாகமாகப் பிரிக்கிறது. ஒன்று வயிற்றுக்கான வாழ்வு, மற்றது மனசுக்கான வாழ்வு. மனம் சார்ந்த வாழ்வு மனிதனின் சிந்தனைகளை,கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் வானளாவ விரிக்கிறது.

சமூகத்தின் அந்தஸ்து, தனிப்பட்ட ரசனைகளின் நீள அகலம் இவையெல்லாம் மனம் சார்ந்த வாழ்வின் எதிர்பார்ப்புகளாக விரிகின்றன. வயிறு சார்ந்த வாழ்வுக்கு இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள் எல்லாம் ஒன்றே. உணவு. உயிரை உள்ளுக்குள் பிடித்து வைப்பதற்காகவும், பாதத்தை அடுத்த அடிக்கு எடுத்து வைப்பதற்காகவும் உடல் தேடும் இலட்சியபீடம் உணவு.

இதுவே அடிப்படை. பட்டினியின் தொட்டிலில் கிடந்துகொண்டே யாரும் ரசனைச் சமையல்களைப் பரிமாறுதல் சாத்தியமில்லை. அடுத்தசுவாசத்துக்கான காற்றை எந்தக் கீழ்திசைத் தென்றல் கொண்டு வரும் என்று அறியாத நுரையீரல்கள், மூச்சு முட்டிக் கொண்டே எத்தனை நேரம் தான் சிற்பம் கொத்த முடியும் ?

சமுதாயத்தில் பாதிபேர் வளர்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டிருக்க, மீதி பேர் சாலையோரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும் கிழிந்து போனவற்றை மட்டுமே சொந்தமாய்க் கொண்டு வயிற்றுக்கான கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கவனித்துச் செல்ல ஆட்கள்இல்லை. அனாதைகள், முதியோர்கள், நோயாளிகள் எல்லாம் மனுக்குலத்தின் அழுக்குகளாக, சமுதாயத்தின் தேவையற்ற முதுகுச் சுமைகளாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.