Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மோடியின் கூற்றுக்கு தமிழ்த் தலைவர்கள் அபிப்பிராயம்

Featured Replies

sde.jpg?itok=2kyNH4mj

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்தியாவில் வைத்து இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

"இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் இலங்கைத் தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்து வந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் .

"இந்திய_ இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காகவாகும். ஆனால் இன்று இந்திய_ இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் நலன் சார்ந்த பிரச்சனையில் ஒரு முக்கிய புள்ளி. அதை சரியாக விளங்கிக் கொண்டு இனியாவது இந்தியா ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுத்து தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்று அதற்கு முழுமையான அங்கீகாரம் கொடுத்து இந்தியாவின் நலன்களை அதனூடாக இலங்கை தீவில் பேணுவதற்கு முன்வர வேண்டும்" என்று கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார் .

"தொடர்ந்தும் 13ம் திருத்தத்தை இந்தியா வலியுறுத்துவதில் பயன் இல்லை.ஏனெனில் தமிழ் மக்கள் கூட 13ம் திருத்தத்தை நிராகரித்துதான் வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக சமஷ்டி தீர்வு மட்டும் தான் பலன் தரும் என்று கருதி வந்திருக்கிறார்கள். இந்திய_ இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் ஒரு ஒற்றையாட்சிக்குரிய அரசியலமைப்பு. ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குப் பலன் தராது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அங்குள்ள பிற தேசிய இனங்களையும், தேசங்களையும் முழுமையாக அரவணைத்து ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அடையாளத்தை பேணும் நோக்கத்தோடு 'இந்தியன்' என்ற கருத்துருவாக்கத்தை செய்துள்ளனர். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"இலங்கைப் பிரச்சினை இன்னும் தீரவில்லை என இந்தியப் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் போன்றோர் அடிக்கடி சுட்டிக் காட்டி வருகின்றமை வரவேற்கத்தக்கது" என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

"இந்திய பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்கள். தமிழ் மக்கள் மிக நீண்ட ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

பல இலட்சக்கணக்கான உயிர்களை அதற்கு விலையாக கொடுத்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் இந்த மண்ணில் சிங்கள மக்களுக்கு சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்" என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் கூட்டுறவு சமஷ்டி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என உரையாற்றியிருந்தார். அந்த அடிப்படையில் கூட்டுறவு சமஷ்டியை அமுல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களுடைய எதிர்பார்ப்பு" என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

"தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய அரசு இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும்" என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைத் தமிழருக்கான வகிபாகம் என்ன என்பதை வரையறுத்து வெளிப்படுத்த வேண்டிய காலம் நெருங்கி உள்ளது.

தன்னுடைய பூகோள நலன் சார்ந்த விடயத்தை மட்டும் முன்னெடுக்காது இந்தியா இலங்கைத் தமிழர்களுடைய உண்மையான உரிமைகள் தொடர்பாக வெளிப்படையாக தமிழர் தரப்புடன் பேச வேண்டிய காலம் நெருங்கி இருக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(BBC)

http://www.thinakaran.lk/2020/02/11/கட்டுரைகள்/48154/பிரதமர்-மோடியின்-கூற்றுக்கு-தமிழ்த்-தலைவர்கள்-அபிப்பிராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.