Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன்.

Featured Replies

கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன்.

இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் திட்டத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த மே 1 ஆம் நாள் பொதுமக்களின் விவாதத்துக்காக வெளியிடப்பட்ட இந்த தீர்வுத் திட்டமானது மே 14 ஆம் நாள் சுதந்திரக் கட்சியின் நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒற்றையாட்சியின் கீழான தீர்வுத் திட்டத்தை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சுதந்திரக் கட்சி அனுப்பியது. மகிந்தவின் சிந்தனையான, பிளவுபடாத நாடு, தென்னிலங்கையின் ஒருமித்த கருத்துருவாக்கம் மற்றும் கௌரவமான நீதியின் அடிப்படையில் இத்தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தீர்வுத் திட்டமானது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிக்கும்

மாகாணங்களை ஒழித்துக் கட்டி மாவட்ட சபைகளினூடே அதிகாரப் பகிர்வு

பிரதேச மற்றும் கிராம சபைகளை மாநகரம் மற்றும் கிராம நிலைகளில் உருவாக்கல்

ஆகியவற்றைக் கொண்டது.

சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்ற சுதந்திரக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. அதிகாரப் பகிர்வுக்கான இறுதித் திட்டமானது சுதந்திரக் கட்சியின் திட்டத்தையொத்த நிலையில் இருக்கக்கூடும்.

சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திட்டமானது இனப்பிரச்சனையின் மூன்று முக்கிய அடிப்படை காரணிகளான

- தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தன்னாட்சி

- வடக்கு - கிழக்கு இணைப்பு

- சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழிக்கு தகுதி நிலை

ஆகியவற்றை புறக்கணித்துள்ளது.

இந்த அடிப்படையான உண்மைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி புரிந்து கொள்ளத் தவறியது எதிர்பாராதது.

சுதந்திரக் கட்சி முன்வைத்த தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கட்சிகள் மற்றும் கூட்டணிக்கான ஆதரவாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே எதிர்த்துள்ளனர்.

டோக்கியோ உதவி வழங்குநர்களான ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவையும் தங்களது கவலையை வெளிப்படையாக அல்லது தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளன. சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டமானது ஒரு கூட்டமைப்பு எனும் கட்டமைப்பில் தீர்வு காணலாம் என இருதரப்பும் ஒப்புக்கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கும் தற்போதைய அமைதி முயற்சியின் ஆணி வேரை அது அறுத்திருக்கிறது.

எதிர்வரும் பேச்சுக்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்து இது உணரத்தவறிவிட்டது. இதனையே சிங்கள புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் எதிரொலிக்கின்றனர்.

மறுபுறம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டத்தை ஒரு மென்மையான வடிவமாக பேரினவாதிகள் கருதுகின்றனர். ஒற்றையாட்சி அரசாங்கக் கட்டமைப்பு என்பது அழுத்தமாக வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதிநிதி ரிச்சர்ட் பௌச்சர்,

எனது பயணத்தின் போது அதிகாரப் பகிர்வு தொடர்பான ஆலோசனைக்குத் தான் பெருமளவான நேரத்தைச் செலவிட்டேன். தென்னிலங்கைத் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டமானது தமிழ் மக்களின் கௌரவம், இந்தத் தீவில் அவர்களுக்கான பிரதேசம், இந்தச் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவதாக அமைகின்றபோதுதான் அமைதிப் பேச்சுக்களுக்கான அடிப்படை உருவாகும் என்றார்.

அரசியல் முடிவுகளிலிருந்து விலகி இராணுவம் சார் கருத்துரு, 2006 ஆம் ஆண்டின் இராணுவ வெற்றி என மகிந்தவின் செயற்திட்டத்தையே சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டமானது வெளிப்படுத்துகிறது. மகிந்தவின் செயற்திட்டம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஏனெனில் இந்த அடிப்படையில்தான் மக்கள் அவருக்கு வாக்களித்து அதிகாரத்தை கையளித்தனர்.

ஆனால் நோர்வேயின் அனுசரணை செயற்பாட்டைக் குறைத்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை ஓரம் கட்டும் வகையில் இது உள்ளது. மிக எளிதாகக் கூறினால் ஒப்பனைக்காக சிறிலங்கா அரசாங்கம் அமைதி குறித்துப் பேசினாலும் அமைதி முயற்சிகள் முடிவடைகின்றன. மனித உரிமை விவகாரம், படையணிகளில் சிறார் சேர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு விடயத்தில் மூடி மறைக்கும் போக்கு, ஊடக ஒடுக்குமுறை என அனைத்துலக சமூகம் அதிருப்தியில் உள்ளது. இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பில் அனைத்துலக சமூகமானது உறுதியான எதிர்வினை எதனையும் வெளிப்படுத்தவிலை. அதனால்தான் விடுதலைப் புலிகளின் வன்முறையை கட்டுப்படுத்துதல் மற்றும் தேசப்பாதுகாப்பு போன்ற விடயங்கள் இருப்பினும்கூட சிறிலங்கா தொடர்பில் கடும்போக்கை அனைத்துலகம் மேற்கொள்கிறது.

யேர்மனும் இங்கிலாந்தும் இலங்கைக்கான உதவிகளை முடக்கி உள்ளன. பிரித்தானிய நாடாளுமன்றில் 4 மணி நேரம், இலங்கை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்குக்கான அமைச்சர் கிம் ஹாவெல்ஸ், தேவைப்படுமாயின் விடுதலைப் புலிகளின் மீதான பிரித்தானிய தடையை நீக்கலாம் என்கிறார். மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க மனித உரிமை அமைப்பான சுதந்திர இல்லம் மேலும் பல அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது.

"கருத்து சுதந்திரத்துக்குத் தடை, அரச சார்பற்ற நிறுவனங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் கொள்கை, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பில் சுதந்திர இல்லம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த ஒடுக்குமுறைகளால் அமெரிக்காவின் மில்லினியம் சேலஞ்ச் கணக்கு உதவி பெறும் பட்டியலில் இடம்பெற நேரிடும். "இலங்கைப் பயணத்தின் போது அமெரிக்காவின் பௌச்சரும் சேலஞ்ச் கணக்கு உதவி பெறும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளதாகக் கூறியுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பண அறவிடுதல் நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் முடக்கி ஆயுதக் கொள்வனவைத் தடுக்கின்ற போதும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறிலங்காவின் இறைமை மற்றூம் தேசப் பாதுகாப்புக்கு மதிப்பளிக்கும் அனைத்துலகமானது அமைதி முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

2006 ஆம் ஆண்டிலிருந்து முன்னுரிமைகளில் சிறிலங்கா அரசாங்கம் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டதுதான் அடிப்படைக் காரணமாகும். முதல் மூன்று ஆண்டுகள் இராணுவக் கருத்துருகளை அரசியல் விடயங்கள் விலக்கி வைத்தது. இப்போது அரசியல் விடயங்களை இராணுவக் கருத்துருக்கள் விலக்கி வைத்துள்ளது. பௌச்சருடனான மகிந்தவின் சந்திப்பின் போது மகிந்த வெளிப்படுத்தியதாக ஊடகங்களில் பதிவாகியுள்ள செய்தியே சான்றாகும். "தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை தற்போதைய யுத்தம் தொடரும். இராணுவத்தினர் யுத்தத்தை நிறுத்த வேண்டுமானால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுக்கு வரவேண்டும். அமைதிப் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் விரும்பினாலும் புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவோம்" என்று மகிந்த கூறியிருந்தார். மகிந்தவின் திட்டத்தில் அமைதி முயற்சியோ அரசியல் விடயங்களோ இல்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

அமைதி முயற்சிகளைக் கைவிட்டு இராணுவ ரீதியிலான செயற்திட்டத்தை முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையை 2006 ஆம் ஆண்டு இராணுவ வெற்றிகள் எற்படுத்தியிருக்கிறது. கிழக்கில் விடுதலைப் புலிகளிடமிருந்து பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இராணுவ வெற்றிகளைத் தொடர்ந்து இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வு காணலாம் என்பதற்கான ஆதரவு வலுவடைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தீர்வுத் திட்டம் தொடர்பில் மகிந்த வெளிப்படுத்தும் கருத்துகள் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருப்பினும் ஒற்றையாட்சி கோட்பாடு மற்றும் மாவட்ட சபைகளினூடே அதிகாரப் பகிர்வு என்பவற்றில் அவர் உறுதியாக உள்ளார். கீழ்நிலை அளவில்தான் அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டுமே தவிர கூட்டமைப்பு கோட்பாட்டின் கீழ் அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் மகிந்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளமையே இதற்குச் சான்றாகும்.

அடிவானத்தின் எல்லைக்கே அமைதி போய்விட்ட நிலையில் இராணுவ ரீதியாக என்ன நடக்குமெனில்

- தங்களது பலவீனத்தை சமப்படுத்த மரபுவழி யுத்தத்திலிருந்து மாறி யாழ். குடாநாட்டுக்குள் கொமாண்டோ நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளலாம். யாழில் பெருமளவாக கைப்பற்றப்பட்டுள்ள சிறுவகை ஆயுதங்கள் மூலம் இந்நடவடிக்கை ஏற்கெனவே யாழில் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. பெருமளவாக நிற்கும் பாதுகாப்பு மற்றும் முன்னரங்க நிலைகளில் இராணுவம் பெருமளவாக குவிந்து நிற்பதை பிரிப்பதல் கவனமெடுக்கக் கூடும். இதில் மூத்த தளபதிகள் இலக்காகக் கூடும்.

- வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதலானது பெரும்பாலும் ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளாக இருக்கலாம். இராணுவத் தலைமையகம், களஞ்சியங்கள் ஆகியவை இலக்காகும். ஓமந்தை- மடு- மன்னார் முன்னரங்க நிலைகளை தாண்டி சிறிலங்கா இராணுவம் முன்னகர்வை மேற்கொண்டால் தொடர்ச்சியான எதிர்த்தாக்குதல்களை கடுமையாக புலிகள் மேற்கொள்ளக்கூடும். இதன் மூலமாக மன்னார் கடலோரப் பகுதியிலான புலிகளின் கடல்வழி விநியோகப்பாதை பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையிலும் மே முதல் இரு வாரங்களில் புலிகளுக்காக கடத்தப்பட இருந்த 7,500 லீற்றர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

- கொழும்புத் துறைமுகம் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவை வான் மற்றும் கொமாண்டோ தாக்குதல்களில் முதன்மைப் பட்டியலில் இடம்பெறலாம். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்ட நிலையில் இருப்பர்.

- கிழக்கில் கருணா- பிள்ளையான் குழு விவகாரம் உள்ளிட்டவையானது சமூக நிலையற்ற தன்மையை உருவாக்கும்.

- இந்தியா- சிறிலங்கா உறவானது அழுத்தங்களைக் கொண்டதாக உள்ளது.

"யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு அனைத்து தரப்பும் உண்மையாக இருங்கள். பேச்சு மேசைக்குத் திரும்புங்கள். வன்முறைகளை இராணுவ வழித் தீர்வு முடிவுக்குக் கொண்டுவராது. நிலைமையை மேலும் மோசமாக்கும். அனைத்துலக சமூகம், புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் அனைவரும் இருதரப்பும் பேச்சு மேசைக்கு திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான குழுவின் தலைவர் டொம் லண்டஸ் வலியுறுத்தியிருந்தார்.

மகிந்த சிந்தனையிலிருந்து மாற்றத்தை செய்து இறுதித் தீர்வுத் திட்டத்தை மகிந்த முன்வைத்தாலும் எதிர்வரும் மாதங்களில் குறிப்பாக கோடைக்குப் பின்னர் யுத்த பாதையில் இந்தத் தீவு தொடர்ந்து செல்லும் என்று கேணல் ஹரிகரன் கூறியுள்ளார்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.