Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள

Featured Replies

(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம்  முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான நிலைமையினை தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில்  இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.


mangala_samaraweera.jpg

இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொட்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

ஜெனிவா விவகாரம் மாத்திரமல்ல. வெளிவிவகார கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுக்கும் தீர்மானங்கள் முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால் அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாக காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்தை தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை.

இதன் காரணமாகவே நாட்டு தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சார கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை தோற்றம் பெறும் என்ற கருத்தும் அப்போத குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக  இருந்தது.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றவுடன் சர்வதேச உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது.

சர்வதேச விசாரணைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் இலங்கையிலே உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் பொது சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எவ்வித பாரபட்சமும் காட்டாது. என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி அரசாங்கம் 30. 1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76105

  • தொடங்கியவர்

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே : நினைவுபடுத்தினார் மங்கள

எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே தெரிவித்துவந்தார்.

என்றாலும் இந்த 30/1 பிரேரணை மூலம்தான் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லாமல் தடுத்தோம். அதபோன்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் எமது நாட்டுக்கு தேவையில்லை, எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு  ஜெனிவாவுக்கு தெரிவிக்க முடியுமாகியது.

அத்துடன் எமது பிரச்சினைகளில் இருந்து சர்வதேசத்தை தூரமாக்கியதுடன் சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு செல்ல முடியுமாகியது. உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் இந்த 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும். அதனால் அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 30/1 பிரேரணையில் இருந்து விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/76102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.