Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட்

 

 

 

by : Yuganthini

rishad-3.jpg

இலங்கை அரசு உலக நாடுகளுடன் முட்டி மோதுவதானது இங்கு வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானதென நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரிசாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பொது வேட்பாளராக நிறுத்தியபோது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அக்கூட்டமைப்போடு இணைந்து அவரது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பூரண ஒத்துழைப்பை கொடுப்பதில் பல கட்சிகளோடு சேர்ந்து எமது கட்சியும் முக்கிய பாத்திரத்தை வகித்தது. அந்தவகையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக தமக்காக பேசக்கூடிய, தமக்காக வேலை செய்யக்கூடிய பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதற்கான நல்ல தருணம் அமைந்திருக்கிறது.

வன்னி மாவட்டத்தில் போட்டியிட எமது கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக பல கட்சிகள் ஒன்றிணைந்து இக்கூட்டமைப்பில் யானை சின்னத்திலா அல்லது அன்ன சின்னத்திலா அல்லது வேறு சின்னத்தில் போட்டியிடுவது சம்மந்தமாக பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் முகம் கொடுப்பதற்கு மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் தலைமையிலான கட்சி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல சிவில் அமைப்புக்கள் உட்பட பல கட்சிகள் இணைந்து பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி எல்லோரும் சமத்துவத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதற்கேற்ற நல்ல கூட்டமைப்பை உருவாக்கி அந்த கொள்கையோடு போட்டியிட இருக்கின்றோம்.

வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலே எங்களது கட்சி கடந்த காலங்களில் நாடாளுமன்ற அங்கத்துவத்ததை பெற்றிருந்தது. எனவே இவ் மாவட்டங்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டதை போன்று போட்டியிடுவதற்கும் கூட்டமைப்பின் விருப்பத்தோடு தனித்து போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கும் வியூகங்களை அமைத்திருக்கிறோம்.

சஜித் பிரேமதாச, தங்களுடன் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுமாறு கோரியுள்ளார். அதேபோல் கூட்டமைப்பை சார்ந்த ஏனைய கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன.

அரசாங்கம் என்ற வகையில் தனித்து நாங்கள் மட்டுமல்ல ஒரு நாடு என்று வாழ முடியாது. அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் இணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

இந்த நாடு சுதந்திரத்தின் பின்னர் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல அழிவுகளை சந்தித்துள்ளது. அந்த அழிவுகள் எமக்கு பாடமாக விளங்கி கடந்த காலத்தில் பேரினவாத சக்திகள் விட்ட தவறை இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் பாடமாக கொள்ள வேண்டும். சிறுபான்மை சமூகத்தினுடைய உள்ளங்களை உடைத்து அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுவது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.

அமெரிக்காவும் ஐரோப்பாவுமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னின்று உழைத்த நாடுகள். அவ்வாறான நாடுகளுடன் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருப்பது இந்த நாட்டிற்கே ஆபத்து.

பேரினவாத சிந்தனையோடு பெரும்பான்மையினரின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக இந்த அரசாங்கத்தில் உள்ள சிலர் இனவாதம் மதவாதத்தை தூண்டுவதோடு உலக நாடுகளையும் பகைத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயற்படுகின்றனர்.

எனவே அவர்கள் இதனை திருத்திக்கொள்ளாவிட்டால் இதனால் ஏற்படும் ஆபத்து நாட்டில் வாழக்கூடிய 22 மில்லியன் மக்களுக்குமேயாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உலக-நாடுகளுடன்-இலங்கை-மோ/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.