Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்!

Featured Replies

(ஆர்.விதுஷா)
சம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுகயீனவிடுமுறை போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணியின்   காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தது.


IMG_2451.jpg"


இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட சம்பள  முரண்பாட்டுக்கான தீர்வினைப்பெற்றுத்தருமாறு கோரி இன்று நாடளாவிய ரீதியிலுள்ள அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன  விடுமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாகவே அரச பாடசாலைகளின் மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக 100 இற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான அதிபர்களும்இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கான ஆதரவை வழங்கியிருந்ததுடன், 97 வீதமானவர்களடைய பங்களிப்பு இந்த ஆர்பாட்டத்திற்கு கிடைக்கப்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேசரிக்கு தெரிவித்தார்.

சுகயீன விடுமுறைப்போராட்டத்தின் ஒரு அங்கமாக 32 கல்வித் துறைசார் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று காலை  9 மணிக்கு  பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டு  மைதானத்திலிருந்து கல்வி அமைச்சு வரை ஊர்வலமாக சென்று தமது ஏழு அம்ச கோரிக்கையை சமர்ப்பிக்க முற்பட்டனர்.

இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், வாக்குறுதியளித்த படி சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினைப்பெற்றுத்தாருங்கள் ,23 வருடங்களாக தீர்வு காணப்படாத சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை  பெற்றுத்தாருங்கள் என்ற சுலோகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோ.எழுப்பியவாறும்  கல்வி அமைச்சு வரை ஊர்வலமாக சென்றனர்.


IMG_2436.jpg
 

அதன் போது கல்வி அமைச்சை அண்டிய பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன்,பொலிசார் குவிக்கப்பட்டுஆர்ப்பாட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியையும் மீறு கல்வி அமைச்சினுள் நுழைய முற்பட்ட ஆர்பாட்டகாரர்களுக்கும் பொலிசாருக்கும்இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஆர்பாட்டகார்கள் அந்த இடத்தை விட்டு நகராத கல்வி அமைச்சரை சந்தித்து தமது ஏழு அம்ச கோரிக்கையைகையளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டிருக்கவில்லை.

காலையில் ஆரம்பமாகிய எதிர்ப்பு ஆர்பாட்டம் பிற்பகல் 2 மணிவரை தொடர்ந்தது. எதிர்ப்பு ஆர்பாட்டம் எவ்வித தீர்மானங்களோ,இணக்கப்படுகளோ இன்றி முடிவடைந்திருந்தது. ஆகவே,அவர்ளுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில்இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளரிடம் வினவியபோது அவர் கூறியதாவது,

நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 100 இற்கும் அதிகமான பாடசாலைகளை மூடி எதிர்ப்பு ஆர்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.
இதற்காக 97 வீத ஒத்துழைப்பு அதிபர் ஆசிரியர்களிடமிருந்துகிடைக்கப்பெற்றிருந்தது. சுகயீன விடுமுறைப்போராட்டத்தின் அங்கமாக பத்தரமுல்லை கல்வி அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்புஆர்பாட்டத்தினையும் மேற்கொண்டிருந்தோம்.

கடந்த அரசாங்கம் ஆசிரியர்,அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக அறிவித்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அமைச்சரவைப்பத்திரம்வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு மீண்டும் கோரிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாக கூறி கடந்த அரசாங்கம் ஒக்டோபர் மாதம் 15ஆம்திகதி மீண்டுமொரு அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆகவே,கடந்த 14ஆம் திகதி ஆர்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தோம். அதனைதொடர்ந்து 20 திகதி அதற்கான முடிவை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியிருந்தது. இருப்பினும் எந்த தீர்வும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76574

 

 

  • தொடங்கியவர்

சுகவீன விடுமுறைப் போராட்டம்; வடமாகாணப் பாடசாலைகளும் முடங்கின

-எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த், டி.விஜித்தா, மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன், எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம்தவசீலன்

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு வழங்கக் கோரி, நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து, இன்று (26) முன்னெடுக்கப்பட்ட சுகவீன விடுமுறைப் போராட்டத்துக்கு,  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் அதிபர்களும் ஆதரவுத் தெரிவித்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போராட்டம்:

யாழ்ப்பாணம்  

இதற்கமைய, யாழ். மாவட்ட ஆசிரியர்களும் அதிபர்களும், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கிளிநொச்சி  

இதேவேளை, கிளிநாச்சி மாவட்ட ஆசிரிய சேவைச் சங்கத்தால், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் சேவைச் சங்கத்தினர், தமது கோரிக்கைக்கு அமைச்சர் ஆதரவானக் கருத்துகளைத் தெரிவித்தாரெனவும் தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் வகையில் அமைச்சர் தனது முயற்சிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினர்.  

மன்னார், முல்லைத்தீவு  

மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மாணவர்களின் வருகை, பாடசாலைகளின் நிலைமை:

யாழ்ப்பாணம்   

இதனால், யாழில் உள்ள பாடசாலைகளில், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.  

யாழில் உள்ள பெருமபாலான பாடசாலைகளில், நேற்றைய தினம் மாணவர்களின் வரவு மிகக் குறைந்தளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

கிளிநொச்சி   

இந்தப் போராட்டத்தில், கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள 90 வீதத்துக்கும் அதிகமான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டதாக, கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர சேவைச் சங்கச் செயலாளர் கிருபாகரன் தெரிவித்தார்.  

அத்துடன், இந்தப் போராட்டம் காரணமாக, பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்ட அதேவேளை, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்களும் வருகை தரவில்லை.

இதனால் பாடசாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன.  

மன்னார்   

இந்தப் போராட்டம் காரணமாக, அதிகளவான பாடசாலைகளுக்கு, மாணவர்கள் முற்று முழுதாகச் சமூகமளிக்கவில்லை.  

சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றதோடு, ஆரம்பப் பிரிவு மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.  

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகளில், வழமையாக வருவதை போன்றே மாணவர்களின் வருகை காணப்பட்டது.  

இருப்பினும், ஆசிரியர்களின் வருக்கையின்மை காரணமாக, கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.  

சில பாடசாலைகளில், மாணவர்கள், ஆசிரியர்களின் வருகையின்மை காரணமாக, உடனடியாகவே மாணவர்கள் திரும்பிச் சென்ற அதேவேளை, சில பாடசாலைகளில், குறிப்பிட்ட சில மணியத்தியாலங்களின் பின்னர் மாணவர்கள் திரும்பிச் சென்றனர்.  

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சுகவீன-விடுமுறைப்-போராட்டம்-வடமாகாணப்-பாடசாலைகளும்-முடங்கின/71-246081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.