Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்

February 27, 2020

 

DSC_0235-800x533.jpg

நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.

இன்று  வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த  25 ஆம் திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பாக  இடம் பெற்ற வழக்கு விசாரனை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்றது.

இதன் போது  மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றால் யார்? என்று கேட்டார்.

சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட நாங்கள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

மன்னார் மனித புதை குழி வழக்கு விசாரணைகள் கூட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பெயரில் இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக எனது பெயரிலும் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த அரச சட்டத்தரணி என்ன நோக்கத்திற்காக இவ்வாறு கேட்டார் என்று தெரியாமல் இருக்கின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் 4 வருடங்களாக வீதியில் நின்று போராடிக்கொண்டு இருக்கின்றோம்.

எத்தனையோ போராட்டங்கள்,கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு விதமாக நாங்கள் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களுடைய பிள்ளைகள் எங்கே என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு இருக்கின்ற சமையத்தில் கூட மன்னார் நீதிமன்றத்தில் வைத்து கடந்த 25 ஆம் திகதி அரச சட்டத்தரணி ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கேட்கின்றார்.

குறித்த சட்டத்தரணி இவ்வளவு காலமும் இலங்கையில் இருக்கவில்லையா? இலங்கையில் என்ன நடக்கின்றது என்று இவருக்கு தெரியாதா?காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான அம்மாக்களான நாங்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் வீதியில் நின்று போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

மனிதாபிமானம் இல்லாமால் அவர் கேட்கின்றார் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று. எங்களுடைய பிள்ளைகளை அரசாங்கம் பிடித்துக்கொண்டு போனது என்று நாங்கள் எவ்வாறு தெரியப்படுத்த முடியும்.?

குறித்த அரச சட்டத்தரணியின் கருத்து எமக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.மன்னார் மனித எலும்புகூடு வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சுமார் 345 ற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் பதியப்பட்டுள்ளது.அவற்றில் 13 பேரின் வழக்கு விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக மண்ணை தோண்டி பாரூங்கள் என்று அரச தரப்பில் சிலர் தெரிவிக்கின்றனர்.

எங்கள் பிள்ளைகளை நாங்கள் மண்ணுக்கா கொடுத்தோம்.?எங்கள் பிள்ளைகளை எங்களின் கண் முன் உயிரோடு பிடித்துக் கொண்டு சென்றார்கள்.அப்போது நாங்கள் எவ்வாறு மண்ணை தோண்டி பார்க்க முடியும்.

உரிய தரப்பினர் வந்து எங்களிடம் சொல்லட்டும்.எங்களின் பிள்ளைகளை அடித்தோம்,கொன்றோம்,மண்ணில் பிதைத்தோம் என்று.அப்பேதாவது எங்களின் பிள்ளைகளின் எலும்புகள் இது தான் என்று எடுப்போம்.அதற்கு பின்னர் விவாதிப்போம். மனச்சாட்சி இல்லாமல் மண்ணை தோண்டி பாருங்கள் என்று கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு கதைக்க கதைக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான எங்களுக்கு வேதனையாக உள்ளது. நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.இழப்பதற்கு இனி ஒன்றுமே எங்களிடம் இல்லை.

நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை.தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே.அப்படி என்றால் நாங்கள் தேடத்தான் செய்வோம்.

எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்#நீதி #காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு  #மன்னார்  #மனிதபுதைகுழி
 

http://globaltamilnews.net/2020/137575/

 

சர்­வ­தே­சமே எமக்­கான நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்: காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை

பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் தெரிவித்தனர்.

ஜெனிவா பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தனர்.

சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோரே இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

sdas.jpg

அவர்கள் நேற்று மேலும் கருத்து வெ ளியிடுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும்.

இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்லவேண்டும். காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர்.

https://www.virakesari.lk/article/76601

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.