Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”உள்­ளக விசா­ரணை என்­பது இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்று வேலைத்­திட்டம்” - .வெ.கிரு­பா­கரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”உள்­ளக விசா­ரணை என்­பது இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்று வேலைத்­திட்டம்” - .வெ.கிரு­பா­கரன்

உள்­ளக விசா­ரணை  என­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­ட­கால ஏமாற்­றுத்­திட்­ட­மாகும்.  முள்­ளி­வாய்க்­காலின் பின்னர் உள்­ளக விசா­ர­ணைகள், உள்­ளக விசா­ர­ணைகள் என்று  11 வரு­டங்கள்  சென்­று­ விட்­டன. அதன் பின்னர் இரா­ணு­வ­ வீ­ரர்கள் மன்­னிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மர­ண­ தண்­டனை பெற்­ற­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.இவை­தான் இலங்கை அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம். எனவே உள்­ளக விசா­ர­ ணை­களில்  சர்­வ­தே­சத்­துக்கும்  நம்­பிக்­கை­யில்லை.  இனி­வரும் காலங்­களில் அது இறுக்­க­மான தீர்­மா­னத்­துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரி­மைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிரு­பா­கரன் தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொ­ட­ருக்கு வருகை தந்­தி­ருந்த நிலையில் பேரவை வளா­கத்தில்  வீர­கே­ச­ரிக்கு அவர் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்தார். 

asdasda.jpg

செவ்­வியின் விபரம் வரு­மாறு,

கேள்வி: மனித உரிமைகள் பேர­வையின்  பிரே­ர­ணைக்­கான இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து இலங்கை அர­சா­னது வில­கி­யுள்­ளது. இதனை உங்கள் அமைப்­பா­னது எவ்­வாறு பார்க்­கி­றது?

பதில்: இதைப் ­பற்றி நாங்கள் நீண்ட கால­மா­கவே சொல்லி வரு­கின்றோம். உண்­மையில் இந்த  இணை அனு­ச­ரணை என்­பதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் இதன் மூலம் இந்தத் தீர்­மா­னத்தை  வலிந்­த­தாக ஏற்­ப­டுத்த இலங்­கையின் முன்­னைய அர­சாங்கம் இதனைப் பயன்­ப­டுத்­தி­யது. தற்­போ­தைய அர­சாங்கம்  அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இந்த இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து வில­கு­கி­றது. இதிலிருந்து வில­கு­வதால் இவர்­க­ளுக்­குத்­தான் ஆபத்து. இவ்­வாறு  வில­கு­வதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் இதில் வேலை­ செய்யும் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கும் வேலை என்­பது மிகவும் இல­குவாகும். காரணம் சர்­வ­தே­ சத்தின் முன் இதனை விட்டு விலகிச் செல்­கிறோம் என்று இலங்கை தெரி­வித்­த­தா­னது  உங்­க­ளுக்குத் தெரியும். சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் பல ஏற்­க­னவே இதனைக் கண்­டித்­துள்­ளன.  எனவே இதே பார்­வை­யில்­தான பல நாடு­களும் இதனைக் கவ­னிக்கும் என­பது எமது கருத்து.

கேள்வி: இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­யி­ருக்­கின்றோம். ஆனால் மனித உரிமைகள் பேர­­வையின் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­க­வில்லை. எனவே உள்­ளக விசா­ர­ணைகளை உரிய முறையில் முன்­னெ­டுக்கத் தயா­ராக இருப்­ப­தாக  என்று அமைச்சர் தினேஷ் குண­வர்­த்தன தெரி­வித்­துள்ளார். இதனை நீங்கள் எவ்­வாறு கரு­து­கி­றீர்கள்.  உள்­ளக விசா­ர­ணைகள் உரிய முறையில் நடை­பெ­றுமா?

பதில்: உள்­ளக விசா­ர­ணைகள் என­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­ட­கால ஏமாற்­றுத்­திட்டம் உங்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். 83 மற்றும் அதற்கு முன்னர் கூட பல உள்­நாட்டு ஆணைக்­கு­ழுக்கள்  அமைக்­கப்­பட்­டன. அதன் அறிக்­கை­களும் வெளி­வ­ர­வில்லை. முறை­யான எதுவும் நடை­பெ­ற­வு­மில்லை.  விசே­ட­மாக முள்­ளி­வாய்க்­காலின் பின்னர்  உள்­ளக விசா­ர­ணைகள், உள்­ளக விசா­ர­ணைகள் என்று  11 வரு­டங்கள் சென்­று­ விட்­டன. அதன் பின்னர் இரா­ணு­வ­ வீ­ரர்கள் மன்­னிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மர­ண­ தண்­டனை பெற்­ற­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவை­தான் இலங்கை அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம். எனவே உள்­ளக விசா­ர­ ணை­களில்  சர்­வ­தே­சத்­துக்கும்  நம்­பிக்­கை­யில்லை. எனவே இனி­வரும் காலங்­களில் அது இறுக்­க­மான தீர்­மா­னத்­துக்கு வழி வகுக்கும்.

கேள்வி: ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ­ச­பைக்கு ஓர் எல்­லை­யுண்டு. அதைத் தாண்டி அசாங்­கத்தின் ஒத்­து­ழைப்பின்றிச் செயற்­பட முடி­யாது. இவ்­வா­றான நிலையில் இலங்கை விவ­கா­ரத்தை  சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு  கொண்டு செல்­லப்­போ­வ­தாக சில தரப்­பி னர் கூறி­ வ­ரு­கின்­றனர். இது சாத்­தி­யமா அல்­லது அதற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட ­வேண்டும்?

பதில்:  உண்­மையில் சர்­வ­தேச மனித உரி­மைகள் சபையின் வேலைத்­திட்­டங்­களைப் பார்த்தால் இலங்கை அர­சா­னது இனியும் தொடர்ந்து மறுத்து வந்தால் மனித உரி­மைகள் சபையின் இந்த விட­யத்தை பாது­காப்புச் சபைக்கு அல்­லது பொதுச்­ச­பைக்குக் கொண்டு செல்ல முடியும். அப்­படி கொண்­டு­செல்­லப்­பட்டால் அது தொடர்பில் ஆரா­யப்­பட்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். இது போன்ற விட­யங்கள் சில நாடு­க­ளுக்கு இடம்­பெற்றும் உள்­ளன. 

கேள்வி: இந்தப் பிரே­ர­ணைக்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. தற்­போது  இணை அனு­ச­ர­ணையில் இருந்து வில­கி­யுள்­ளது. இந்தச் சம­யத்தில் இந்­தியா,  பிரித்­தா­னியா போன்ற நாடுகள் எத்­த­கைய நிலை­பாட்டை எடுக்­க­ வேண்டும் என உங்­க­ளது அமைப்பு எதிர்­பார்க்­கி­றது?

பதில்:  உண்­மையில் எங்­களைப் பெறுத்­த­வரை அர­சியல் மற்றும் பொறுப்புக் கூறல் விட­யங்­களில் இந்­தியா, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுடன் மேல் ­மட்­டத்தில் வேலைத்­திட்­டங்கள் எடுக்­கப்­ப­ட­ வேண்டும். அர­சியல் தீர்வு பிரச்­சி­னையைப் பெறுத்­த ­வரை இந்­தி­யாவை கடந்து யாரும் எமக்கு எத­னையும் செய்­யப்­போ­வ­தில்லை. எனவே எத்­தனை சர்ச்­சைகள் வந்­தாலும் நாம்  இந்­தியா மூலம்தான் அர­சியல் தீர்வுத் திட்ட வேலைத்­திட்­டங்­களில் இறங்­க­ வேண்டும்.

கேள்வி: மனித உரிமைகள் பேர­வையால் 2012 முதல் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனால் இலங்‍கை அர­சாங்­க­மா­னது அவற்றைப் பூர­ணப் ­ப­டுத்­தாமல் காரணம் கூறி வரு­கின்­றது. எனவே புலம்­பெயர் அமைப்­புகள் இதற்கு எவ்­வா­றான அழுத்­தங்­களைக் கொடுக்­க ­வேண்டும். ஏனென்றால் புலம்­பெயர் அமைப்­பு­க­ளி­டையே இன்று ஒற்­றுமை இல்­லாத ஒரு நிலை காணப்­ப­டு­கி­றது.

பதில்: நீங்கள் கூறு­வது சரிதான். இன்று புலம்­பெயர் அமைப்­புகள் இடையே ஒற்­று­மை­யில்­லாத ஒரு நிலை­தான் காணப்­ப­டு­கி­றது. இந்த அமைப்­புகள் தம்­மி­டையே போட்­டி ­போட்­டுக்­கொள்­ளாமல் உரிய முறை­யி­லான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க ­வேண்­டும். ஐ.நா. வுக்கு வருவது என்பது ஒரு சாதாரண விடயமாகியுள்ளது. 

முன்பு தொழில்சார் வல்லுனர்கள், பேராசிரியர்கள், சட்டவல்லுனர்கள் போன்ற நிபுணர்களை நாம் அழைத்து வந்தோம்.ஆனால் இன்று சிலர் அரசியல் தேவைகளுக்காகவும் பணம் ‍சேர்ப்பதற்காகவும் வருகின்றனர். அரசாங்கம் எப்பொழுதும் அவர்கள் சார்பாக சிறந்த ராஜதந்திரியைத்தான் ஐ.நா.வுக்கு அனுப்பும். எனவே நாமும் அதற்கேற்ப திறமையான நபர்களை இவ்விடயத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இங்கு நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து   ஐ.நா. பிரதி நிதிகளைச் சந்தித்து ராஜதந்திர ரீதியாக செயற்பட்டு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.   

 

https://www.virakesari.lk/article/76796

 

20 minutes ago, கிருபன் said:

பதில்:  உண்­மையில் எங்­களைப் பெறுத்­த­வரை அர­சியல் மற்றும் பொறுப்புக் கூறல் விட­யங்­களில் இந்­தியா, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுடன் மேல் ­மட்­டத்தில் வேலைத்­திட்­டங்கள் எடுக்­கப்­ப­ட­ வேண்டும். அர­சியல் தீர்வு பிரச்­சி­னையைப் பெறுத்­த ­வரை இந்­தி­யாவை கடந்து யாரும் எமக்கு எத­னையும் செய்­யப்­போ­வ­தில்லை. எனவே எத்­தனை சர்ச்­சைகள் வந்­தாலும் நாம்  இந்­தியா மூலம்தான் அர­சியல் தீர்வுத் திட்ட வேலைத்­திட்­டங்­களில் இறங்­க­ வேண்டும்.

கசப்பான உண்மை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.