Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா?

Featured Replies

உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா?

உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக போல்வூல்வோவிட்ஸ் அறிவித்துள்ளார். வூல்வோவிட்ஸின் பதவி விலகல் தனிப்பட்ட தவறுகளால் ஏற்பட்டதா அல்லது அரசியல் விவகாரமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

ஈராக் யுத்தத்தினை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் போல் வூல்விட்ஸ் - அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர்

உலக வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட வேளை உலக வங்கிக்குள் இருந்தும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜேம்ஸ் வூல்வென்சனுக்குப் பின்னர் உலக வங்கித் தலைவர் பதவிக்கு வூல்வோவிட்ஸை நியமிப்பதை ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்த்த உலக வங்கி அதிகாரிகள் விரும்பவில்லை.

எனினும், எதிர்ப்பு எதுவுமின்றி புஷ் நிர்வாகம் அவரை தலைமைப் பதவியில் இருத்தியது. உலக வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் போல் வூல்வோவிட்ஸ் உடனடியாக ஆபிரிக்க நாடுகளுக்கு கரம் நீட்டினார். மிகவும் வறிய நாடுகளின் கடன்களை இரத்துச் செய்தார். எனினும், இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.

இதன் பின்னர் சர்ச்சைக்குரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார். மீண்டும் ஐரோப்பிய அரசாங்கங்களுடன் மோதினார். இது நிதியுதவி வழங்கப்படும் வேகத்தை பாதிக்கும் என ஐரோப்பிய நாடுகள் கருத்து தெரிவித்தன.

எனினும், போல்வூல்வோவிட்ஸ் இது குறித்து கவலையடையவில்லை.

ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கையை ஏற்படுத்திய இரு வாரங்களுக்கு பின்னரே அவர் குறித்த சர்ச்சை வெளியாகியது.

போல் வூல்வோவிட்ஸ் தனது பெண் சிநேகிதி சஹா ரிசாவிற்கு விதிமுறைகளுக்கு மாறாக பதவி உயர்வு வழங்கினார். சம்பள அதிகரிப்பை வழங்கினார் என்பதே குற்றச்சாட்டு.

சஹா ரிசாவிற்கும் வூல்வோவிட்சிற்கும் இடையில் 2005 இற்கு முன்னரே தொடர்புகள் இருந்துள்ளன.

உலக வங்கி தலைவராக பதவியேற்ற பின்னர் அவர் இது குறித்து வங்கிக்கு அறிவித்து என்ன நடவடிக்கையை மேற்கொள்வது என ஆராய்ந்துள்ளார்.

வங்கியின் ஒழுக்காற்று குழு இதுபற்றி அவரிடம் வினவியதற்கு அவர் சஹா ரிசாவின் பெயரை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னர் வங்கி இது குறித்து ஆராய்ந்துள்ளது போல் வூல்வோவிட்ஸ் ரிசா குறித்து தனிப்பட்ட முடிவுகளை எடுக்கப்போவதில்லை என உறுதிளித்துள்ளார்.

எனினும், வங்கி இதனை நிராகரித்துள்ளது. அதேவேளை, ரிசாவின் நலனை கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையும் அதற்கு இருந்துள்ளது.

இதன் காரணமாக போல்வூல்வோவிட்ஸின் கண்காணிப்பிற்கு உட்படாத பதவியை ரிஜாவிற்கு வழங்க வேண்டும் என வங்கியின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

2006 இல் உலக வங்கிக்கு ஜோன் ஸ்மித் என்பவரின் பெயரால் மின்னஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கியின் பணியாளர் ஒருவரினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் வூல்வோவிட்ஸ் மிகவும் பாரதூரமான ஒழுக்காற்று விதிமுறைகளை மீறி ஊழலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சஹா ரிஜாவின் ஊதியம் 138,000 அமெரிக்க டொலரிலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து வூல்வோவிட்ஸ் வங்கியின் நிர்வாக குழுவிற்கு அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இது குறித்து போல் வூல்வோவிட்சிற்கு ஒழுக்காற்று குழு அறிவித்துள்ளதுடன் மேலும், ஆராய்வதற்கு அவசியம் எழவில்லை எனக் கூறி குறிப்பிட்ட மின்னஞ்சல் விவகாரத்திற்கு முடிவு கட்டிவிட்டது.

எனினும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆராயப்படாதது குறித்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது.

மார்ச் 2007-28 ஆம் திகதி வெளியான வாஷிங்டன் போஸ்ட் இதழில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களே அனைத்தும் தீவிரமடையும் நிலையை உருவாக்கியிருந்தது.

ரிஜாவின் ஊதியம் 193.590 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

எனக் குறிப்பிட்ட வாஷிங்டன் போஸ்ட் இது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைசின் ஊதியத்தை விட 7000 அமெரிக்க டொலர் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. உலக வங்கியில் ரிஜாவிற்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன் பின்னரே வங்கி மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய விசாரணை குழுவொன்றை அமைத்தது.

போல் வூல்வோவிட்ஸ் வங்கியின் விதிமுறைகளை மீறினாரா என்பதே முக்கியமான கேள்வியாக காணப்படுகின்றது.

உலக வங்கியின் ஊழியர் சங்கம் ரிஜாவின் பதவி உயர்வு வங்கி நடைமுறையை பின்பற்றாமல் வழங்கப்பட்டது. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியவர் போல வூல்வோவிட்ஸ் என்பதாலேயே இந்த சர்ச்சை இன்னொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

ஊழல் அரசாங்கங்கள் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை என வாதாடியவர்.

போல் வூல்வோவிட்ஸ் ஊழல் அதிகளவில் இடம்பெறும் நாடுகளுக்கான உதவியை கூட இடைநிறுத்தியவர்.

சாட் அரசாங்கத்திற்கு வழங்கிய உதவி பாதுகாப்பிற்காக செலவிடப்படுகின்றது என்பதை காரணம் காட்டி அந்த நாட்டிற்கான உதவியை அவர் இடைநிறுத்தியிருந்தார்.

அரசாங்கங்களின் நடவடிக்கைக்காக வறிய மக்களை தண்டிக்க கூடாது, ஊழல் நிறைந்த அரசாங்கங்களாலும் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என்பது அவரது விமர்சகர்களின் கருத்தாக அமைந்தது.

அமெரிக்கா, ஆதரவு நாடுகளான ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் நிலவும் ஊழல் குறித்து அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்

ஊழல் குற்றச்சாட்டு வெளியானதும், போல்வூல்வோவிட்ஸ் முதலில் தான் இந்த விவகாரத்தை கையாண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரினார்.

நான் தவறு செய்துவிட்டேன், நான் ரிஜாவின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்றார்.

எனினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும் தனக்கு எதிராக விஷமத்தன பிரசாரம் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

மே. 14 இல் வங்கியின் ஒழுக்காற்று குழு வூல்வோவிட்ஸ் விதிமுறைகளை மீறியதாகவும் தனிப்பட்ட நலனை மையமாக வைத்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்டது. வருடாந்த அதிகரிப்பிற்கு அதிகமாக அவருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

உலக வங்கி தனது பணியை நிறைவேற்றுவதற்கான தலைமை பொறுப்பை அவரால் வகிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

வூல்வோவிட்ஸ் அமெரிக்காவின் ஆதரவுடன் தொடர்ந்தும் தன்னை பதவியை வகிக்கலாம் எனக் கருதினார். அவருக்கான கடும் எதிர்ப்பு வங்கிக்கு உள்ளேயே காணப்பட்டது. நாங்களே முரணாக நடந்துகொண்டு உலக நாடுகளுக்கு எவ்வாறு அறிவுறுத்த முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

உலக வங்கியின் ஊழியர்களை புறக்கணித்துவிட்டு பென்டகனை சேர்ந்த தனது விசுவாசிகளை நியமித்ததாகவும் வங்கி ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போல்வூல்வோவிட்ஸின் வீழ்ச்சி இன்னுமொரு நியோ கொன்சவேர்ட்டிவின் வீழ்ச்சியாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் ஜோன் போல்டென் வரிசையில் பதவியிழந்துள்ளார்.

மூவரும் ஈராக் யுத்தத்தையும், மத்திய கிழக்கை மாற்றியமைப்பதையும், தீவிரமாக ஆதரித்தவர்கள், புஷ்ஷின் இன்னுமொரு பலவீனமாகவும் வூல்வோவிஸின் பதவி விலகல் கருதப்படும்.

புஷ்ஷின் நிர்வாகத்திற்கும் இது அடியாக அமைந்துள்ளது. மேலும், உலக வங்கிக்கு தலைவரை தெரிவு செய்யும் விதம் குறித்தும் இதன் மூலம் கேள்வி எழுந்துள்ளது. உலக வங்கியின் தலைவரை அமெரிக்கா தெரிவு செய்வதும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையை ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்வதும் வழமை.

ஐரோப்பாவின் தாராள ஜனநாயக அரசாங்கங்களுக்கான வெற்றியாக இது கருதப்படலாம். அந்த அரசாங்கங்கள் ஈராக் யுத்தத்தையும் வூல்வோவிட்ஸின் தலைமை பதவியையும் எதிர்த்து வந்தன. போல்வூல்வோவிட்ஸின் நிலை கடினமானது என்பது தெரிய வந்ததும், அமெரிக்காவும் மெல்ல பின்வாங்க தொடங்கியது. அ தனை கடந்த காலத்துடன் (புஷ் நிர்வாகத்துடன்) தொடர்படுத்துவது குறித்து போல் வூல்வோவிட்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நான் அமெரிக்காவிற்காக பணியாற்றவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியதுடன் இந்தோனேசியாவிற்கான தூதுவராகவும், புஷ்ஷின் தந்தையின் நிர்வாகத்திலும் பணியாறியுள்ளார்.

2003 அக்டோபரில் ஈராக்கில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரொக்கட் தாக்குதலிற்கு உள்ளானது.

தொனக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.