Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன கப்பலில் வந்த பூனை... கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு!

Featured Replies

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால்  ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. 

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. 

இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட விளையாட்டு பொம்மைகள் இருந்த கன்டெய்னரில் இந்த பூனை, கூண்டில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்ததுள்ளது. 

கொரோனா வைரஸ் விலங்குகளின் மூலமாகக் கூட பரவலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள், அந்த பூனை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்பி வைத்து விடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

 ஆனால் அதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து பீட்டா, செல்ல பிராணிகள் மூலம் வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பூனை வந்ததில் இருந்து உணவு, தண்ணீர் இல்லாமல் அடைத்து வைக்கப் பட்டிருப்பதால் அது இறந்து விடும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், சீனாவில் இருந்து வந்த அந்த கப்பல், பல துறைமுகங்களின் வழியாக வந்திருப்பதால், அந்த பூனை வேறு ஏதேனும் துறைமுகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/விநோத-உலகம்/சன-கபபலல-வநத-பன-கரன-அசசததல-தரபப-அனபபம-மடவகக-படட-எதரபப/53-246392

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

'கொரோனாவை தடுக்க பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருங்கள்'

லண்டன்: கொரோனா அறிகுறியுடன் உடையவர்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்தி கொண்டவர்கள் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருக்குமாறு பிரிட்டனை சேர்ந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

விலங்குகள் தொற்று நோயை பரப்பும் காரணியாக செயல்படும் என்பதால் , விலங்குகளின் ரோமங்கள் வழியாக அதனுடன் கொஞ்சி விளையாடும் நெருங்கியதொடர்புடையவர்களுக்கு வைரஸ் தொற்றை பரப்ப கூடுமென 'தி பிரிட்டிஷ் கால்நடை அசோசியேசன்' தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அல்லது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தங்களது வளர்ப்பு பிராணியை முடிந்தவரை வீட்டுக்குள் வைத்திருப்பது நலம் எனவும், கொரோனா பாதிப்புள்ளோர் தொடும் கதவுகள், கைப்பிடி போலவே வளர்ப்பு பிராணிகளின் ரோமங்கள் வழியாக பரவ வாய்ப்புள்ளது. முக்கியமாக வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து பூனைகளையும் வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டுமென பரிந்துரைக்க வில்லை எனவும், வீட்டிற்குள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் பூனைகள் வைத்திருப்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாய், பூனையை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்காவின் ப்ராங்க்ஸ் வனவிலங்கு பூங்காவில் 4 வயது பெண் புலி நாடியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது போன்ற நிகழ்வுகளில் கூட, மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகள் குறித்து பீதியடைய தேவையில்லை. விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. சில சிறிய நிகழ்வுகளில், நாய்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால் பூனைகளுக்கு தொற்று குறித்து அறிகுறிகள் இருக்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டை விட்டு வெளியே விடுவதால், அந்நியர்களால் தாக்கும் சூழல் கவலையளிக்கிறது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க சமூக விலக்கலை பின்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக உரிமையாளர்கள் பலரும் பூனைகளை தெருக்களில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில பூனைகள் வீடுகளுக்குள் தங்குவதில்லை. சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பூனைகள் மிக எளிதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடியதாக இருப்பதாகவும், ஒரு பூனையிடம் இருந்து மற்ற பூனைகளுக்கு எவ்வித தொற்று அறிகுறியும் இன்றி பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மரநாய்களும் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட கூடியது என்றாலும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மறுபுறம், நாய்கள் எளிதில் பாதிக்கப்படவில்லை என்றும், ஐந்து நாய்களின் மலத்தில் இந்த வைரஸ் இருந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து கொரோனா வளர்ப்பு பிராணிகளுக்கு பரவியிருக்கலாமென்பதை நிபுணர்கள் நிராகரித்து உள்ளனர். வளர்ப்பு பிராணிகள் குறித்து உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2517540

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.