Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விப் புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் நிலைமையை விளக்கி மாணவர் ஒன்றியம் அறிக்கை

Featured Replies

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விப் புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் நிலைமையை விளக்கி மாணவர் ஒன்றியம் அறிக்கை

]

யாழ்ப்பாணம்,மே 22

இதுவரை கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் தொடர்பாக சாதகமான பதில்கள் விரைவில் கிடைக்கும் என்று பல்வேறு தரப்புகளும் தமக்குத் தெரி யப்படுத்தியதை அடுத்து பல்கலைக் கழக மாணவர்கள் தமது கல்விப் புறக் கணிப்பைத் தற்காலிகமாக இன்று தொடக்கம் கைவிடுவதாக யாழ். பல் கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறி வித்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றி யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:

மாணவர்கள் மீதான கடத்தல்கள், கொலைகள், அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக தாம் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவை தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக் கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ள தாகவும் எமது துணைவேந்தர், அரச அதிபர், பல்கலைக்கழக பேரவை, கல்விமான்கள் ஆகியோர் தெரிவித் ததையடுத்து எமது மாணவர்கள் மேற் கொண்ட கல்விப் புறக்கணிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக எமது பல் கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத் துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறை வேற்று அதிகரம் கொண்ட ஜனாதிபதி யின் கவனத்துக்கும் கொண்டு செல் லப்பட்டுள்ளதுடன் தான் உரிய நட வடிக்கையை உடன் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா தெரிவித் துள்ளார்.

அதுமட்டுமன்றி குடாநாட்டின் பாது காப்புக்கு முழுப்பொறுப்பான யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கவனத் துக்கும் மாணவர்கள் மீதான வன்முறை பிரயோகங்கள் தொடர்பாக பல தரப்பு களினாலும் நேரடி சந்திப்புக்களின் மூல மாக தெரியப்படுத்தப்பட்டுள்ள. அவ ரும் இது விடயத்தில் அதிக வனம் எடுப் பதாக தெரிவித்துள்ளதாக அறியமுடிகி றது.

மரண தண்டனை அச்றுத்தலால்

உளநெருக்கீடும் வேதனையும்

இவர்கள் அனைவரினதும் கருத்துக் களுக்கு மதிப்பளித்து எப்போதும் ஜன நாயக வழிமுறையில் சிந்திக்க எண்ணும் எமது பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22.05. 2007) முதல் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடவுள் ளனர்.

எமது மாணவர்கள் சிலருக்கு பெயர் குறிப்பிட்டு விடுக்கப்பட்ட மரண தண் டனை அச்சுறுத்தல் மற்றும் பல்கலைக் கழக சமூகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சு றுத்தல் அவர்களை உள நெருக்கடி களுக்கு உள்ளாக்கியுள்ளது மட்டுமன்றி எதிர்காலக் கனவுகளுடன் மாணவர்களை கற்பிக்கும் பெற்றோருக்கும் பெரும் வேதனையை விளைவித்துள்ளது. இவை அனைத்தும் தொடர்பாக உரிய அனை வரினதும் கவனத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கை மதிக்கும் எமது மாணவர்கள் எந்த விடயங்களும் ஜன நாயக வழிமுறையிலேயே அணுகப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு அதனை வளர்த்து வரும் சூழலில் அவர் கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கள் ஜனநாயகம் மீதான அவர்களது நம்பிக்கையை சிதறடித்து சிந்தனையை திசைதிருப்ப வழி செய்யும்.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு இதுவரை கடத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பான சாதகமான பதில்கள் விரைவில் கிடைக்கும் எனவும் அம் மாணவர்களின் பெற்றோரின் மன நிலையை புரிந்து அவர்களது பிள்ளை களின் நிலை தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் பல்வேறு தரப் புக்களும் எமக்கு தெரியப்படுத்தி யதையடுத்தே எமது புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுகின்றோம். என்று உள்ளது. (அ)

உதயன்

Edited by வானவில்

...இவ்விடயம் தொடர்பாக நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறை வேற்று அதிகரம் கொண்ட ஜனாதிபதி யின் கவனத்துக்கும் கொண்டு செல் லப்பட்டுள்ளதுடன் தான் உரிய நட வடிக்கையை உடன் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா தெரிவித் துள்ளார்...

அப்படியானால் கடத்தியவர்கள் யாரென்று ஜனாதிபதிக்குத் தெரியும். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.