Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியே பக்தி உள்ளே மோசடி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதெல்லாம் மோசடி வழக்குகளில் விஞ்சி நிற்பது அரசியல்வாதிகளா? அல்லது ஆன்மிகவாதிகளா?’ என்று சிறப்புப் பட்டிமன்றம் நடத்துமளவிற்குஇ இருதரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அரசியல்வாதியிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ சிக்கி ஒருவர் தப்பிப்பது என்பதேஇ இந்தக் காலத்தில் பெரிய விஷயம் என்கிறபோதுஇ உடலால் ஆன்மிகவாதியாகவும்இ உள்ளத்தால் அரசியல்வாதியாகவும் இருமுகத் தன்மையுடன் இருக்கும் ஒருவரிடம் சிக்கி அல்லல்படும் நபரின் வேதனைக்குரல் எப்படியிருக்கும்?

தி.நகரிலுள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி அப்பாசாமியின் போராட்ட வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்துதான் போவீர்கள்.

சென்னை மாநகரிலுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் பிரபலமானவர் ரவி அப்பாசாமி. இவரின் பெயரைத் தாங்கி நிற்கும் அடுக்குமாடி வீடுகளும்இ நவீன ஹோட்டலும் நட்சத்திர அந்தஸ்து பெற்றவை. தனது சாம்ராஜ்ஜியத்தில் மேலும் ஒரு முத்திரை பதிக்கஇ கடந்த 2005_ம் ஆண்டு கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வீடு கட்ட நிலம் தேடினார் ரவி அப்பாசாமி.

அப்போது அவர் கண்ணில் பட்டது நூறு அடி ரோட்டிலுள்ள இருபத்தாறு கிரவுண்ட் நிலம். அதன் உரிமையாளர் யாரென்று விசாரித்தார். 1991_96_ம் ஆண்டில் அ.தி.மு.க.இ ஆட்சிக் காலத்தில் வாரியத் தலைவராக இருந்த பெருமாள்சாமியின் பூர்வீக நிலம் என்பது தெரியவந்தது. அவரைத் தேடிப் போனார் ரவி அப்பாசாமி.

அரசியல்வாதியாக இருந்த பெருமாள்சாமிஇ காவியுடையில் பக்திப் பழமாய் ‘பெருமாள்சுவாமி ரிஷி’யாய் மாறிக் காட்சி தந்தார். ஸ்ரீபெரும்புதூரில் கோயில் கட்டி ஆன்மிகச் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் இன்ஜினீயரிங் கல்லூரிஇ ரியல் எஸ்டேட் தொழில் என்று கொடிகட்டிப் பறந்தார். அவரிடம் பேசிய ரவி அப்பாசாமிஇ இருபத்தாறு கிரவுண்ட் நிலத்தை முப்பத்தொரு கோடி ரூபாய்க்கு விலை பேசி முழுத் தொகையையும் பெருமாள் சாமியிடம் கொடுத்தார். அவரது பெயருக்கு நிலமும் முறைப்படி பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

தனக்குச் சொந்தமான நிலத்தில் நல்ல நாள் பார்த்து பூமி பூஜை போட்டார் ரவி அப்பாசாமி. அடுக்குமாடி வீடு மளமளவென்று உயர்ந்தது. கூடவே பிரச்னையும் வளர்ந்தது. 2006_ம் ஆண்டு தொடக்கத்தில் ரவி அப்பாசாமிக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஓலை ஒன்று வந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போனார் அவர்.

காவியுடை அணிந்து ஆன்மிகவாதியாய் வலம் வந்த பெருமாள்சுவாமி ரிஷியா இப்படிச் செய்துள்ளார்? என்று பதைத்துப் போனார் ரவி அப்பாசாமி. ஓலைக்கு அடுத்து அவருக்குத் தொடர்ந்து வந்த மிரட்டல்களைப் பார்த்து மிரண்டு போன அவர்இ பெருமாள் சுவாமி ரிஷி ‘கடவுள் பாதி... மனிதன் பாதியல்ல’ அவர். பக்கா கிரிமினல் என்பதைப் புரிந்து கொண்டார்.

அன்றிலிருந்து கடந்த 15_ம் தேதி வரை பெருமாள் சாமிக்கு எதிராக ரவி அப்பாசாமி நடத்தி வரும் போராட்டத்தை விவரித்தார்இ அவரது நெருங்கிய உறவினர் ஒருவர். அதில்இ பெருமாள்சாமியின் மிரட்டலும்இ மோசடியும் அதிர வைத்தன.

‘‘பெருமாள்சாமியிடமிருந்து வாங்கிய நிலத்தில்இ அடுக்குமாடிக் கட்டடத்தைக் கட்டி வருகிறார் அப்பாசாமி. கட்டடம் பாதி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த பெருமாள் ரெட்டி என்பவரிடமிருந்து அப்பாசாமிக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில்இ ‘கடந்த 2004_ம் ஆண்டே பதினான்கு கோடி ரூபாய்க்கு பெருமாள் சாமியிடமிருந்து நான் நிலத்தை வாங்கி விட்டேன். ஆனால்இ நீங்கள் (அப்பாசாமி) பெருமாள் சாமியை மிரட்டி எனக்குச் சொந்தமான நிலத்தைப் பதிவு செய்து கட்டடம் கட்டி வருகிறீர்கள். அது சட்டப்படி செல்லாது’ என்று குறிப்பிட்டிருந்தார் பெருமாள் ரெட்டி.

அதைப் படித்துப் பார்த்த அப்பாசாமி மயங்கி விழாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பெருமாள் ரெட்டி பத்திரப்பதிவு செய்தது உண்மையா? என்பதைப் பற்றி விசாரித்தபோதுதான் பெருமாள்சாமியின் கோர முகம் வெளிச்சத்திற்கு வந்தது. தனது உறவினரான பெருமாள் ரெட்டி என்பவரின் பெயரில் போலிப் பத்திரம் தயாரித்துஇ அப்பாசாமிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப் போட வைத்த மோசடித் திட்டம் அம்பலமானது. அவர்கள் பாணியில் செயல்பட ரவி அப்பாசாமிக்கு விருப்பமில்லை.

அதனால்இ தனக்குத் தெரிந்த தொழிலதிபர்கள் மூலம் பெருமாள்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ரவி அப்பாசாமி. அப்போது நிலத்தின் விலைஇ கடந்த இரண்டாண்டுகளில் எக்குத்தப்பாக உயர்ந்து விட்டது. அதனால் தனக்குக் கூடுதலாக அறுபது கோடி ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார் பெருமாள்சாமி.

அவருடைய கோரிக்கை நியாயமற்றது என்றனர் நடுநிலையாளர்கள். அதை ஒரு பொருட்டாக மதிக்காத பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர்இ தொடர்ந்து ரவி அப்பாசாமியை அறுபது கோடி ரூபாய் தர வேண்டும். அதுவும் கறுப்புப் பணமாகத் தர வேண்டும் என்று மிரட்டினார்கள்.

தன் வாழ்நாளில் இதுபோன்ற நம்பிக்கை மோசடியைப் பார்த்தறியாதஇ மிரட்டலைச் சந்தித்திராத ரவி அப்பாசாமிஇ பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாம்பலம் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார்இ ரவி அப்பாசாமியிடமே பஞ்சாயத்துப் பேசினார்கள். ‘பெருமாள்சாமி சொல்கிறபடி பணத்தைக் கொடுத்து விடுங்கள்’ என்று போலீஸார் வற்புறுத்தினார்கள். அதற்கு ரவி சம்மதிக்கவில்லை.

அப்போது போலீஸார்இ ‘பெருமாள் சாமியைப் பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்று கூறியதுடன்இ பெருமாள்சாமியின் கடந்த கால வரலாற்றைக் கூறினார்கள். அதைக் கேட்டு நிலைகுலைந்து போனார் ரவி அப்பாசாமி!’’ என்றார் அந்த உறவினர். அவரின் உடல் வியர்த்துக் கொட்டியது.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேசினார் அந்த உறவினர்.

‘‘பெருமாள்சாமி பார்ப்பதற்குத்தான் சாமியார் மாதிரி இருப்பார். ஆனால்இ அவரின் மறுபக்கத்தைப் பார்த்தால்இ அவர் மீதுள்ள வழக்குகள்தான் அவரின் சுயரூபத்தைக் காட்டும். அவருடைய இன்ஜினீயரிங் கல்லூரியில் போலி ஆவணம் மூலம் மாணவர்களைச் சேர்த்ததாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் செங்கல்பட்டு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தபோதுஇ காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை தவிரஇ ‘அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அதனால்இ அவரோடு மோதுவதைவிட அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்து கொள்ளுங்கள்’ என்று கடமையை மறந்து போலீஸார் அறிவுரை கூறினார்கள். அதை ரவி அப்பாசாமி ஏற்காமல்இ பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் மோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையில்இ பெருமாள்சாமியின் மோசடி அம்பலமானது. அதனால்இ அவர் மீதும்இ அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு மாம்பலம் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனால்இ வேறு வழியின்றித்தான் போலீஸார் கடந்த 15_ம் தேதி இரவு பெருமாள்சாமியைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால்இ அதற்குள் அவரும்இ அவரது மனைவி ராஜேஸ்வரியும் தலைமறைவாகி விட்டனர்.

வீட்டிலிருந்த அவருடைய மகன் சந்தோஷ் மற்றும் பெருமாள் ரெட்டியை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்!’’ என்றார் ரவி அப்பாசாமியின் உறவினர்.

போலீஸ் விசாரணையிலிருந்த சந்தோஷைச் சந்திக்க முயன்ற நம்மைஇ அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால்இ சந்தோஷின் உறவினர்கள் கும்பல் கும்பலாகச் சென்று சந்தோஷிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

போலீஸ் நிலையத்திற்குள் சந்தோஷ§க்கு ராஜ உபசாரம் நடந்து கொண்டிருந்தது. கைது செய்யப்பட்ட சந்தோஷை படம் எடுக்கக்கூட போலீஸ் அனுமதிக்கவில்லை.

மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு போலீஸ் ஏன் இப்படிப் பணிவிடை செய்கிறது? சந்தேகத்துடன்இ நமக்கு அறிமுகமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். கேலியும். கிண்டலுமாக அவர் பேசியதைக் கேட்டு நமக்கும் வியர்த்துக் கொட்டியது.

‘‘பெருமாள்சாமி யாரென்று தெரியுமா உங்களுக்கு? அவருடைய மகளைத்தான் தி.மு.க.இ அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகன் திருமணம் செய்துள்ளார். இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே பெருமாள்சாமி மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டியதற்குக் காரணம் அவர் தி.மு.க.இ அமைச்சரின் சம்பந்தி என்பதால்தான்.

அதையும் மீறி இப்போது மட்டும் எப்படி பெருமாள்சாமி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துஇ அவரது மகனையும்இ உறவினரையும் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது உங்களுக்கு வியப்பாகத் தெரிகிறதா?

அதற்கும் காரணம் இருக்கிறது. பெருமாள்சாமி மீது புகார் கொடுத்துள்ள ரவி அப்பாசாமியும் சாதாரண மனிதரல்ல. சென்னையில் செல்வாக்கு மிக்க தொழில திபர். அரசியல் தலைவர்கள் பலருடனும் அவருக்கு மிக நெருக்கமுண்டு. ஆனால்இ இந்த வழக்கின் ஆரம்பத்திலிருந்தே அவர் போலீஸையும்இ நீதிமன்றத்தையும் நம்பினார். முதலில் போலீஸாரிடம் போனார். ஆனால்இ அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்இ நீதிமன்றத்திற்குப் போய் பெருமாள்சாமி மீதும்இ அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு வாங்கினார்.

அதைக் காட்டிய பிறகும் மாம்பலம் போலீஸார் மௌனம் காட்டினார்கள். அதனால்இ வேறு வழியின்றி முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்றுஇ ரவி அப்பாசாமியும் அரசியல் தலைவர் ஒருவரிடம் தஞ்சமடைந்தார்.

அவர் சர்வ வல்லமை படைத்தவர். மதுரையை மட்டுமல்லஇ தமிழகத்தையே ஆட்டிப் படைப்பவர். அவர் ரவி அப்பாசாமிக்கு ஆதரவாக செல்போனை ஆன் செய்தார். ஆடிப்போயினர் மாம்பலம் போலீஸார். உடனடியாக பெருமாள்சாமியின் மகனையும்இ அவரது உறவினரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டது போலீஸ்.

தலைமறைவாய் இருக்கும் பெருமாள்சாமிஇ தனது சம்பந்தி மூலம் வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளார். சமரசத்திற்கு ரவி அப்பாசாமியும் பச்சைக்கொடி காட்டி விட்டதால்இ பெருமாள்சாமி மற்றும் இதர குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்பே இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!’’ என்றார் அந்த அதிகாரி.

kumudam.com

பணக்காரனுக்கு 10 வழி.

ஏழைகள்தான் பாவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.