Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜே.வி.பியின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக பணிப் புறக்கணிப்பு

Featured Replies

ஜே.வி.பியின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக பணிப் புறக்கணிப்பு

ஜே.வி.பி பிரதான அங்கம் வகிக்கும் தேசிய வர்த்தக சங்கம் சிறீலங்கா அரசைக் கண்டித்து, நாடு தழுவிய ரீதியில் பொதுப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

சிறீலங்கா அரசுத் தலைவர் தேர்தலில், தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறி இருப்பதைக் கண்டித்து, இந்தப் பணிப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

தேசிய வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அடுத்த மாதம் 24ஆம் திகதி கூடும்போது பணிப் புறக்கணிப்பிற்கான திகதி முடிவு செய்யப்படவுள்ளது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தெரிவித்த கருத்துக்களை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் கவனத்தில்கொள்ள தவறி இருப்பதாக, ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது

அரசுக்கு எதிராக நாளை ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

சிறீலங்கா அரசில் இடம்பெற்றுவரும் ஊழலைக் கண்டித்து, நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு இனவாதக் கட்சியான ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊழல் புரிபவர்களைத் தண்டிப்பதற்கும் தவறி இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக நாளை மாலை 4.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக, ஜே.வி.பியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜே.வி.பி சார்பான தொழிற்சங்கங்கள், மற்றும் பல இனவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்

'தொலைத்தொடர்பு பங்கு விற்பனையில் 10 மில்லியன் டொலர் ஊழல்': விமல்

"சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை மலேசியாவின் நிறுவனம் ஒன்றின் தமிழ் வர்த்தகருக்கு விற்பனை செய்ததில் அரசில் உள்ள சக்திவாய்ந்த நபர் ஒருவர் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக பெற்றுள்ளார்."

ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"நாட்டின் நிதியமைச்சரான அரச தலைவரும், நிதித்துறை செயலாளரான பி.வி.ஜெயசுந்தரவும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஜப்பானின் என்ரீரீ நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை மலேசியாவின் நிறுவனத்திற்கு விற்க எடுத்த முடிவை நாடாளுமன்ற அமைச்சர்கள் அனுமதித்தது தவறானது. ஏனெனில் இதில் ஒரு ஆளுமையுள்ள மனிதர் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்" என்றார் விமல் வீரவன்ச.

அந்த சக்திவாய்ந்த மனிதரின் பெயரை தெரிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மற்றும் வீடமைப்பு சுகாதரத்துறை அமைச்சர் நிமல் சிறீபால டீ சில்வா ஆகியோர் வீரவன்சாவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச தானும் அவரின் பெயரை அறிய முற்பட்டதாகவும், ஏனெனில் அரசும் அவரது பெயரை அறிய விரும்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும் மகிந்த சிந்தனையில் அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதில்லை என கூறிவிட்டு தற்போது அரசு ஏன் அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்தி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

http://www.eelampage.com/

  • தொடங்கியவர்

மிக்-29 பேரம் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு ஊழல்: ஐ.தே.க

மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தல் தொடர்பாக அரச தலைவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரல் வெளியிடப்படும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. எனவே அங்கு ஒரு பெரும் ஊழல் நடைபெற உள்ளதனையே இது காட்டுகின்றது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அரசு மீதான இந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் சகல ரத்நாயக்க ஆகியோர் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யார் பொய் கூறுகின்றார் என்பது பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் நாள் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 'மிக்-29 ரக உயர் தொழில்நுட்ப வானூர்திகள் படையினருக்கு தேவையில்லை' என கோத்தபாய தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பாவனையில் உள்ள மிக்-27 ரக வானூர்திகளை அகற்றிவிட்டு மிக்-29 ரக வானூர்திகளை படையில் இணைக்கப்போவதாக மகிந்த கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த முடிவு வான்புலிகளின் தாக்குதலினால் எடுக்கப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மிக் வானூர்திகளை கொள்வனவு செய்யும் நடைமுறையில் ஏன் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவில்லை. எனவே தான் இந்த பேரத்தில் பெருமளவிலான ஊழல்கள் நடைபெறலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கடந்த முறை நடைபெற்ற மிக்-27 ரக வானூர்திகளின் கொள்வனவில் 600 மில்லியன் ரூபாய்கள் மோசடி நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர்களான மக்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் லஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். தற்போதைய தொகை எவ்வளவு என எண்ணிப்பார்க்க முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் வான்கலம் Zlin Z-143 இலகுரக வானூர்தி, அது சாதாரண வான் கண்காணிப்புக்கே பயன்படுத்தப்படுவதுண்டு. அதன் அதிகூடிய தூரவீச்சு 2,400 கி.மீ. இரகுரக வான்கலங்கள் 4,000 மீற்றர் உயரம் பறக்கும் போது மிக்-29 18,000 மீற்றர் உயரத்தில் பறக்கவல்லது.

மிக் வானூர்தி செக்கனுக்கு 330 மீ வேகத்துடன் உயரும் போது இலகுரக வானூர்திகள் செக்கனுக்கு 8 மீ வேகத்துடன் உயருபவை. மாட்டு வண்டிலுடன் ஓடுவதற்கு மெசடிஸ் பென்ஸ் தேவைதானா? என அவர்கள் அங்கு தெரிவித்தனர்.

http://www.eelampage.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.