Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு லண்டனில் இருந்து குமரன்

Featured Replies

தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு லண்டனில் இருந்து குமரன்

லண்டன், மே 23

ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு

பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடன் பிறவுணை அவரது (நிதி அமைச்சு) அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது.

அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப்பதற்குத் தமது முழு மையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக, இப்போதைய நிதி அமைச்சரும்,புதிய பிரதமராக ப் பதவியேற்க இருப்பவருமான கோடன் பிறவுண் உறுதியளித்தார்.

கோடன் பிறவுணைச் சந்தித்த பிரமுகர்கள் குழு இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களை அவருக்கு எடுத்து விளக்கியது. தமிழர்களது நியாயபூர்வமான உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் அடைவதற்கு உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இலங்கை விவகாரத்தில் தீர்வு ஒன்றைக் காண சர்வகட்சிப் பிரதிநிதி குழு ஒன்றைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நியமித்துள் ளது. இக்ககுழு விரைவில் இலங்கை வரத் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலேயே புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் கோடன் பிறவுணை இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் குழு நேற்றுச் சந்தித்துப் பேசியது.

இலங்கை அரசு விடுதலைப்புலிகள் நோர்வேத் தரப்பு ஆகிய முத்தரப்புகளும் பங்குகொள்ளும் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ளமையையும் தூதுக்குழு அவரின் கவனத்துக் கொண்டு வந்தது.

தாம் பதவியேற்றபின் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுத் தற்போது எடுக்கப்படும் முயற்சிகளை தொடர உள்ளதாகவும் அவர் உறுதி கூறியதாக தமிழ்ப் பிரமுகர்கள் குழுவின் பிரதிநிதி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் இன்று பதவி விலகுவார் என முன்னர் அறி விக்கப்பட்டிருந்தது.

எனினும் அடுத்த மாதம் 16ஆம் திகதியே அவர் பதவி விலக இருப்பதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பதவி விலகியதும் தற்போதைய நிதி அமைச்சரும் தொழிற்கட்சியின் நாடாளு மன்றக் குழுத் தலைவருமாக நியமிக்கப்பட்டுள்ளவருமான கோடன் பிறவுண் பிரதமராகப் பதவியேற்கவிருக்கின்றார்.

லண்டனில் தமிழ்மக்கள் பெரும் எண் ணிக்கையில் வாழும் பகுதியில் இருந்து இவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார் என் பது குறிப்பிடத்தக்கது.

உதயன்

தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பும் ஒத்துழைப்பும் உண்டு : புதிய பிரிட்டிஷ் பிரதமர்.

ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடன் பிறவுணை அவரது அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது. அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப்பதற்குத் தமது முழுமையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக, இப்போதைய நிதி அமைச்சரும்,புதிய பிரதமராகப் பதவியேற்க இருப்பவருமான கோடன் பிறவுண் உறுதியளித்தார்.

கோடன் பிறவுணைச் சந்தித்த பிரமுகர்கள் குழு இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களை அவருக்கு எடுத்து விளக்கியது. தமிழர்களது நியாயபூர்வமான உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் அடைவதற்கு உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இலங்கை விவகாரத்தில் தீர்வு ஒன்றைக் காண சர்வகட்சிப் பிரதிநிதி குழு ஒன்றைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நியமித்துள்ளது. இக்ககுழு விரைவில் இலங்கை வரத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலேயே புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் கோடன் பிறவுணை இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் குழு நேற்றுச் சந்தித்துப் பேசியது.

சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் நோர்வேத் தரப்பு ஆகிய முத்தரப்புகளும் பங்குகொள்ளும் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ளமையையும் தூதுக்குழு அவரின் கவனத்துக் கொண்டு வந்தது. தாம் பதவியேற்றபின் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுத் தற்போது எடுக்கப்படும் முயற்சிகளை தொடர உள்ளதாகவும் அவர் உறுதி கூறியதாக தமிழ்ப் பிரமுகர்கள் குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் இன்று பதவி விலகுவார் என முன்னர் அறி விக்கப்பட்டிருந்தது.எனினும் அடுத்த மாதம் 16ஆம் திகதியே அவர் பதவி விலக இருப்பதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் பதவி விலகியதும் தற்போதைய நிதி அமைச்சரும் தொழிற்கட்சியின் நாடாளு மன்றக் குழுத் தலைவருமாக நியமிக்கப்பட்டுள்ளவருமான கோடன் பிறவுண் பிரதமராகப் பதவியேற்கவிருக்கின்றார்.

லண்டனில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதியில் இருந்து இவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.