Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தை புரட்டிப்போட்ட மிக மோசமான நோய்கள்

Featured Replies

தற்போது கொரோனாவால் முழு உலகமே பாதிக்கப்பட்டு பயந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.சைனாவின் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கிறது.அரசாங்கம் முழு மூச்சுடன் வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கமுயன்றுகொண்டிருக்கிறது  இதற்கு நாம் ஒத்துளைப்புதரும்வகையில் எம்மை வீடுகளில் தனிமைப்படுத்திவைத்திருப்பது மிக அவசியம் ஏனென்றால் இந்த வைரஸ் எம்மூடாகவே அடுத்தவர்களுக்கு பரவும்தன்மையைக்கொண்டது எமது அலட்சியப்போக்கால் எம் வீடு மாத்திரமல்ல ஒரு ஊரே இன் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே இதுபோன்ற அவசரகால நிலமையின்போது சமயவழிபாடுகள் போன்றவற்றை வீட்டில் இருந்தே நாம் கடற்பிடிப்பதும் பொது இடங்களில் கூடாமல் இருப்பதும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அரசுக்கு நாம் உதவுவதும்தான்  நாம் எமது நாட்டிற்குசெய்யும் கடமையாகும்.கொரோனா தொடர்பாக 1981இல் டீன் கூன்ஸ் என்பவரால் வெளியிடப்பட்ட தி ஐஸ் ஆப் டார்க்னெஸ்  என்ற நாவலில் சைனாவில் இருந்து அமேரிக்க்கவிற்கு வந்த நபரினால் அமெரிக்காவில் ஒரு வைரஸ் பரப்பப்படுகின்றது அது சைனாவின் வுகான் மாகாணத்தில் இருக்கும் RDNA பரிசோதனைகூடத்தில் விஞ்ஞானிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற விடயங்களை உள்ளடக்கியதாக நாவலின் கதை செல்கின்றது 
25293304-0-image-a-38_1582841640623.jpg
 
ஆச்சரியப்படும்படியாக வைரஸிற்கு   வுகான் 400 என்றும் கதாசிரியர் பெயர்சூட்டியிருந்தார் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விடயமென்னவென்றால் 1981 இல் எப்படி வுகானில் இருந்து இப்படி ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் ஆட்டிப்படைக்கப்போகின்றது என்பதை அவர் எதிர்வுகூறினார் என்பதுதான்.ஆனால் விடயம் இதுதான் 7 ஆம் அறிவு திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டபோது போதிதர்மன் ஒரு தெலுங்கர் என்றுதான் டப்செய்யப்பட்டது தமிழில் வெளியிடப்பட்டபோது தமிழன் என்று வெளியிடப்பட்டது இது ஒரு பிஸ்னஸ் தந்திரம் இதே போல் இந்த நாவல் ரஷ்யாவில் வெளியிடப்பட்டபோது ரஷ்யாவில் பிரபலமாக தொழிற்பட்ட உயிரியல் ஆய்வுகூடமான கொர்க்கி ஆய்வுகூடத்தில் இந்த வைரைஸை உருவாக்குகிறார்கள் என்பதாக  நாவலின் கதை செல்லும் இதனால் ரஷ்ய னாவலில் கொர்க்கி 400 என வைரஸிற்கு பெயர் வைத்திருந்தார் கதாசிரியர் இதே நாவல் சைனாவில் வெளியிடப்பட்டபோது வுகான் 400 என பெயரிடப்பட்டிருந்தது எனவே இது ஒரு தற்செயலான நிகழ்வுதான்
Custom-dimensions-1200x628-px-80-1.jpeg
 
 
 
இப்போது உலக வரலாற்றில் உலகை புரட்டிப்போட்டு  லட்சக்கணக்கான மக்களைக்கொன்ற கொடிய நோய்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம்.
 
பிளேக் நோய்
 
இது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவியது.
 
கான்ஸ்டான்டிநோபிலைத் தலைநகராகக் கொண்டு, பைசான்டைன் பேரரசை ஆட்சி செய்த ரோமப்பேரரசரான ஜஸ்டினியன் காலத்தில் பரவிய அந்த பிளேக் நோய் (541-542 CE), இன்று 'ஜஸ்டினியன் பிளேக்' (Justinian Plague) என அழைக்கப்படுகின்றது. இது ஏறக்குறைய 30-50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது.
 
 
 
14 ஆம் நூற்றாண்டில் (1346-1353) 'பிளாக் டெத்' (Black Death) என்ற பிளேக் நோய் எறத்தாழ 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காவு கொண்டது. இது ஐரோப்பிய மொத்த மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டிற்கும் (60%) மேலாகும். பின்னர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மீண்டும் மீண்டும் இங்கும் அங்குமாக இந்நோய் உலகெங்கிலும் தோன்றி இருக்கின்றது. 'த கிரேட் லண்டன் பிளேக்' (The Great London Plague) கடைசியாக 1664-66 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பரவியது. லண்டனில் ஏற்பட்ட 'மாபெரும் லண்டன் தீ'யினால் (The Great London Fire), (1666 செப்டம்பர் 2 லிருந்து 5 வரை) தலைநகரில் பிளேக் கட்டுக்குள் அடங்கியது.
 
 
 
இந்தியாவிலும் 1896-1914 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, காலரா, இன்புளூயன்சா மற்றும் பிளேக் போன்ற நோய்த் தொற்றுகளால் பம்பாயில் மட்டும் 1,83,984 மக்கள் இறந்தனர். பிளேக், கடைசியாக குஜராத் மாநிலத்தின் சூரத்தில், 1994 ஆம் ஆண்டில் பரவி 56 உயிர்களை பலி கொண்டது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.