Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி மாநாடு,16 பேருக்கு கொரோனா தொற்று, coronavirus, Delhi conference, Tamil Nadu, positive cases, corona

சென்னை : டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


 


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
'தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் மூன்று நாட்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்.
பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இஸ்லாமிய மாநாட்டிற்காக, டில்லி சென்று வந்தவர்களில், 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது, தாமாகவே முன்வந்து, சுகாதாரத் துறையிடம் பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்களைப் பற்றிய விபரம் அறிந்த மற்றவர்கள், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவைக்கு ரெட் அலர்ட்

டில்லியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய, 82 பேரில் கொரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெரும்பாலானோருக்கு பாதிப்பு முதல்கட்ட ஆய்வில் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவத்துறை வட்டார தகவலின் படி, கோவையில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்தம் , 30 ஐ தாண்டலாம் என அஞ்சப்படுகிறது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512218

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.