Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’நிபுணர்களுடன் கலந்துரையாடுக’

Featured Replies

COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கேயால் வரையப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதாரமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நிபுணர்களுடன்-கலந்துரையாடுக/175-247915

  • தொடங்கியவர்

இறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை

மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதிசடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் ஏற்கனவே உள்ள விரிசல்களை ஆழமாக்க முயலக்கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக துயரத்தில் உள்ள உறவினர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் தங்கள் குடும்பத்தவர்களிற்கு இறுதி மரியாதையை செலுத்தவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வழிகாட்டுதல்களிற்கு ஏற்ப இது சாத்தியமாக உள்ள பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மார்ச் 27 ம் திகதி வெளியிட்ட அறிவுறுத்தல்கள் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை அடிப்படையானவையாக காணப்பட்டன.

இதில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பது அல்லது தகனம் செய்வது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் மார்ச் 31 ம் திகதி கொரோன வைரசினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் விதத்தில் இலங்கை அரசாங்கம் தனது கொள்கையை மாற்றியமைத்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களில் இருந்து விலகியமைக்கான காரணத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக இந்த நடைமுறைகள் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு அவசியமற்றவை என்ற கரிசனை எழுந்துள்ளது.

இலங்கையில் 9 வீதமாக காணப்படும் முஸ்லீம் சமூகத்தினரிற்கு இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் உடல்களை புதைப்பது அவசியம் என கருதுகின்றனர்.

நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் உறவினர்கள் சமூக தலைவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் எரியூட்டப்பட்டது.

உயிரிழந்த இரண்டாவது முஸ்லீம் பிரஜையின் உடலும் தகனம் செய்யப்பட்டது.

பலவந்தமாக தகனம் செய்யப்படுவது முஸ்லீம் மக்கள் மத்தியில் தாங்கள் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படுகின்றோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத மற்றும் கலாச்சார உணர்வுகளை கருத்தில் கொள்ளும்போது இலங்கை அரசாங்கம் மத இறுதிசடங்குகளும் நடைமுறைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கின்றது.

மேலும் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள மன்னிப்புச்சபை குறிப்பிட்ட சமூகத்தினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.

கொவிட் 19 குழுக்களிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை,அனைத்து மதத்தவர்களும்,அதனால் பாதிக்கப்படடுள்ளனர் என பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/79227

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.