Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Thursday, 24 May 2007

அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார்.

தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார்.

அந்த உரையாடலில் நோர்வே தூதுவர் வெளிப்படுத்திய கருத்துகளையும் தற்போது வடக்கு -கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள நிலைமைகள் குறித்தும் தமிழ்நாதத்துக்கு அளித்த பேட்டியில் அவர் விவரித்தார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:

நோர்வே

அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் விலகமாட்டோம் என்று நோர்வே உறுதியளித்துள்ளது. இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பௌயர் கூறினார்.

சிறிலங்கா அனைத்துலக சமூகத்துக்கு ஒரு முகத்தைக் காட்டிக்கொண்டு பின்வழியாக பல வேலைகளைச் செய்வதாக தாங்கள் அறிவதாகவும் நோர்வே குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்த நல்லெண்ணத்தையும் நோர்வே வெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இப்போது சிறுவர்களைப் படையில் சேர்ப்பதில்லை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை, கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கையின்போது அவர்கள் நடந்துகொண்ட விதம் எங்களுக்குத் திருப்தி அளித்துள்ளது. இந்த வகையில் புலிகளை மிகவும் முன்னேற்றத்துடன் நோக்குகின்றோம் என்று கூறினார் பௌயர்.

மீள் குடியேற்றம்

சிறிலங்கா அரசாங்கம் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இராணுவ மயப்படுத்தப்பட்ட இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த ஒன்றரை லட்சம் பேரில் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் மீள் குடியேற்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். ஏனைய பகுதிகளில் படிப்படியாக நடைபெறுகிறது.

வாகரையில் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். தற்போது படுவான்கரையில் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. மீள்குடியேற்றம் என்றால் கௌரவமான முறையில் மக்கள் குடியேற்றப்பட வேண்டும். அவர்கள் வாழ்வதற்கான சகல அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்கள் அமைத்துத் தர வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாகவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இராணுவ முகாம்களுக்கு அருகில், சில இடங்களில் இராணுவ முகாம்களில் கூட குடியேற்றப்படுகிறார்கள்.

படுவான்கரையில் தொழில்களை இழந்த நிலையில்தான் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். அங்கு 24-க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள், 5 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டவட்டமாக ஒரு இராணுவ மயப்படுத்தலைத்தான் அரசு செய்து வருகிறது. போர் நிறுத்ததை அரசாங்கம் மீறியுள்ளது.

மக்கள் அங்கு சுதந்திரமாக வாழமுடியாது. மீள்குடியேற்றம் என்று இதைச் சொல்லமுடியாது. அங்கு வீடுகள் உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள், 106 கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள உருவச்சிலைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இராணுவமும் காடையர்களும் சேர்ந்தே இந்தக் கொள்ளைகளைச் செய்கிறார்கள். எறிகணைத் தாக்குதல்களால் வயல்வெளிகள் முற்றும் முழுதாக சுடுகாடாக மாறியுள்ளது. இந்நிலையில் தொழில் வாய்ப்போ, வாழும் வசதியோ இல்லாமல் மக்கள் கட்டாயமாகக் குடியேற்றப்படுகிறார்கள். மக்கள் முழுமையான விருப்பத்துடன் செல்வது என்பது மிகக் குறைவு.

இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களுடன் அரசாங்கம் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யவில்லை. கூட்டங்களும் நடத்தவில்லை. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அராஜகமான முறையில் செயற்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்களை இணைக்கக்கூடாது. அவர்களைத் தனிமைப்படுத்தி தங்களுடைய அரசியல் வேலைத்திட்டக்களைச் செய்யும் நோக்கிலேயே வேலைகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை நேரடியாகச் சென்று பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுளள்து. எங்கள் பணியைச் செய்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பை அரசிடம் கேட்டிருந்தோம் ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களது கோரிக்கை ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. இது மோசமான நிலைமை. அரசு திட்டமிட்டுச் செய்யும் நடவடிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

வடக்கில் மாணவர்கள் காணாமல் போகிறார்கள். வடக்கு - கிழக்கு முழுவதுமே ஆட்கடத்தல் நடைபெறுகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து அனைத்துலக சமூகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லை. இது சிறிலங்கா அரசுக்கு உற்சாகத்தையும் ஆதரவையும் வழங்குவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

இந்நிலையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மந்தமாக இருக்கிறது. அக்குழு இருக்கிறதா என்ற ஐயம் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

தாயகத்தில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள்

சிறிலங்கா இராணுவத்தினாலும் ஒட்டுக்குழுக்களாலும் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன. இடம்பெற்று வருகின்றன. இது குறித்து பாரிய அளவில் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம்.

சிறிலங்கா அரசுக்கு பாரிய அழுத்ததைக் கொடுப்பதால் மக்களின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க முடியும் என நாங்கள நம்புகிறோம்.

மக்களுக்கு உதவி, நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா அரசு பெறுகின்ற நிதியுதவி அனைத்தும் மக்களைக் கொல்வதற்காக, இராணுவ அபிவிருத்திக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

எந்த நாடும் உதவி செய்வதாக இருந்தால், அது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடியதாகச் செய்ய வேண்டும். அனைத்துலக சமூகம் மாற்றாந்தாய்ப் பார்வையாக தமிழ் மக்கள் நிலைமையைப் பார்ப்பது வேதனையாகத்தான் இருக்கிறது.

புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்

எங்கள் மக்களைக் காப்பாற்ற, எங்கள் பலத்தை நிரூபிக்க, எங்கள் படையை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இதற்காக பலர் தங்கள் உழைப்பை, நேரத்தை செலவழித்து வருகிறார்கள். தொடர்ந்து செய்ய வேண்டும்.

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். தொடர்ந்தும் எங்களது பலம் வளர வேண்டும். அதற்காவும் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் இடம்பெயர்நது வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்.

அவரவரர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அரசுகளுக்கு இது குறித்து வலியுறுதத் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறு அளவிலான சிங்கள் மக்கள், சிங்கள அமைப்புக்களின் பின்னணியுடன் தமிழ் மக்களுக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் எதிராக தீவிரமான பிரச்சார நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள்.

எனினும் தமிழ் மக்களிடம் எழுச்சியும் போராட்டமும் மிகவும் குறைந்த அளவாகத்தான் உள்ளது. எதையும் நாம் பலவந்தப்படுத்தி செய்ய முடியாது. அவரவர்கள் தங்களது மனச்சாட்சியைத் தட்டிக் கேட்க வேண்டும். மக்கள் உணரவேண்டும். அவர்கள் எழுச்சிதான் எங்களுக்கு கைகொடுக்கும் வலிமை சேர்க்கும் என்றார் அவர்.

தமிழ்ஓசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.