Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தப்பட்ட மாணவருக்காக தியாகம் செய்வதற்குத் தயார் மாணவர் ஒன்றியம் அறிக்கை

Featured Replies

கடத்தப்பட்ட மாணவருக்காக தியாகம் செய்வதற்குத் தயார் மாணவர் ஒன்றியம் அறிக்கை

யாழ்ப்பாணம்,மே.24

கடத்தப்பட்ட எமது சகோதரர்களின் விடுதலைக்காக நாம் எத்தகைய தியா கத்தினையும் செய்வதற்கு குடாநாட்டு மாணவர் சமூகம் காத்திருக்கிறது.

இவ்வாறு தெரிவித்திருக்கிறது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம். மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட் டத்தை இடைநிறுத்துவது தொடர்பாக நேற்று விடுத்த அறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

கடந்த 04.05.2007 அன்று இரவு ஊர டங்கு வேளையில் எமது சக மாணவர் களான சுந்தரலிங்கம் யசோதரன், குக ராஜன் கண்ணன், நாகராசா வேணு காணன் ஆகிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து விசாரணைக்கென கூட்டிச் செல்லப் பட்டு இதுவரை விடுவிக்கப்பட வில்லை.

மேற்படி எமது சக மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியு றுத்தி கடந்த 08.05.2007ஆம் திகதி முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை குடாநாட்டின் உயர் கல்விச் சமூகத்தினரும், அரச அதிகாரி களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் தொடர்ச்சியாக அரசிடம் வலி யுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஸ்ரீலங்காவின் ஜனாதி பதியும் கடத்தப்பட்ட மாணவர்கள் விடு விக்கப்படுவதற்குரிய நடவடிக்கை களை மேற்கொள்வதாக பத்திரிகை ஆசி ரியர்களுக்கு உறுதி அளித்திருந்தார். யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியும் மேற்படி மாணவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதியினை சமூகப் பெரியவர்களுக்கு வழங்கியிருந்தார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத் திய விவாதத்திற்கு பதிலளித்த இலங் கைப் பிரதமரும் மேற்படி மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

வழமையாக நடைபெறுவது போன்றே மாணவர்கள் கடத்தலின் பின்னர் அரசு தந்த வாக்குறுதிகள் ஏமாற்றத்தினைத் தருமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தி னாலும், சற்று நம்பிக்கை கொண்டு தற் காலிகமாக எமது பகிஷ்கரிப்பு போராட் டத்தினை இடைநிறுத்தி பாடசாலை களுக்கு சமுகமளித்து எம்முடன் ஒன் றாக இருந்து கல்விகற்று இன்று முக வரி தெரியாதவர்களாகியிருக்கும் மூன்று மாணவர்களின் விடுதலை யினை விரைவுபடுத்த வேறு விதத் தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வழிகளூடாக முயற்சி செய்வோம்.

கடத்தப்பட்ட மாணவர்கள்

விடுவிக்கப்படாவிட்டல்

குறுகிய நாள்களில் எமது சகோத ரர்கள் விடுவிக்கப்படாமல் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளித்தெரியப் படுத்தப்படாமல் படைத்தரப்பு இழுத் தடிப்புச் செய்யுமானால் மீண்டும் எமது பகிஷ்கரிப்பு போராட்டத்தினை ஆரம் பித்து விஸ்தரிப்போம்.

தவித்துக்கொண்டிருக்கும் கடத்தப் பட்ட எமது மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கு எமது ஆறுதலினை தெரிவிப்பதோடு எமது சகோதரர்களின் விடுதலைக்காக எத்தகைய தியாகத்தி னையும் குடாநாட்டு மாணவர் சமூகம் செய்ய காத்திருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

அச்சுறுத்தல்களின் மத்தியிலும் எம்மோடு குரல்கொடுத்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்வி மான்கள், அதிபர் கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனை வருக்கும் எமது நன்றியைத் தெரிவிப்ப தோடு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட விருக்கும் போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகின்றோம். என்றுள்ளது. (அ)

உதயன்

உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் அப்பாவித் தமிழ் மாணவர்களை விடுவிக்க ஜனாதிபதியால் கூட முடியவில்லை என்றால் இலங்கையில் இரானுவ அரசு தான் ஆட்சி செய்கிறது என்ற நிலமை கண்கூடாகத் தெரிகிறது.....

"கருப்பையிலிருக்கும் குழந்தை கூட புலி என்று பயப்பிடும் மூட சிங்களம் "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.