Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

கொரோனா வைரஸ்பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது.
பதிவு: ஏப்ரல் 06,  2020 08:31 AM
புதுடெல்லி
 
இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஐ எட்டி விட்டது.
 
மராட்டியத்தில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 748 ஆக உயர , பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.
 
கேரளாவில் 306 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.தெலங்கானாவில் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக அதிகரிக்க, உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. உத்தரபிரதேசத்தில் 227 பேரும், ராஜஸ்தானில் 200 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
ஆந்திராவில் 161 பேரும், கர்நாடகாவில் 144 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குஜராத்தில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது.
 
நேற்றைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் 274 மாவட்டங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவில் அடுத்து வரும் சிலநாட்கள் மிக மிக முக்கியமானவை என்பதால் யாரும் வீட்டை விட்டு வராமல் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளிநாடு செல்லாத இந்தியர்களுக்கு பரவும் மூன்றாவது கட்டத்தை அது அடையவில்லை.
 
அதனால் அதை தடுப்பதற்கு மத்திய அரசு அவ்வப்போது மாநில அரசுகளுடன் ஆலோசித்து போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா காணொலி மூலம் தொடர்பு கொண்டு அனைத்து மாநில அரசுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
 
ஊரடங்கு பரவலை தடுப்பதற்கு நல்வாய்ப்பாக இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நோய்ப் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸ் பரவல்  கட்டுப்பாட்டு திட்டத்தை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இதில் அதிக பாதிக்கபட்ட  மண்டலங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பகுதிகளை மூடுவது ஆகியவை அடங்கும். பல மாநிலங்களில் கொரோனா மேலும் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது .இதனை கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து 20 பக்கம் கொண்ட திட்டங்களை கொண்ட ஆவணம் தயாரிக்கபட்டு உள்ளது. அது சுகாதார துறை அமைச்சகத்தின் இணையதள்த்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.
 
கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு குறைந்தது நான்கு வாரங்களுக்கு கொரோனாவின்  இன் புதிய பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டால் மட்டுமே ஊரட்ங்கு கட்டுப்பாட்டு உத்தி குறைக்கப்படும் என்று 20 பக்க ஆவணம் கூறுகிறது.
 
அரசு எடுக்க விரும்பும் சில நடவடிக்கைகளில், கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சீல் வைப்பது மற்றும் இந்த பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதும் ஆகியவை அடங்கும்.
 
சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து கொரோனா வழக்குகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தனிமையில் வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சின்  ஆவணம் கூறுகிறது.
 
கொரோனா வைரஸுக்கு இரண்டு மாதிரிகள்  சோதிக்கப்பட்டு இல்லை என்றால்  மட்டுமே நோயாளிகள் வெளியேற்றப்படுவார்கள். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள், மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் கொரோனா கவனிப்புக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள், மேலும் கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
 
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கபட்ட  மண்டலங்களை மூடுவது ஆகும் . இந்த பகுதிகளில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இருக்காது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
 
கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு குறைந்தது நான்கு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திலிருந்து கொரோனா பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டால் கட்டுப்பாட்டுத் திட்டம் எளிதாக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.