Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கொரோனா: 8 மருத்துவர்கள் உட்பட 1075 பேருக்கு பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொரோனா: 8 மருத்துவர்கள் உட்பட 1075 பேருக்கு பாதிப்பு

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வுFAcebook 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார். 

புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார்.

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வுGetty Images

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

தமிழகத்தில் தற்போதுவரை 39,401 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அரசின் கண்காணிப்பில் 162 நபர்கள் உள்ளனர் என்றும் கொரோனா அறிகுறி தென்பட்ட நபர்களிடம் இருந்து 10,655 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

Banner image reading 'more about coronavirus' Banner

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடியாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 50 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குணம் பெற்ற நபர்களின் பிளாஸ்மாவை சேகரித்து ஆய்வு நடந்துவருகிறது என்றார். 

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வுGetty Images

தமிழகத்தில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட 58,189 நபர்களுக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. மேலும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளான நபர்களின் தொடர்பில் இருப்பவர்களையும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டுள்ள நகரங்களாக உள்ள சென்னையில், இன்று புதிதாக 18 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியசெய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்ததாக கோவையில், 22 நபர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 35 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். 

 

மேலும், தமிழகத்தில் 23 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தனியார் சோதனை மையங்களில் சோதனை செய்யப்பட்டால், அதற்கான செலவை அரசு ஏற்கும் என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

 

https://www.bbc.com/tamil/india-52263475

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.