Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை

[25 - May - 2007]

மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் கையாலாகாத்தனமாக, பலவீனமடைந்ததாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கானிடமிருந்து எழுந்துள்ளது.

அவநம்பிக்கைகள், தமக்கிடையிலான பிளவுகளால் சர்வதேச சமூகம் வலுவிழந்துவிட்டது என்று ஐரீன்கான் சாடியிருக்கிறார்.

உலகத்தை ஆபத்து நிறைந்ததாக, மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுவதாக துருவமயப்பட்டதாக மாற்றுவதற்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்களும் ஆயுதக் குழுக்களும் வேண்டுமென்றே அச்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திடமிருந்து எழுந்திருக்கின்றது.

மன்னிப்புச் சபையின் 2006 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை நேற்று முன்தினம் புதன்கிழமை லண்டனில் வெளியிட்டு வைக்கும் நிகழ்விலே மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பான ஆழ்ந்த கவலையும் விசனமும் ஐரீன் கானிடமிருந்து வெளிப் படுத்தப்பட்டுள்ளன.ண்

அதேசமயம், மன்னிப்புச் சபையின் ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பாக புள்ளி விபரங்களுடன் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் பொதுமக்களின் குறிப்பாக மோதல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முழுமையாக சிதறடிப்பனவாக உள்ளன.

நீதி விசாரணைக்கு அப்பாற்பட்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பலவந்தமாக காணாமற்போதல், சிறுவர்களைப் படைக்கு திரட்டுதல், போர்க் குற்றங்கள் இலங்கையில் மோசமான முறையில் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச் சபையின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வட, கிழக்கில் மாத்திரம் கடந்த வருடம் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளதையும் இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும் விபரமாக வெளியிட்டிருக்கிறது மன்னிப்புச் சபை.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் உக்கிரமடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை மாத்திரமல்லாது உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அமைப்புகளும் தொடர்ந்து விசனம் தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் இலங்கை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்ததாகும். மனித உரிமைகள் விவகாரத்தை உரிய முறையில் கையாளுவதற்கான உறுதிமொழியை சர்வதேச சமூகத்திற்கு வழங்கியிருந்த இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவானது அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது சர்வதேச தரத்திற்கு சமாந்தரமானதாகவோ இருப்பதாக தென்படவில்லையென்ற அதிருப்தியும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடிப்படை உரிமைகளை பிரஜைகளுக்கு வழங்குவதில் பாரபட்சமான செயற்பாடுகள், இன, மத, மொழி ரீதியான பாரபட்சங்கள் காட்டப்படுவதே மோதல்கள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அறிந்திருந்தும் `பதவி', `அதிகாரம்' மற்றும் பொருளாதார நலன்சார்ந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதே இலங்கை உட்பட உலக நாடுகளில் மோதல்கள் உக்கிரமடைவதற்கும் மனிதப் பேரழிவுகளுக்கும காரணமாகின்றன.

தொலைநோக்கின்மை, மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் பிரிவினை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் கொள்கைகளை முன்னெடுத்தல், சட்டவிதிகள், மனித உரிமைகளை அரசாங்கங்கள் உதாசீனப்படுத்துதல், இனவாதத்தை போஷித்து வளர்த்தல், அந்நியர் பற்றிய வெறுப்புணர்வை தூண்டுதல், சமூகங்களுக்கிடையே பிளவுகளை அதிகரித்தல், சமத்துவமின்மை இடைவெளியை மேலும் விரிவுபடுத்துதல் என்பனவே வன்செயல்கள், மோதல்களுக்கான வித்துகள் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன்கான் குறிப்பிட்டிருப்பதுடன், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டரீதியாக கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கங்கள் உரிய முறையில் மேற்கொள்ளாவிடின் மனித உரிமைகளின் எதிர்காலம் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச சமூகம் தற்போது சுட்டுவிரல் நீட்டியுள்ள இத்தருணத்திலாவது இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முழுமையான பொறுப்பென்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தினக்குரல்

ஆயுதம் கொடுக்கும் நாடுகளை பட்டியலிட்டு அறிவிக்க முடியாத மனிப்புச்சபை சும்மா அறிக்கை விடுரது தான் மிச்சம்.

யுத்த அனர்த்தங்கள் சிறுபான்மை மக்கள் மேல் பாய்வதற்கு மன்னிப்புச் சபையும் ஒரு காரணம்.

தகுந்த நேரங்களில் தகவல்களை கொண்டுவராமல் மேற்குலக நாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயற்படுவது.

இலங்கைத்தீவிலும் இது தான் நடக்கிறது.

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.