Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலித்த கோகண மட்டக்களப்பு பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 26-05-2007 00:33 மணி தமிழீழம் [மகான்]

பாலித்த கோகண மட்டக்களப்பு பயணம்

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலரும், சமாதானச் செயலகத்தின் செயலாளருமான பாலித்த கோகண நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மீள்குடியேற்றம், பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களைக் கேட்டறிவதற்காகவே மட்டக்களப்புக்கான பயணத்தை மேற்கொண்டதாகச் அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய பயணத்தின் போது அரச அதிகாரிகள், போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள், ஐ.நா பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு

ம்.. மட்டக்களப்பு செய்தியள் ஒண்டிரண்டு இங்கையும் வரத்தான்செய்யிது.. கடந்த மூன்றுமாதங்களில் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் துரிதகதியில் நடைபெறுவதாக செய்திகள் வந்தபோதிலும் இங்கு கப்சிப்.. அம்மக்கள் வலுக்கட்டாயமாக மீள்குடியேற்றப்பட்டனர் என்ற செய்திகூட இங்கு பிரசுரிக்கப்படாதது அவர்கள் சுய விருப்பின்பெரில்தான் மீள குடியமர்த்தப்பட்டுக்கொண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமை காட்ட சிந்துஜனை ஜனநாயக வழியில் கொலை செய்த கருணாக்கும்பல் இல்லையா? அப்ப அவர்கள் பலமிளந்து விட்டனர் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றீர்களா? இது ஒரு நல்ல முன்னேற்றம் தான்.

90களில் ஐதேகாவும் இப்படித் தானே மக்களை குடியேற்றி நூற்றுக்கணக்கான அப்பாவித்தமிழ்மக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்தது. 87களில் எம் மக்கள் இதே சிங்களப் படைகளால் கொன்று குவித்த கொக்கட்டிப்படுகொலைகளை என்னும் மறப்பதாக யாருமில்லை

kokkaticcholai.gif

இப்போது கிழக்கில் நிற்கின்ற சிங்களப்படைகள் தானே வாகரையில் மக்கள் மீது குண்டு வீசித்தாக்கி 200க்கு மேற்பட்டவர்களைக் கொன்றார்கள்.

மதிவதனனுக்கும் அவரது குடும்பத்துக்கும் துரோகம் என்பது அல்வா சாப்பிடுவது போல .அவரது குடும்பமே துரோக இணையங்களை வெளியிடுகின்றது.அத்துடன் அண்மையில் கருணா காட்டிகொடுப்பு கும்பல் ஒரு அறிக்கை வெளியிட்டது அதனை குமாரதுரை குடும்பத்தின் சொத்துக்களான இணையங்கள் வெளியிட்டது அதில் இருப்பது

எமது இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் குறிப்பாக புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சட்டவிரோத நடடிவடிக்கைகளில் ஈடுபடுதல், தகாத வார்த்தைகளை பிரயோகித்தல், காரணம் இல்லாமல் பொதுமக்களை தாக்குதல், பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் பிள்ளைகளை பலவந்தமாகப் பிடித்தல் போன்ற ஒழுக்க சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதில் எமது தலைமைத்துவம் உறுதியாகவும் விழிப்பாகவும் உள்ளது.

காரணமில்லாமல் மக்களை தாக்குதல் தமது உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாம் ஆனால் காரனத்தோடு படுகொலைகளையும் கடத்தல்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ளுகின்றோம் என மர்றைமுகமாக ஒப்பு கொள்ளுகின்றனர் போல இருகின்றது.அப்படியெனால் என்ன ஜனநாயக கட்சி தாக்குதல் நடத்துவம் என பப்ளிக்காக சொல்லும் இக்கும்பல் என்னென்று ஜனநாயகம் என பீத்துது

மேலே இருக்கும் எல்லா செயல்கலையும் செய்யும் குமாரதுரை குடும்பத்தின் எஜமானர்கள் இன்னும் செய்வார்கள் எனத்தான் சொல்கிறார்கள்.இன்னுமொரு நகைப்பு என்ன வென்றால் தெருநாய்களுக்கும் குட்டை நாய்களுக்கும் இடையிலான எலும்புக்கான சண்டையில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்கும் எம்தலமை எடுக்கும் போது எலும்புத்துண்டுகளை இவ்வளவு நாளும் போட்டு வந்தவர்கள் கைவிடும்போதே தாம் செய்த அத்தனை அநியாயங்களையும் புரியும்

எப்படி மதி கதைப்பார் மதிக்குத்தானே கடத்தல் பணத்தில் ஒருபகுதி அவரின் குடும்பத்துக்கு போகுதே

சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கரங்களை விரைவில் பற்றிப் பிடிப்போம். சமிக்ஞைகள் தற்போது தென்படுகின்றன. பாலித ஹோஹன

சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கரங்களை விரைவில் பற்றிப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எமக்குண்டு, இதற்கான சமி க்ஞைகள் தற்போது தென்படுகின்றன. இவ்வாறு மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பாலித ஹோஹன கூறினார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு கச்சேரியில் பல்வேறு தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

திருமலை மட்டுநகர் ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான பல்சமய சமாதான ஒன்றியத்தினர் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், படைத்தரப்பினர், அரச அதிபர் எஸ்.அருமை நாயகம் தலைமையிலான பிரதேச செயலளர்கள் மனித நேய கூட்டமைப்பின் தன்மையிலான சிவில் சமூகத்தினர் ஆகியோரை அவர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.பல சமய சமாதான ஒன்றியத் தினருடனான சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் நடவடிக்கைகளும் சமாதான நடவடிக்கைகளுக்காவே மேற்கொள்ளப்படுகின்றன. கிழக்கு மாகாண மக்களைப் பாதுகாப்பதுடன் அதனை ஒரு முன்மாதிரியான பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.சிவில் சமூகத்தினருடனான சந்திப்பில் மக்கள் ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாக குறிப்பிட்டனர். நேற்று பிற்பகல் வரையும் சந்திப்பு தொடர்ந்து இடம் பெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.