Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

 

IC-300x150.jpgஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டை இலக்க அடிப்படையில் அத்தியாவசிய நடமாட்ட ஏற்பாடுகளும் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04ஆம் திகதி, திங்கள், அதிகாலை 5.00 மணி வரையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 27, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் – மே 01, வெள்ளிக் கிழமை, வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம், இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போதும் – மே மாதம் 04ஆம் திகதி வரை – இயங்குவதற்கு ஏற்ற வகையில் மேற்படி சட்ட திட்டங்கள் தளர்த்தப்படும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற அரச நிறுவனங்களும் மற்றும் தனியார் துறையின் தொழிற்சாலைகள், கட்டிட நிர்மாணத்துறை, இதர சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை இயக்குவதற்கு அனுமதி உள்ளது.

தனியார் துறை நிறுவனங்களைத் திறக்க வேண்டிய நேரம் காலை 10.00 மணி ஆகும். அரச மற்றும் தனியார் துறைகளின் தலைவர்கள் மே மாதம் 04ஆம் திகதி முதல் தமது அலுவலகங்கள் மற்றும் சேவை நிலையங்களின் செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றி அடுத்த வாரத்திற்குள் திட்டமிட வேண்டும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படவேண்டியவர்கள் முழு ஊழியர் எண்ணிக்கையில் 34% ஆனவர்கள் மட்டுமேயாகும்.

982-17-222x300.jpgஒரு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவை எவ்வளவு அதிக அவசியமானதாக இருக்கின்றபோதும், அதற்குத் தேவையான ஆகக் குறைந்தளவான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைப்பதற்கு அந்தந்த நிறுவனத்தின் தலைவர்கள் ஆவன செய்ய வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்குச் சமூகமளிக்காத அதிகாரிகள் வீடுகளில் இருந்தபடி பணிபுரியுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டிய ஊழியர்கள் யார், வீடுகளில் இருந்து வேலைசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு நாளின், பணிக்குழாமில் சேவைக்கு அழைக்கப்படும் 34% பகுதியினருக்குப் பதிலாக அடுத்த நாள் வேறு ஒரு பிரிவினரைத் நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவுசெய்ய வேண்டும்

நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு – அனாவசியமாக வீதிகளுக்கு வருவது மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடுவதை மக்கள் நிறுத்த வேண்டும்.

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் தொடரூந்துகளில் பயணிப்பது – தொழிலுக்காகச் செல்வோருக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமாகத் தொழிலுக்குச் சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு – நடந்து சென்றடைய முடியுமான அருகாமையில் உள்ள விற்பனை நிலையங்களைத் தெரிவுசெய்ய வேண்டும்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக என்ற போதும், வீட்டிலிருந்து வெளிச்செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவது அவரவரது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும்.

அந்த வகையில் –

திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் 1 அல்லது 2 என்ற இலக்கங்களைத் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாகக் கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.

அதே போல – வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்:

செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்;

புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்;

வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்;

வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்.

பணியகங்களைத் திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், போக்குவரத்து வண்டிகளில் பயணம் செய்யும் போதும் மற்றும் வணிக நிலையங்களிலும் – கொரோனா தடுப்புச் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

கிருமித் தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளைக் கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் இதில் உள்ளடங்கும்.

எவரேனும் மேற்படி ஒழுங்குகள் மற்றும் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து – தொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் அபாய நிலை வலய பிரதேசமாக இனம்காணப்பட்டால் – அந்த பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது.

ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் – எவரும் அங்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாகத் தடைசெய்யப்படும்.

அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப் பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை – மீண்டும் அறிவிக்கப்படும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஒன்றுகூடுவது நோய்த்தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்குத் தடையாக அமையும் என்பதால் அனைத்து சமய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பம் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் பலமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்சினையிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு- நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.

நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும், வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100% பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய உயரிய ஒத்துழைப்பு என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தங்களுடையதும், பிள்ளைகளுடையதும், நாட்டினுடையதும் – பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்துச் சிரமங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றது.

சமூகத்தின் நலனுக்குத் தடையேற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எவருக்கும் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை வழங்கப்படும்.

http://thinakkural.lk/article/39388

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.