Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையகத்தில் கொரொனா பீதி பொறுப்பற்ற செயல்: திலகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் கொரொனா பீதி பொறுப்பற்ற செயல்: திலகர்

thilakar-254x300.jpg

 

தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி 7 பேர் தப்பிச்சென்று அங்கு அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி 7000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலை பொறுப்புவாய்ந்தவர்கள் தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கு குறிப்பாக நுவரஎலியா மாவட்டத்துக்குள் 7000 மலையக இளைஞர் தலைநகரில் இருந்து ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தெரியாது என்றும் அவர்களுக்கு தொற்று இருக்கலாம் எனவும் சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மலையகப் பகுதிகளில் இருந்து பல்வேறு தொழில் நிமித்தமும் வேறு அலுவல்கள் சார்ந்தும்தலைநகரில் வாழ்ந்தவர்கள் , தற்காலிகமாக வந்தவர்கள் திரும்பவும் தமது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முடியாதவகையில் கொழும்பு மாவட்டம் முடக்கத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதற்கு முன்னர் சில இளைஞர்கள் புறக்கோட்டைப் பகுதியில் இருந்து ஊர் திரும்ப வழியின்றி சிக்குண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியான தகவல்களை அடுத்து, தாமதமாகவேனும் குறித்த அமைச்சு சார்ந்தவர்கள் எடுத்த நடவடிக்கைகளை நாம் வரவேற்றிருந்தோம்.

அதேநேரம் இப்போது 7000 மலையக இளைஞர் , யுவதிகள் தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஒருவரே கூறுவது மலையகத்தில் கொரொனா தொடர்பான அச்சுறுத்தலையும் பீதியையும் உருவாக்குவதாகும்.

உலகம் முழுதும் கொரொனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் கொரொனா சார்ந்து உணவுத்தட்டுப்பாடுகளும் நிவாரணக் கொடுப்பனவு பிரச்சினைகளும் எழுந்துள்ளனவே அன்றி கொரொனா பீதி ஏற்படவில்லை. டிக்கோயா போன்ற ஒரு பகுதிகளிலே அந்த அச்சம் எழுந்த போதும் அவை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தொற்று இல்லை என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 7000 இளைஞர் யுவதிகள் தலைநகரில் இருந்து தப்பி வந்துள்ளதாகவும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளவர்கள் இருக்கலாம் என்றும் பீதியை உருவாக்கி தாங்கள் முன்னெடுப்பதாக கூறும் கொரொனா நிவாரணக் கொடுப்பனவுகளில் உள்ள குறைபாடுகளை மறைக்க முயலக்கூடாது.

ஏற்கனவே தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி 7 பேர் தப்பிச்சென்று அங்கு அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி 7000 பேர் தப்பிச்சென்றுள்ளதாக பொறுப்புவாய்ந்தவர்கள் கருத்து தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அவர்கள் பற்றிய விபரங்களை வழங்க வேண்டியதும் அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலைத் தடுப்பதும் இந்த கருத்தைத் தெரிவிக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சரே முன்னெடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை இலங்கையின் சுகாதார பிரிவும் பாதுகாப்பு பிரிவும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் நிலையில் மலையகத்துக்கு ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாக கூறுவதும், இந்த இக்கட்டான நிலையிலும் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://thinakkural.lk/article/39410

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7000 இளைஞர்கள் குறித்த தகவலை அமைச்சர் வெளியிடுவாரா? திலகராஜ் கேள்வி

thilak-300x156.jpg7000 இளைஞர் யுவதிகள் கொழும்பிலிருந்து இரகசியமாக மலையகத்துக்கு வந்ததாகச் சொல்லும் அமைச்சர், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது விழுமியத்துக்கு உட்பட்டது அல்ல. ஆனாலும் அவர்கள் வந்திறங்கிய பிரதேசங்களைக் குறிப்பிடுவதன் மூலம் அங்கு வாழும் மக்கள் தமது சுகாதார பாதுகாப்பு குறித்த கவனத்தில் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும், அதனைப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான மயில்வாகனம் திலகராஜா.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி தப்பிவந்ததாகச் சொல்லப்பட்ட 7000 இளைஞர் யுவதிகள் பற்றிய தகவல்கள் தோட்ட நிர்வாகங்கள் கையாளும் வரவுப் பதிவேடுகள் மூலமாகப் பெறப்பட்டதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் சுகாதார துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் அமைச்சர் வழங்கி இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.

மறுபுறத்தில் அத்தகைய ஒரு தகவலை தாங்கள் உறுதிப்படுத்த முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாகவும் அதே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவை வதந்தியாக இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொரொனா இடர்காலத்தில் இலங்கையில் பாதுகாப்பு பிரிவும் சுகாதார துறையும் இணைந்தே கொரொனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பெருந்தோட்டப் பகுதி தொடர்பில் பின்வரும் முரண்பாட்டு நிலைமைகளை அவதானிக்க முடிகிறது.

இத்தகைய தகவல்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் தனது அமைச்சு உப காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் நிகழ்வில் கூறியது மரபு சார் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அந்த தகவல் வெளியிடப்பட்ட குறித்த நிகழ்வு ஹட்டனில் அமைந்துள்ள அரச நிறுவனம் ஒன்றில் அரச நிகழ்வு ஒன்றில் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் முன்னிலையில் கூறப்பட்டுள்ளது. எனவே அதனை வதந்தி எனக்கூறுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே இது வதந்தியா உண்மைச் செய்தியா என பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அமைச்சர் கூறுவதுபோல தோட்ட நிர்வாகங்கள் கையாளும் வரவுப் பதிவுகள் ஊடாக வழங்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. அதேநேரம் அத்தகைந வரவுப்பதிவுகளைச் செய்யும் தோட்ட நிர்வாகங்கள் சார்பில் தோட்டக் கம்பனிகள் அதனை உறுதி செய்தல் வேண்டும்.

அவ்வாறு தப்பிவந்தவர்கள் சுகாதார தரப்பின் கண்காணிப்பில் அல்லது பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறுவதாக இருந்தால் அது பற்றிய விபரங்களை சுகாதார துறையினர் வெளியிட வேண்டும்.

அத்தகைய 7000 இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவது விழுமியத்துக்கு உட்பட்டது அல்ல. ஆனாலும் அவர்கள் வந்திறங்கிய பிரதேசங்களைக் குறிப்பிடுவதன் மூலம் அங்கு வாழும் மக்கள் தமது சுகாதார பாதுகாப்பு குறித்த கவனத்தில் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும், அதனைப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் வெளியிட வேண்டும்.

இலங்கை முழுவதும் பொதுவான கொரொனா பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் தேசிய முக்கியத்துவம், முன்னுரிமை அளிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் நிலையில்,

அமைச்சர், அமைச்சு அதிகாரிகள், தோட்டநிர்வாகம் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த தகவல்கள் குறித்து, அத்தகைய செய்தியை ஒலி/ ஒளிபரப்பிய அச்சிடப்பட்ட செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகளும் சமூக ஊடகத்தளங்களும் அதே சமூகப் பொறுப்புடனும் உறுதிப்படுத்திய பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன.

கொரொனா தொற்றுப்பாதிப்புக்கு உள்ளான கொழும்பு பண்டாரநாயக்கபுர பகுதியில், இருந்து மிளகாய் ஏற்றிவந்த லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு தப்பிச்சென்ற 7 இளைஞர்கள் குறித்து பாரிய செய்திகளுடன், பாதுகாப்பு, சுகாதார துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பங்களிப்புடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விபரங்களும் மிகுந்த பொறுப்புடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 7000 இளைஞர் யுவதிகள் சம்பந்தமாக முன் வைக்கப்பட்டுள்ள பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் தகவல்கள், அதனைத் தொடர்ந்த பதில் நடவடிக்கைகள் குறித்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் கூறப்படுவது பாராதுரமானதும் மலையக மக்களை நான்காம் தர பிரஜைகளாக நடாத்துவதற்கும் ஒப்பானது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரிடம் கேள்வி எழுப்புவதற்கு எமக்கு வாய்ப்பு இல்லை. எனினும் இத்தகைய தகவல்களை வழங்கிய அமைச்சரின் உரைக்கு முன்னுரிமை கொடுத்து செய்தி அறிக்கையிட்ட ஊடகங்கள் பொறுப்புடன் இது தொடர்பான உறுதியான தகவல்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

http://thinakkural.lk/article/39537

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.