Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு புறம் ராஜபக்‌ஷ சகோதரர்கள் அன்கோ, மறுபுறம் புலிகள் நாட்டை அழிப்பதாக ஐ.தே.க. தலைவர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் ராஜபக்‌ஷ சகோதரர்கள் அன்கோ, மறுபுறம் புலிகள் நாட்டை அழிப்பதாக ஐ.தே.க. தலைவர் குற்றச்சாட்டு

[27 - May - 2007]

* பலவீனமான நிலையில் புலிகளுடன் பேசமுடியாதென்கிறார்

-ப.பன்னீர்செல்வம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகோதரர்களும் இணைந்து கொண்டு ஓரு புறம் நாட்டை அழிவுப்பாதையிலிட்டுச் செல்கின்றனர். மறுபுறம் புலிகள் நாட்டை அழிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதுபோன்றதொரு சூழ்நிலையில் ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென தெரிவித்தார்.

பிட்ட கோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கல்விச் சேவையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியை ஏற்று 3 மாதத்திற்குள் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் நாட்டிற்கு சமாதானம் கிடைக்கவில்லை.

சர்வதேச ரீதியில் வடக்கு- கிழக்குப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆதரவு கிடைக்குமென்றார்கள். ஆனால், சர்வதேச சமூகம் மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை. மெதமூலன சிந்தனை முன்னெடுக்கப்படுகிறதென்பது அவர்களுக்கு தெரியும்.

நான் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லையென இன்று குறை கூறுகிறார்கள். ஐனாதிபதியின் கடமைகளை செய்வதல்ல எனது பொறுப்பு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதே எனது கடமையாகும்.

யுத்தத்தை திறம்படச் செய்வதாகவும் கிழக்கு மாகாணத்தில் 95 % வீத தமது கட்டுப்பாட்டிலென்றும் கூறுகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் பல முறை புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்தினர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு. புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதற்கு எம்மிடம் விமானங்கள் இல்லை இதற்கொல்லாம் யார் பொறுப்பு?

அண்மையில் எமது படையினர் வவுனியா, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்தினர். பலர் உயிரிழந்தனர். இதன் பின்னர் புலிகள் நெடுந்தீவை தாக்கினார்கள். இவற்றிற்கெல்லாம் பாது காப்பு செயலாளர் கோதபய ராஜபக்‌ஷவே பொறுப்பு கூற வேண்டும்.

இராணுவ ரீதியில் பலவீனமடைந்த நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்கு எம்மால் போக முடியாது.

தற்போதைய பாது காப்பு செயலாளர் அப்பதவியை வகிக்கும் வரையில் பலவீனமடைந்த நிலையிலேயே பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும். எனவே தான் அவரை வெளியேறுமாறு வலியுறுத்துகிறேன். கோதபாய சகோதராக இருக்கலாம் ஆனால் பாதுகாப்பு செயலாளர் பதவியை வகிக்க முடியாது.

குடும்ப ஆட்சியை முன்னெடுத்து இந் நாட்டின் ஐனநாயகத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே ஐ.தே.கட்சி செயற்படுகிறது.

குடும்ப அரசியலை முன்னெடுக்கவும் மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கவும் பலவீனமான முறையில் யுத்தத்தை முன்னெடுக்கவும் ஊழல் மோசடிகளை தொடரவும் என்னால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவே ஒத்தழைப்பு வழங்குவேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.தே. கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலம் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அதனை ஜனாதிபதியே உடைத்தெறிந்தார் .இவற்றையெல்லாம் மறந்து எம்மால் செயற்பட முடியாது.

இன்று மெதமுலன சிந்தனை தோல்வி கண்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுடன் இணைந்து வெற்றி பெற்று இப்போது மக்களை வயிற்றையும் வாயையும் கட்டச் சொல்கிறார்கள். ஒருபுறம் சகோதரர்கள் அன்கோவும் மறுபுறம் புலிகளும் நாட்டை அழிக்கின்றனர். இதனை தொடர இடமளிக்க மாட்டோம்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.