Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன நெருக்கடிக்குத் தீர்வுகாண இந்திய மத்தியஸ்தம் அவசியம் - இலங்கையர்கள் நம்புவதாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன நெருக்கடிக்குத் தீர்வுகாண இந்திய மத்தியஸ்தம் அவசியம் - இலங்கையர்கள் நம்புவதாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஹக்கீம்

[27 - May - 2007]

சென்னையிலிருந்து எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கைப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் அவசியமென இலங்கையர்கள் நம்புவதாக, தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழகத் தலைநகர் சென்னையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வைக் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் தேவை என இலங்கை முழுவதும் நம்புவதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

ஏழாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கலைவாணர் அரங்கில் ஆரம்பமாகியது. தமிழக அரசின் நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டதாவது:

இலங்கையில் தீர்வு ஒன்றைக் காண இந்திய ஆதரவும் மத்தியஸ்தமும் தேவை. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள், பெருவாரியான அகதிகள் இந்தியாவிற்குள் புகுதல் என அடிக்கடி எழும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவே இந்திய அரசாங்கம் தனது மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் மூலம் தெரிவிக்கின்றது.

மேலும், இலங்கையின் இனப்பிரச்சினையில் தீர்வு காண விழையும் போது முஸ்லிம்களின் பங்கும் அவர்களது அரசியல் பரிமாணமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா அங்கீகரித்துள்ளதையிட்டு நாம் திருப்தி அடைகின்றோம்.

இலங்கையில் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதில் பல நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்னமும் ஆரோக்கியமான தளத்துக்கு அது கொண்டு வரப்படவில்லை. தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில் இந்தியாவின் அக்கறை தேவைப்பட்ட காலமாகவே இன்றைய காலத்தை கருதுகின்றோம்.

இந்திய நாட்டின் ஒத்துழைப்பு முழுமையாகக் காணப்படாது போனால் நிச்சயமாக இனநெருக்கடிக்குத் தீர்வு சாத்தியமே இல்லாமல் போய்விடலாம். முழு நாட்டினதும் எதிர்பார்ப்பு இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம் இனத்தவர்கள் கவனிக்கப்படவில்லை. இன்று நிலைமாறி முஸ்லிம்களின் பிரச்சினையும் உள்ளடக்கியே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசும் மாநில அரசும் கொண்டிருப்பது ஓரளவு மன ஆறுதலை அளிக்கிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்குமிடையில் தொப்புள் கொடி உறவு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள், எடுத்த முடிவுகள் காரணமாக அந்தத் தொப்புள் கொடி உறவு அறுந்து போயுள்ளது. அதன் தாக்கத்தை இலங்கை முஸ்லிம்களும் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எமக்கிடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். மாநாடு நடத்தப்படுவதோடு தமது பணி முடிந்து விடக்கூடாது. உறுதியான ஆக்கபூர்வமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் . தமிழ், முஸ்லிம் உறவு மீண்டும் பயனுள்ளதாக கட்டியெழுப்ப வேண்டும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.