Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பொதுத் தேர்தல் : வரும்……..ஆனால் வராது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொதுத் தேர்தல் : வரும்……..ஆனால் வராது

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு “ நற்கருத்துக்களைச் சொல்லியதில் புத்தபிரானுக்கும் திருவள்ளுவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.

 வெசாக் திருநாளன்று நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தம்மபதத்திலுள்ள ஒரு வசனத்தை மேற்கோள்காட்டியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

``ஒரு செயலைச் செய்த பிறகு, அது தவறு என்று நீங்கள் உணர்ந்து கண்ணீர் விடுவதைக் காட்டிலும் அதைச் செய்யாமல் விடுவதே நன்று அதேவேளை ஒரு செயலைச் செய்த பிறகு அது பலனளித்து அதில் தவறில்லை என்று நீங்கள் உணர்ந்து மனமகிழ்ந்தால் அதுவே சிறந்த்து`` என்று கூறுகிறது பௌத்தர்களின் புனித நூலான தம்மபதத்திலுள்ள அந்த வசனம்.

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, கொரோனா நோய் காரணமாகப் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வருகிறது. 

தேர்தல் ஆணைக்குழு  அறிவித்துள்ளபடி ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமா என்று தெரியாத சூழலில், பாராளுமன்ற  கலைப்பு மற்றும் தேர்தல் அறிவிப்பு ஆகியவை குறித்து எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 20 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டத் தேர்தல் குறித்து சில விடயங்களை தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு  சட்டமா அதிபருக்கு எழுதிய கடிதத்துக்கு அவர் அளித்துள்ள பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமா அதிபர், ``சட்டத்தின்படி தேர்தலை நடத்தவும்`` என்று பதிலளித்துள்ளார். கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியல் யாப்பிலிருந்து உரிய மேற்கோள்களைக் காட்டி அதற்கு விளக்கம் அளிப்பதற்கு பதிலாக. பாத்திரத்தில் ஈயம் பூசும் போது பட்டும் படாமலும் பூசுவது போன்ற ஒரு பதிலை அவர் அளித்துள்ளார். 

இப்படியான பதில், `வென்றால் அது என்னைச் சேரும், தோற்றால் அது உங்களைச் சேரும்`` என்று கூறுவது போலுள்ளது.

Gotabaya-Rajapaksa.jpg

இலங்கையில் பாராளுமன்றும் மூன்று வழிகளில் கலைக்கப்படலாம். அது எவ்வழியில் கலைக்கப்பட்டாலும் அதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடும் போது, புதிய தேர்தலுக்கான திகதியையும், புதிய பாராளுமன்றம் என்று கூடும் எனும் அறிவித்தலையும் சேர்த்தே அறிவிக்க வேண்டும். அவ்வகையில்   தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. அந்த அதிகாரத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ளவோ, அல்லது அந்த அதிகாரத்தை அடுத்தவருக்கு வழங்கவோ ஜனாதிபதியால் வழங்கவோ முடியாது.

கடந்த பாராளுமன்றம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி கலைக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர்—அதாவது மூன்று மாதங்களுக்குள்--புதிய பாராளுமன்றத்தை  கூட்ட முடியவில்லை என்றால், அதை  கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாக செல்லுபடியாவதில் சிக்கல்கள் ஏற்படும்.

எப்படியாயினும், இலங்கையின் அரசியல் யாப்பின்படி, பாராளுமன்றம் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஆட்சி செய்ய இயலும். 

தேர்தல் ஆணையம் பாராளுமன்ற  தேர்தல் சட்டம் 24(3) இன் கீழ், ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது ஜனாதிபதி ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனும் அறிவிப்பை மீறும் செயலாக சட்ட வல்லுநர்களால் கருதப்படுகிறது. 

தேர்தல் சட்டங்களும் அரசியல் யாப்புக்கு உட்பட்டவை என்பது எளிமையான புரிதல்.

தற்போதுள்ள சூழலில், பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் தேர்தல் ஆணைக் குழு உள்ளது. அவர்களிடையே இணக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்துவிட்டு, அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். 

அனைத்துக்கும் மேலாக, தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தமக்கு உள்ளதா என்பதை அந்த மும்மூர்த்திகள் தெளிவுபடுத்த வேண்டும்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி, சில விடயங்களை விவாதித்து முடிவெடுத்து, தேர்தலுக்கான புதிய தேதிய அறிவிக்க வாய்ப்பிருந்தும் அதை தன்னால் (சட்டரீதியாக) செய்ய முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

ஆனால், தேசிய நெருக்கடி சூழலில், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்டி, அவசியமான விடயங்கள் குறித்து விவாதித்து, முடிவுகளை எடுத்து, கூட்டிய பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று அரசியல் யாப்பு வல்லுநர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை மே 4 ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை, அனைத்து எதிர்க்கட்சிகளும் நிராகரித்த நிலையில், தமிழ்த் தேசிய்க் கூட்டமைப்பு அதில் பங்கேற்றது புருவங்களை உயர்த்தியுள்ளது.

ஐக்கிய  தேசியக் கட்சியின் துணைக் கட்சி அல்லது `பி` டீம் என்று விமர்சிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது வறவேற்கப்பட வேண்டியது. அதுமட்டுமின்றி அன்று மாலையே பிரதமரை மீண்டும் சந்தித்துப் பேசியது, அவர்கள் `தமிழ் மக்களின் நலன்களையே முன்நிறுத்துகின்றனர்` எந்தக் கட்சிக்கும் எடுபிடியல்ல என்பதை நிலைநிறுத்தியுள்ளது என்று எண்ணலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அவர்கள் பேசிய விடயங்கள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்தது குறித்து, ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சியின் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நாள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுமான  அஜித் பெரேராவும், சுஜீவ சேனசிங்கவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது, த தே கூ அரசுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினர். ஆனால் அவர்களின் தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அநேகமாக தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் சஜித்துக்கு பெற்றுதந்தது இதே கூட்டமைப்பினர் என்பதை இவ்வளவு விரைவில் அவர்கள் மறந்ததும், அதை அவர்கள் தலைவர் கண்டிக்காததும் ஏற்புடையதல்ல.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் மிகவும் இன்றியமையாததாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

`நோய் நெருக்கடி` ஒன்று நாட்டில் நிலவும் வேளையில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ கட்டுரை ஒன்றில் சாடியுள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி, தமது பெரும்பான்மையின் மூலம், நிதி ஒதுக்கீடுகளை முடக்கி, கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை கெடுத்து, அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தி,   தேர்தலில் ஆதாயம் அடைய எதிர்க்கட்சியினர் முயல்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, புத்தர் காட்டிய வழியில் பயணிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பேரிடரிலிருந்து மீள வழி ஏற்படும் என்று தனது வெசாக் தினச் செய்தியில் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

``வாழ்க்கை உறுதியானது அல்ல, எதுவும் நிலையானது அல்ல`` என்று புத்தர் கூறியதை உலகம் உணர்ந்துள்ளது என்கிறது அவரது செய்தி. 

`விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை` என்பதும் புத்த பகவானின் உபதேசத்தில் உள்ளது.

இதை இலங்கையிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துகொள்வர் என்று நம்புவோம்.

பொதுத் தேர்தல் இப்போது நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ள நிலையில், அடுத்த சில நாட்கள் அரசியல் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

 

சிவா பரமேஸ்வரன் 

(சிரேஷ்ட முன்னாள்  செய்தியாளர்- பிபிசி)
 

https://www.virakesari.lk/article/81724

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.