Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே நிறுத்தப்பட்டது

Featured Replies

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஏழு வார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீள ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.

2020 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம், S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது.

இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் புரள்வு பெறுமதி ரூ. 24 மில்லியனாக பதிவாகியிருந்தது. 

சந்தை செயற்பாடுகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட போது அபவிசு 179.20 புள்ளிகளால் சரிவடைந்து 4392.43 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டி 196.93 புள்ளிகளால் சரிவடைந்து 1750.49 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்குசட்டம் இலங்கையில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகளும் ஏழு வார காலமாக இடம்பெறவில்லை. பிராந்தியத்தில் காணப்படும் பங்குப்பரிவர்த்தனைகளில் மிக நீண்ட காலம் இயங்காமலிருந்த பங்குப்பரிவர்த்தனையாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கருதப்படுகின்றது. 

பல நாடுகளில் முடக்க நிலை அல்லது ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த போதிலும், அந்நாடுகளின் பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வணிகம்/ஆரமபதத-மதல-நமடததலய-நறததபபடடத/47-250095

  • தொடங்கியவர்
16 minutes ago, ampanai said:

S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது.

நாட்டின் பொருளாதாரம் எங்கே செல்லுகின்றது என்பதை காட்டும் ஒரு முக்கிய சுட்டி பங்குச்சந்தை. 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என ஓட்டம் எடுக்கிறார்கள். 

ஆக, இலங்கை பொருளாதரம் ஒரு சிக்கலுக்குள் உள்ளது எனவும், அதன் மீள் எழுச்சி என்பது ஒரு ஆபத்தான முதலீடு எனவும் தெரிகின்றது. 

  • தொடங்கியவர்

30 நிமிடங்களில் 3 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனை

சுமார் ரூ .3 பில்லியன் ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

காலை 11.09 மணியளவில், பங்குச் சந்தை S&P SL20 குறியீடு 5% க்கும் அதிகமாக சரிந்ததை அடுத்து, 30 நிமிடங்களுக்கு நாளாந்த பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

http://www.tamilmirror.lk/வணிகம்/30-நிமிடங்களில்-3-பில்லியன்-ரூபாய்-பரிவர்த்தனை/47-250131

  • தொடங்கியவர்

51 நாட்களின் பின் திறந்து 38 வினாடிகளில் 8400 கோடியை இழந்து முடங்கிய சீறீலங்கா பங்குச்சந்தை

மார்ச் 20ஆம் நாள் மூடப்பட்ட சிறீலங்கா பங்குச்சந்தை, 51 நாட்களின் பின், மே 11ஆம் நாள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு, வெறும் 38 வினாடிகளில் 10 சதவீதத்திற்கு அதிகரித்த வீழ்ச்சியைக் கடந்து நகர, அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இவ்வீழ்ச்சியால் அது தன்பெறுமதியில் 8400 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

மர்ர்ச் 9ஆம் நாள் முதல், மார்ச் 20ஆம் நாள் வரையிலான இரண்டு வார காலப்பகுதியில், சிறீலங்கா பங்குச்சந்தை 35 ஆயிரத்து 500 கோடி பெறுமதி இழப்பைச் சந்தித்திருந்த நிலையில், நாடு தழுவி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிலையைத் தொடர்ந்து, மூடப்பட்டது. தற்போது சிறீலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்ப முனைந்துள்ள நிலையில், மே 11 திங்கள் மீண்டும் பங்குச்சந்தை திறக்கப்படும், ஆனால் 2 மணிநேரமே விற்பனை நடைபெறும் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டது.

2018இல் 3.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த சிறீலங்கா, 2019இல் மேலும் வீழ்ச்சியடைந்து 2.3 சதவீத வளர்ச்சியையே கண்டது. தென்ஆசியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி வீதமே 6 சதவீதமாக இருந்தபோது, சிறீலங்காவின் இந்த மோசமான பொருளாதாரநிலைமை, தற்போதைய உலகளாவிய கோவிட்-19 வைரஸ் தாக்கத்தினாலான பொருளாதார சரிவில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதே நிலை.

வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம், உல்லாசத்துறை மற்றும் ஏற்றுமதிகளிலேயே வருவாய்க்காக பெரிதும் தங்கியுள்ள சிறீலங்கா, 2020இல் பெரும் சவாலைச் சந்திக்கும். பங்குச் சந்தையிலான வெளிநாட்டு முதலீடுகள் பெரிதும் காணாமல் போயுள்ளன. வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக் காரணமாக பெரிதும் நாடு திரும்யிபுள்ள நிலையில், அப்பணம் பெரும் வீழ்ச்சியை இவ்வாண்டு சந்திக்கும்.

உலகளாவிய பொருளாதார முடக்கம் தவிர்க்கமுடியாத யதார்த்தமாகியுள்ள நிலையில், ஏற்றுமதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். அனைத்துத் துறைகளிலும் பெரும் பாதிப்பை உல்லாசத்துறையே எதிர்கொள்வதால், 2 மில்லியன் உல்லாசப்பயணிகள் என்ற நிலையை ஏய்திய சிறீலங்கா உல்லாசத்துறையிலான வருவாயில் மட்டுமல்ல, அதிலில் இருந்தான பெரும் வேலை வாய்ப்புக்களையும் இழக்கப்போகின்றது.

இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க, பல அரசுகளும் மக்களிற்கும் வியாபாரங்களிற்கும், பல மானியங்களை வழங்கி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவில் மட்டும் அரசு நலிந்து போயுள்ள தன் மக்களிடமே, அவர்களது மே மாத சம்பளத்தை முழுமையான அரசிற்கு வழங்குமாறு கேட்கிறது. சிறீலங்கா, பங்களாதேஸ், ஜேர்தான் ஆகிய நாடுகளே தற்போதைய நிலையில், பங்குச்சந்தைகளை நீண்ட நாட்களாக மூடிவைத்திருந்த நாடுகள் வேறு.

1950ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டுவரையிலான 65 ஆண்டுகளில், சராசரியாக 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த சிறீலங்கா, 2020 இல் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சவாலைச் சந்திக்கிறது. 2018இல் 83.7 சதவீதமாக இருந்த சிறீலங்காவின் துண்டுவிழும் தொகை, 2019இல் 86.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறீலங்காவின் தரவரிசையை கிரடிட் நிறுவனங்கள் தொடர்ந்தும் குறைத்துவரும் நிலையில், அதிகரித்த வட்டியிலேயே பணத்திற்காக அல்லாடும் நிலையில் சிறீலங்கா திண்டாடுகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
முகநூல் பதிவில் இருந்து 
 
  • தொடங்கியவர்
14 minutes ago, ampanai said:

ஆனால் சிறீலங்காவில் மட்டும் அரசு நலிந்து போயுள்ள தன் மக்களிடமே, அவர்களது மே மாத சம்பளத்தை முழுமையான அரசிற்கு வழங்குமாறு கேட்கிறது.

பல கட்சிகள் என்ற கர்பச்சோவின் ( ரீகன் ஒரு காரணம் ) பிறிஸ்திரோய்க்கா கொள்கையால் பதினைந்து நாடுகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த வல்லரசு உடைந்தது.  அதில், உடைந்தது நாட்டின் பொருளாதரா பலமும் தான். 

இலங்கையில் கோவிட்19 னால் வர இருக்கும் பொருளாதர தாக்கம் பல கட்சி அரசமைப்பை இல்லாமல் செய்து, ஒரு கட்சி ஆட்சிக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை. காரணம், மகிந்த அண்ட் கோவின் ஆட்சி, அவர்களின் வலுவான கட்டுப்பாட்டுக்குள் உள்ள முப்படைகள், இராணுவமயமாக்கப்படும் அரசியல் ஆட்சியாளர்கள். இந்த போர்க்குற்றவாளிகள் எங்கும் ஓடி ஒளிக்கவும் முடியாது. 
 
ஆனால், இவர்களால் கட்டுப்படுத்த முடியாதது கோவிட் 19ம் அதனால் ஏற்படும் பொருளாதர தாக்கமும். 

மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் இவர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கும் காலம் வரும். அப்பொழுது இராணுவம் மகிந்த அண்ட் கோவின் பக்கம் இருந்து மக்கள் பக்கம் மாறவும் கூடும். 

  

  • தொடங்கியவர்

30 நிமிடங்களில் 3 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனை

சுமார் ரூ .3 பில்லியன் ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

காலை 11.09 மணியளவில், பங்குச் சந்தை S&P SL20 குறியீடு 5% க்கும் அதிகமாக சரிந்ததை அடுத்து, 30 நிமிடங்களுக்கு நாளாந்த பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

http://www.tamilmirror.lk/வணிகம்/30-நிமிடங்களில்-3-பில்லியன்-ரூபாய்-பரிவர்த்தனை/47-250131

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.