Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் தொற்று’ ஜனநாயகத்தையும் விழுங்கி விடுகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் தொற்று’ ஜனநாயகத்தையும் விழுங்கி விடுகிறதா?

  • விக்டர் ஐவன்

victor-ivan.jpgசுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றிய இரண்டு தெற்காசிய நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் கருதப்படமுடியும்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய காங்கிரசிடம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான ஜனநாயக பார்வை இருந்தது. காங்கிரஸின் தலைமையை காந்தி ஏற்றுக்கொண்ட பின்னர் காங்கிரசின் ஜனநாயகக் கண்ணோட்டம் மேலும் மேம்பட்டது என்று கூறலாம். ஜனநாயக விழுமியங்களுக்காக வலுவாக நின்று அவற்றை சமூகமயமாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு அமைப்பும் இல்லாதபோது, 1936 ஆம் ஆண்டு வரை அதன் சொந்த மனித உரிமைகள் சாசனம் இருந்துவருகின்றது.

ஜனநாயகரீதியான அர்த்தத்தில், இலங்கையின் சுதந்திர இயக்கம் அத்தகைய மேம்பட்ட கட்டத்தை எட்டவில்லை. இலங்கையின் சுதந்திர போராட்ட இயக்கத்தின் சில தலைவர்கள் மேற்கு நாடுகளில் கல்வி கற்றிருந்தாலும், அவர்களுக்கு ஒரு மேம்பட்ட தாராளவாத பார்வை இல்லை. ஏ.இ. குணசிங்கவைத் தவிர சுதந்திர போராட்ட இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் தங்கள் பார்வையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். அவர்கள் உலகளாவிய வாக்குரிமையை வழங்கும் திட்டத்தை எதிர்த்தனர். ஒரு கருத்தியல் கண்ணோட்டத்தில், இலங்கைத் தலைவர்கள் தங்கள் இந்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும், இந்த வரம்புகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும் நாடும் ஜனநாயகத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தது.

gotha0001.jpgஇலங்கை இடைக்காலத்தில் இரண்டு இராணுவ சதித்திட்டங்களையும் மூன்று ஆயுதமேந்திய கிளர்ச்சிகளையும் எதிர்கொண்டது,அவற்றில் எவற்றாலும் இலங்கை பின்பற்றி வந்த ஜனநாயக பாதையை மாற்ற முடியவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் தோன்றிய இரு மிக சக்திவாய்ந்த தலைவர்களாகக் கருதக்கூடிய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் நீண்டகால ஒரு கட்சி ஆட்சியை நிறுவ முயன்றனர்.ஆனால், இறுதி ஆய்வில், அவர்கள்தமது கனவை அடைவதற்கு தவறிவிட்டனர்.

எதேச்சாதிகார எதிர்பார்ப்புகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறை ஸ்திரமான நிலையில் இல்லை. அது சிதைவடைந்து பாழடைந்த நிலையில் இருந்தது. ஜனநாயக அரசியலுக்கு வலுவான அடித்தளம் இல்லாதமை, முறைமையை முறையாக பராமரிக்கத் தவறியமை அரசியலமைப்பை மீறுவது மற்றும் அரசியலமைப்பை சிதைப்பது போன்ற பல காரணிகள் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஆளும் கட்சிகளால் தமது அதிகாரப் பசி நோக்கங்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசியல் அமைப்பின் சிதைவுகள் மற்றும் சீரழிவுகள் ஜனநாயகம் மீதான பொதுமக்கள் மத்தியிலான நம்பிக்கையில் பெரும் முறிவை ஏற்படுத்தின. இந்த விரும்பத்தகாத சமூக சூழலில் ஒரு யோசனை மக்களிடையே பரவி வந்தது.மேலும் நாட்டை நேசிக்கும் ஒரு தகுதியான ஆட்சியாளர், ஒரு நல்ல சர்வாதிகாரி தேவை என்ற கருத்துநுட்பமாக பரப்பப்பட்டு வந்தது. வெளிப்படையாக கோத்தாபய ராஜபக்ச இந்த நோக்கத்திற்கான சிறந்த ஒருவராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலும், பின்னர் கொழும்பு நகரத்தை அழகுபடுத்துவதிலும், பாதுகாப்பு செயலாளராக அவர் வகித்த வெற்றிகரமான பங்கு, போர் முடிந்தபின், அவரது அரசியல் பிரதிமையை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. கோதபயாவின் வெற்றியை உறுதி செய்வதற்காக பௌத்த சிங்கள பெரும்பான்மையினரின் மனநிலையைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக ஒரு வலுவான பிரசாரம் நடைபெற்றது. பௌத்த- சிங்கள மக்களையும் நாட்டையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பிடியிலிருந்து மீட்கக்கூடிய ஒரே கதாநாயகனாக கோத்தாபய ராஜபக்சவின் பிரதிமையை உருவாக்குவதில் இந்த பிரசாரம் வெற்றிகரமாக இருந்தது.

19 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை இழந்திருந்த ஒரு தருணத்தில் கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைக்கு கொண்டுவருவதன் மூலம் அவரது நிலையை பெயரளவிலான அரச தலைவராகக் குறைப்பது என்பது , செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் உள்ளார்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், இலங்கையில் பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற நிர்வாகமுறை இருந்தது. அந்த நேரத்தில், ஜனாதிபதியின் நிலைப்பாடு பிரிட்டனின் மன்னரின் நிலைப்பாட்டைப் போன்றிருந்தது. அரசியல் அதிகாரத்தின் உண்மையான மையம் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான அமைச்சர்களின் அமைச்சரவையில் தங்கியிருந்தது.

1978 ஆம் ஆண்டில் ஜனாதிபதியை மையமாகக் கொண்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், அரச அதிகாரத்தில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் இரண்டாம் நிலைக்கு சென்றது. ஜனாதிபதி அதன் முக்கிய மையமாக இருந்தார். இதன் விளைவாக, பாராளுமன்றத்தின் அதிகாரம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இப்போது, 37 ஆண்டுகளுக்குப் பிறகு, 19 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், நிலைமை தலைகீழாக மாறி, ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரத்தை நீக்கி, அவரை பெயரளவிலான தலைவராகவும், பிரதமர் தலைமையிலான அமைச்சர்களின் அமைச்சரவையாகவும் அரச அதிகாரத்தின் முக்கிய மையம் மாற்றப்பட்டது.

ஆனால் இந்தத் திருத்தம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.எனவே, பெயரளவிலான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பொருத்தமான வழிமுறை பரிந்துரைக்கப்படவில்லை. வழக்கமாக, ஒரு பெயரளவிலான ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரையின் பேரில் அல்லது இந்தியாவைப் போலவே இந்த நோக்கத்திற்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வித்தியாசமாக, இலங்கையில், 19 வது திருத்ததத்தின் மூலம் ஏற்கனவே நிறைவேற்று அதிகாரத்தை இழந்த போதிலும், நிர்வாக ரீதியாக ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் மாற்றப்படவில்லை. ஆகவே, நிறைவேற்றுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதே முறையே பெயரளவிலான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும் தொடர்ந்தது, அதாவது ஜனாதிபதித் தேர்தலில் நாடாளாவிய ரீதியில் வாக்களிப்பதன் மூலம் முழு நாட்டையும் ஒரே தொகுதியாகக் கருதினர். இது ஒரு பாராதூரமான பிழை என்று சொல்லத் தேவையில்லை.

சட்டமும் அதிகாரமும்

பௌத்த சிங்கள வாக்குகளின் பலத்தின் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ச 2019 ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடிந்தது. புதிய ஜனாதிபதி ஒரு பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற ரீதியில் , முழு தீவையும் ஒரே தொகுதியாகக் கருதினர்.ஆனால் அவருடைய முன்னோடிகளைப் போலல்லாமல், அவருக்கு நிர்வாக அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின்படி அவர் பெயரளவிலான ஜனாதிபதி மட்டுமே.

புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்த பெரும்பான்மையினர் ஜனாதிபதியின் அதிகாரங்களில் 19 ஆவது திருத்தத்தால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. புதிய ஜனாதிபதியின் முன்னோடிகளிடம் அந்த அதிகாரம் இருந்தது என்றும் மற்றும் பயன்படுத்தப்பட்டது எனவும் அவர்கள் நம்பியதாக தெரிகிறது.

கோத்தாபய ராஜபக்சவும் அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த அரசியல் பொறிமுறையும் உண்மையில் மத்திய அரச அதிகாரத்தின் கட்டுப்பாட்டைப் பெற விரும்பியிருந்தால், அவர்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டிருக்க வேண்டும்.அதில் 19 ஆவது திருத்தம் போட்டியிடுவதை விட நிர்வாக ரீதியான அதிகாரங்களை வழங்கியது. ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியில் மட்டுமே நிறைவேற்று அதிகாரங்கள்.

ஆயினும்கூட, விசித்திரமாக, கோத்தாபய ராஜபக்ச மட்டுமல்லாமல், அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த அரசியல் பொறிமுறையும் அரச மத்திய அதிகாரத்தின் முக்கிய பதவியைப் பெறுவதில் அக்கறை காட்டவில்லை.அதற்கு பதிலாக அவர்கள் ஜனாதிபதி பதவியைப் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான இந்த முடிவு 19 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு தொடர்பாக சட்டத்தை தவறாகப் படித்ததா அல்லது பதவியேற்றதன் தொடர்ச்சியாக உச்ச அதிகாரத்தை படிப்படியாகப் பெறுவதற்கான வேண்டுமென்ற தந்திரோபாய முயற்சியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னையது உண்மை என்றால், அது ஒரு சாதாரண பிழை அல்ல, ஆனால் கடுமையான குற்றம்.

முடிவு என்ன?

அரசியலமைப்பின் படி பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையை கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கியுள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இந்த இயற்கையின் அசாதாரண மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள் எழுவதென்பது மிகவும் அரிதானது. அவை சட்டங்களில் பரிந்துரைக்கப்படவில்லை மற்றும் முன்னறிவிக்கவும் முடியாது.

இத்தகைய சூழ்நிலைகளில், சட்டங்களை உருவாக்குவதற்கும் நிலைமையைச் சந்திக்கத் தேவையான கொள்கைகளை பின்பற்றுவதற்கும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில் தலையிட்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று பாராளுமன்றம் கருதுகிறது. அது தற்போது கலைக்கப்பட்ட நிலையில் உள்ளது.அதற்கான அதிகாரம் இருந்தபோதிலும் பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கு ஆதரவாக இல்லை என்று ஜனாதிபதி சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளார்.

ஜனாதிபதியும், சட்டத்தை இயற்றுவதற்கான சட்டமன்ற அதிகாரம் இல்லாததால், பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க முடியவில்லை.இத்தகைய சூழ்நிலைகளில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது நீதித்துறையின் பொறுப்பாகும்.

இந்த விவகாரத்தை நீதித்துறையிடம் குறிப்பிடுவதற்கும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறனும் வாய்ப்பும் இருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு வழிகாட்ட மிகவும் தெளிவான மற்றும் முக்கியமான நீதிமன்ற தீர்ப்பும் இருந்தது.

ஆயினும்கூட, ஆணைக்குழு இந்த விடயத்தை நீதித்துறையிடம் குறிப்பிடுவதைத் தவிர்த்து, முறைசாரா முறையில் ஜனாதிபதியிடம் அனுப்பியது.ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. நீதித்துறையை கலந்தாலோசிப்பதிலிருந்தோ அல்லது பழைய பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவதிலிருந்தோ விலகிவிட்டார்.

இறுதியில், பிரச்சினை நீதித்துறையில் முடிவடையும், பின்னையவரின் சுதந்திரம் மற்றும் நியாயத்தை அமில பரிசோதனைக்கு சோதனைக்கு உட்படுத்தும். அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முறையான மற்றும் நடைமுறை தீர்வைக் கண்டுபிடிப்பதில் காணப்படும் தோல்வியானது தவிர்க்க முடியாமல் இலங்கையை ஒரு தொற்று நோய்க்கு மத்தியில் அராஜக நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு தேசமாக வரலாற்றின் ஆண்டுகளில் பிரவேசிக்க வைத்திருக்கிறது.

பினான்சியல் டைம்ஸ்

http://thinakkural.lk/article/41524

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.