Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகாதார துறையின் உடனடி தேவைகள் அடங்கிய திட்டத்தை உடன் தயாரியுங்கள்; வடக்கு ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார துறையின் உடனடி தேவைகள் அடங்கிய திட்டத்தை உடன் தயாரியுங்கள்; வடக்கு ஆளுநர்

P.S.M.Charles-2-300x161.jpgவட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படுகின்ற சாவால்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

வடமாகாணத்தில் காணப்படும், மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்றை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடத்தியிருந்தார்.

வடக்கு ஆளுநர் செலயகத்தில் இம்பெற்ற இந்த சந்திப்பின்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் முகங்கொடுக்கும் சவால்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலை முன்வைத்தனர்.

அவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய ஆளுநர் தெரிவித்ததாவது, வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகள், கழிப்பறைகள் மற்றும் பிறபகுதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், அனைத்து வைத்தியசாலை சுற்றுச்சூழலின் தூய்மையைப் பேணுவதற்கான வழிமுறைகள் வெளியே கொணரப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் இருந்து சரியான உணவைப் பெற வேண்டும். நோயாளிகளுக்கு வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து பட்டியலுக்கு அமைவாக உரிய உணவுகள் வழங்கப்படுவ உறுதி செய்யப்படவேண்டும் . இதற்காக சுகாதார அமைச்சால் வருடாந்தம் பாரியளவு நிதியும் ஒதுக்கப்படுககின்றமையும் குறிப்பிடத்தக்கது

மேலும் வெளியில் இருந்து வைத்தியசாலைகளுக்குள் உணவைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இச்செயற்பாடானது நோயாளிகளின் ஆரோக்கியத்தையும், அலைச்சலையும், வீண் செலவுகளையும்உறுதி செய்வதாக இருக்கும். மக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவமனைகளில் குடிநீர், கழிப்பறைகள் மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

வைத்தியசாலைகளில் வசதியான தங்குமிடம் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த சரியான கண்காணிப்பு முறையை செயல்படுத்த வேண்டும்.

வைத்தியசாலைகளின் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது வரவுசெலவு திட்டத்தினை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். மன்னார் மாவட்ட பொது வைத்தியாசாலை கட்டுமானத்தை உதாரணமாக கொள்ள முடியும். அத்துடன் எந்த விடயத்தினையும் செயற்படுத்தவதற்கு முன்னதாக அதுதொடர்பான நீண்டகால மற்றும் முழுமைப்படுத்தப்பட்ட பார்வை இருக்க வேண்டும்.

சமூகத்தில் பரவும் தொற்று, தொற்றா நோய்கள் சம்பந்தமான தகவல்களை திரட்டி தகவல் மையத்தின் ஊடாக அவை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் அவை குறித்த உரிய கண்காணிப்புக்களை பிரதேச வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்ப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் தரவுகளைப் பதிவு செய்வதற்காக மாவட்ட செயலக, பிரதம செயலாளரின் அலுவக ஆளணியினரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அத்துடன், மனிதவள வெற்றிடங்கள், பயன்படுத்தப்படும், பயன்படுத்தப்படாத வாகனங்கள், வாகன சாரதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல் பட்டியல்களையும் மாகாண சபையிடத்தில் சமர்ப்பிக்குமாறும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு இயலுமான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கழிவுநீர் அகற்றும் தொகுதியை முறையான ஒப்பந்தங்களுடன் வெளியாருக்கு வழங்கு முடியும் என்பதோடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்கள்,மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர்கள் ஆகியோரின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் அதேநேரம் மனித வளத்தினை விடவும் துறைசார் நிபுணத்துவத்தின் மீது தனது நம்பிக்கை அதிகமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆளுநரின் இந்த முன்மொழிவுகள் சுகாதாரத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/43025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.