Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடனான மோடியின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடனான மோடியின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?

நியுஸ் 18

இந்திய பிரதமர் இன்று இரு முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார்.

ஒன்று இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் மற்றையது மொரீஷியஸ் சகாவுடனானது.

இரண்டும் இந்து சமுத்திர தீவுகள்,இதனை விட முக்கியமாக இரு தீவுகளுடனும் சீனா மேற்கொண்டுள்ளதுடன் இந்த தீவுகளில் சீனா தனது காலடிகளை தீவிரமாக பதித்து வருகின்றது.Narendra-Modi-_170f3648543_large-300x225

ஜனாதிபதி ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலில் இலங்கையில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் உதவி திட்டங்களை துரிதப்படுத்துவது என்ற இணக்கப்பாடு ஏற்பட்டது.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு மோடி இணங்கியுள்ளார் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2019-11-29-at-12.29.01-PM
கடந்த வருடம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையுடன் புதிய அத்தியாத்தை ஆரம்பிக்க இந்தியா முயன்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்து ஒரு சில மணிநேரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை;கு அறிவிக்கப்படாத திடீர் விஜயமொன்றை மேற்கொண்டதுடன் கோத்;தபாய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கோத்தபாய ராஜபக்ச அதனை ஏற்றுக்கொண்டதுடன் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இந்தியாவை தெரிவு செய்திருந்தார்.

Gotabaya-Modi-300x169.jpegமகிந்த ராஜபக்சவின் பத்து வருட ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான அவரது நெருக்கமான உறவு புதுடில்லியை சங்கடமான நிலைக்கு தள்ளியதே இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கைக்கு காரணம்.

இலங்கையை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கவைத்தார் தனது தொகுதியில் அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை ஆரம்பித்தார் என்ற குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் பொருளாதாரரீதியில் சாத்தியமற்றது ஆனால் மூலோபாய அடிப்படையில் முக்கியமானது என கருதப்படுகின்றது.
இந்தியாவின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சீனா அந்த துறைமுகத்தினை 99வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டது.

hambanthota-harbour-300x136.jpgஇலங்கையின் அனுமதியின்றி துறைமுகத்தை இராணுவநோக்கங்களிற்கு பயன்படுத்த முடியாது என்பது மாத்திரமே இந்தியாவிற்கு ஆறுதல் அளிக்க கூடிய விடயம்.

கோத்தபாய ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களிற்கு இந்தியா 400 மில்லியன் டொலரை அறிவித்தது,உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலிற்கு பின்னர் இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கியது.

கொரோனா வைரசின் கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் மொறிசியசிற்கு மருத்துவபொருட்களை வழங்கியது போல கொவிட் 19 நெருக்கடியின் போது இந்தியா கொழும்பிற்கு மீண்டும் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

இந்திய பிரதமருடனான இன்றைய தொலைபேசி உரையாடலின் போது மொரீஷியஸ் பிரதமர் மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவர்களுடன் இந்தியாவின் கேசரி என்ற கடற்படை கப்பலை அனுப்பியமைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்திய பிரதமரின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியமானவை என்பதை மூலோபாய விவகார ஆய்வாளர் கொமடோர் உதய் பாஸ்கர் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.

modi-gotha-300x165.jpg
சிறிய அயல்நாடுகளிற்கு பரிவர்த்தனை அல்லாத முறையில் நேசக்கரத்தினை இந்தியா நீட்டுவது குறிப்பிடத்தக்க விடயம்; இது இந்தியாவின் நம்பகதன்மையை மேலும் அதிகரிக்கும் என்கின்றார் அவர்.
சீனாவை நேரடியாக குறிப்பிடாத போதிலும்,நெருக்கடியான நேரத்தில் நெருங்கிய நண்பன் என்ற நம்பகதன்மையை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முயற்சி நீண்டகால அடிப்படையில் இந்தியாவிற்கு உதவும் என அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த சில வாரங்களில் இந்திய சீனா எல்லையில் சிறிய மோதல்கள் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த தொலைபேசி உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

http://thinakkural.lk/article/43082

தமிழர்கள் மீதான ஒரு வெறுப்பு வெளிவிவகார கொள்கையை கொண்டிருப்பதால், அதை சீனாவும் சிங்களமும் வேகமாயும் விவேகமாயும் பயன்படுத்தி வருகின்றன. 

தற்பொழுது, வெறுமனவே தொலைபேசிகளால் சிங்களத்தை மாற்ற முடியாத நிலை.

அந்த தோல்வியை புது டெல்லி ஏற்று பயணிக்க வேண்டும். 

20 hours ago, உடையார் said:

இந்திய பிரதமரின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியமானவை என்பதை மூலோபாய விவகார ஆய்வாளர் கொமடோர் உதய் பாஸ்கர் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.

modi-gotha-300x165.jpg
சிறிய அயல்நாடுகளிற்கு பரிவர்த்தனை அல்லாத முறையில் நேசக்கரத்தினை இந்தியா நீட்டுவது குறிப்பிடத்தக்க விடயம்; இது இந்தியாவின் நம்பகதன்மையை மேலும் அதிகரிக்கும் என்கின்றார் அவர்.


சீனாவை நேரடியாக குறிப்பிடாத போதிலும்,நெருக்கடியான நேரத்தில் நெருங்கிய நண்பன் என்ற நம்பகதன்மையை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முயற்சி நீண்டகால அடிப்படையில் இந்தியாவிற்கு உதவும் என அவர் தெரிவிக்கின்றார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.