Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர்

sun-300x160.jpegகொரோனாவால் உயிர் இழப்புக்களோடு, கடுமையான பொருளாதார, சமூக நெருக் கடிகளையும் சந்தித்துள்ள நிலையில் கூட போர்க்காலத்தில் உதவியதைப் போலவே இன்றும் தமது உதிரத்தை உதவியாக வழங்கும் புலம்பெயர் உறவுகளின் உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சென்னையிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கனடா ஐக்கிய தமிழர் தோழமை முன்னணி என்ற அமைப்பின் நிதி ஆதரவுடன் தமிழ்நாடு சென்னையில் கொரோனா பேரிடரில் சிக்கியுள்ள புளிச்சலூர், அண்ணா நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 30 குடும்பங்கள் விகிதம் தெரிவு செய்யப் பட்டு 90 குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 888 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் வழங்கிய பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களுக்கு வெளியில் பல்வேறு மாவட்டங்களிலும் பல ஆயிரம் குடுங்கள் சிதறி வாழ்கின்றனர். அகதி என்ற சட்டரீதியான அடையாளம் கூட இல்லாத நிலையில் அகதிகளாக இருப்பது இன்னும் துயரமானது. நாடு திரும்ப முடியாத அரசியல் சூழ்நிலைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையோடு ஒவ்வொரு நாட்களையும்

பல்வேறு கஸ்ட்டங்கள் வலிகளோடு வாழ்வதை உணரமுடிகிறது. ஒவ்வொருவரின் பிரச்னைகளும், துன்பங்களும் வெவ்வேறானவை யாரிடமும் தீர்வைப் பெறமுடியாத இருள்சூழ்ந்த வாழ்க்கை சக்கரத்திற்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தம்.

81-8.jpegசிங்கள பேரினவாத இனஒடுக்குமுறையின் விளைவாகவே தாய் மண்ணை விட்டு பெரும் வலிகளோடு எமது மக்கள் தாய் தமிழகத்தை நம்பியே இங்கு வந்திருக்கிறார்கள். எனவே தற்போதைய இந்த நெருக்கடியான தருணத்தில் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கும் அனைத்து ஈழத் தமிழர்களின் இடைக்கால வாழ்வாதார உதவிகளோடு அடிப்படை உரிமைகளை முழுமையாக உறுதி செய்வதற்கு தமிழக மற்றும் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனாவால் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள இங்குள்ள எமது மக்களுக்கு இங்குள்ள சில அரசியல், சிவில் தரப்பினரும், புலம்பெயர் உறவுகளும் மனிதநேய த்துடன் உதவிவருவது நெருக்கடியில் உள்ள மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இருந்தாலும் இந்த உதவிகள் அனைவரையும் சென்றடையவில்லை என்போதோடு போதுமானதாகவும் இல்லை என்பது வேதனையளிக்கிறது. தாயகத்துடன் ஒப்பிடுகின்ற போது, புலம் பெயர் தேசத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகம். அங்கே உயிரிழப்பும் உறவிழப்பும் எம் மக்களை பேரவலத்தில் தள்ளியுள்ளது. எனினும் இந்த இக்கட்டான நிலையிலும் தமது வலிகளையும் தாங்கிக்கொண்டு தாயகத்திலும் தமிழகத்திலும் உள்ள உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டிவரும் புலம்பெயர் தமிழர்களின் மனிதநேயம் உண்மையில் மிக நெகிழ்ச்சியை தருகிறது.

தற்போதைய உலக சூழலானது மிகவும் சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. கொரோனா என்ன எத்தகைய ஆபத்தான சவால்களை நாம் பூமிப்பந்தில் சந்தித்தாலும் உலகில் நாம் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சிறீலங்கா அரசு எம்மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்புக்கான நீதியை பெறவேண்டும் என்பதில் நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயலாற்ற வேண்டும்.

கோத்தபாய அரசனது தமிழ் மக்களுக்கான நீதியை முழுமையாக புறம் தள்ளி இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறீலங்காவின் அனைத்து சிவில் நிர்வாக அலகுகளையும் இராணுவமயப்படுத்தி தமிழர் தயக்கத் தில் கட்டமைப்பு ரீதியான இனஅழிப்பை கூர்மையாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது இலங்கையில் நடப்பது இராணுவ ஆட்சி தான் என்பதை இன அழிப்பை போர் வெற்றி நாளாக கொண்டாடும் கோத்தபாய அரசு சர்வதேச சமூகத்தை நோக்கி உரத்துக் கூறியுள்ளது.

உயிரிழந்த எமது உறவுக்களுக்காக கண்ணீர் விடுவதற்கே அனுமதிக்காத அரசு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியை தரப்போவதில்லை என்ற நிதர்சனத்தை தமிழ் மக்கள் உணர்ந்து அனைத்துலக சமூகத்தினுடாக நீதியை பெறுவதற்கான சாத்தியமான உபாயங்களை இனம் கண்டு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். எமக்கான நீதியை பெறுவதில் நாம் சூழ்நிலை களை காரணம் காட்டி அக்கறையின்றி செயல்பட்டால் எம்மைப் போலவே எமது எதிர்கால சந்ததியினரும் எமது மண்ணைவிட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இனவழிப்பிற்கான நீதியில் தான் எமது தலைமுறையாவது அகதி என்ற அடையாளம் இன்றி எமது மண்ணில் சுதந்திரமாக வாழமுடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/43422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.