Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எவருக்கேனும் கொரோனா கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு ; பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தவறான முன்னுதாரணம் : சாடுகிறது

Featured Replies

(ஆர்.யசி)

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்தார்.

பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

100991405_2993503807385983_5247343544762

 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொண்டதாக பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான செயற்பட்டு வருகின்ற பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகனவிடம் இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

DSC00067.jpg

 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான தியாகங்களை செய்துள்ளோம்.

நாம், சுகாதார அதிகாரிகள், பாதுகப்பு படையினர், பொதுமக்கள் என அனைவரும் தியாகங்களை செய்தே இப்போது வரையில் இலங்கையில் மிக மோசமான தாக்கங்கள் எதுவும் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

இதில் சகல மக்களும் தமது மத, சம்ரதாயங்களை மறந்து தமது உறவினர் எவரும் உயிரிழந்தால் ஒரு நாளிலேயே உடலை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

அதனை எவரும் எதிர்க்காது ஒரே நாளில் உடல்களை தகனம் செய்ய இணங்கினர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் மத நடைமுறையை கூட ஏற்றுக்கொள்ளாது உடல்களை எரிக்க வேண்டும் என கூறியிருந்தோம். தந்தை தாய் உயிரிழந்தால் கூட அவர்களின் பிள்ளைகள் பார்வையிட முடியாத கட்டாயம் இருந்தது.

அவ்வாறெல்லாம் மக்கள் செயற்பட்ட வேளையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ஐந்து மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்களை ஒன்றுதிரட்டி கூட்டம் கூட வைத்து கொவிட் -19 சட்ட திட்டங்களை மீறி, சமூக இடைவெளியை கருத்தில் கொள்ளாது மிகவும் மோசமாக செயற்பட்டுள்ளனர்.

இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்கள் எமக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க ஆரபிதுள்ளனர். இந்த நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த சுகாதார அதிகாரிகளை கூட அமைச்சரின் தரப்பில் பலர் அச்சுறுத்தியுள்ளனர்.

06.jpg

இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இப்போது நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுபாட்டில் உள்ளது, ஆனால் இவர்களின் செயற்பாடு காரணமாக எதிர்வரும் தினங்களில் குறித்த பகுதிகளில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தொண்டமான் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் இதில் கலந்துகொண்டனர், அவர்களிடம் இது குறித்து பேசவில்லையா?
பதில்:- இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சகலருக்கும் கூறுவது ஒன்றுதான், தவறான முன்னுதாராணமாக எவரும் நடந்துகொள்ள வேண்டாம். அரசியல் செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கும், ஆனால் இவ்வாறான வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டால் அனைவருமே பாதிக்கப்பட்ட வேண்டும். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.


கேள்வி:- மலையகத்தில் தொற்றுநோய் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?
பதில் :- ஆம். பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மலையகத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் சுகாதார பரிசொதகர்களின் சங்க உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/83208

  • தொடங்கியவர்

கொரோனா சட்டதிட்டங்களை ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமோ மீறமுடியாது - சுகாதார பணிப்பாளர்

(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது.

ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில் சுகாதார பணிப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் அதிகளவில் நோய் கண்டறியப்பட்டு வருகின்றது.

குவைத்தில் இருந்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும் வைரஸ் சமூக பரவலாக மாறாத வகையில் நாம் செயலாற்றி வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இப்போது வரையில் 123 நாடுகளில் இருந்து 42 ஆயிரத்து 522 பேர் தாம் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களிலும் அதிகளவானவர்கள் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறுகியகால வீசா கொண்டவர்களும் உள்ளனர். எனினும் இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்னரே இலங்கைக்கு வர முடியும் என்ற புதிய நிபந்தனைகள் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்குள் கொவிட் -19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறி செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.

நாட்டிலுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்புடன் செயற்படும் கட்டாயம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது.

ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83206

  • தொடங்கியவர்
2 minutes ago, ampanai said:

ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

101764941_10158104410831855_8440598338599911424_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=ILdtZOrxWJsAX-6RG7G&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=376b9b03831e45660956050b483005e1&oe=5EFB0B70

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.