Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உடன்படிக்கை சீனாவுக்கு ஒரு செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் முக்கியத்துவம் வாய்ந்த  பரஸ்பர ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஆதரவு உடன்படிக்கை ஒன்றில் ( Mutual Logistics Support Agreement ) அண்மையில் கைச்சாத்திட்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கை  பல்வேறு  காரணங்களுக்காக  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்குமாக இரு  நாடுகளும்  பரஸ்பரம்  அவற்றின் இராணுவத்  தளங்களை பயன்படுத்துவதற்கான நுழைவுரிமையை இது  வழங்குகிறது. இராணுவ  தளபாடங்கள் திருத்த  வேலைக்காகவும்  குறை நிரப்பு விநியோகங்களுக்காகவும், பரஸ்பரம் அவற்றின் தளங்களை இரு  நாடுகளின் இராணுவங்களும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதே இதன் அர்த்தம். இத்தகைய பயன்பாடு போர்காலங்களில்  முக்கியமாக அவசியப்படுவதாகும் . ஒட்டுமொத்தமான இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் கூட அதிகரிப்பதற்கு  இந்த உடன்படிக்கை வசதி  செய்கிறது.  இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அவற்றின் மூலோபாய தோழமையை  விரிவான  மூலோபாய கூட்டுப்  பங்காண்மையாக உயர்த்துவதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில், இந்த உடன்படிக்கை பெரும்  முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆனால்  அதன் முக்கியத்துவம்  அவுஸ்திரேலியா -  இந்தியா இரு தரப்பு  ஒத்துழைப்புக்கு அப்பாலும் செல்கின்றது.  சீனாவின் ஆக்கிரமிப்புத்  தனமான போக்குகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதற்கு எதிராக  தனது நிலையை வலுப்படுத்துவதற்காக  புதுடில்லி கைச்சாத்திட்டு வருகின்ற தொடர்ச்சியான  பல  உடன்படிக்கைகளின் ஒரு அங்கமே இதுவாகும். அமெரிக்கா, பிரான்ஸ், தென்கொரியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் ஏற்கெனவே  இந்தியா இதே போன்ற  இராணுவ ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை  செய்திருப்பதுடன்  ஜப்பானுடனும்  செய்வதற்கு  யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு  இந்தியா  உடன்படிக்கைகளைச்  செய்து   கொள்கின்ற  நாடுகள்  சகலதுமே சீனாவினால்  ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து  எச்சரிக்கையாக இருக்கின்ற நாடுகளாகும்.

file7av9y4hak5t1kg6nk9lc-1591391225.jpg

இதுகால வரையில் சீனா தொடர்பிலான  இந்தியாவின்  மூலோபாய  அணுகுமுறை  தெளிவற்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. சீனாவுக்கு எதிரானவை என்று கருதப்படக்கூடிய  கூட்டமைப்புகளுக்குள்  செல்வது பற்றி  இந்தியா தயக்கம் காட்டிக் கொண்டே வந்தது. அமெரிக்கா , ஜப்பான்,  இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய  நாடுகளை உள்ளடக்கிய  நான்கு  தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை   கட்டமைப்பு (Quadrilateral security dialogue)  தொடர்பிலான  இந்தியாவின் அரைமனதான  அணுகுனுமுறை அத்தகைய  தயக்க போக்கிற்கு  ஒரு உதாரணமாகும்.  2018   நவம்பரில்  இந்த நான்கு தரப்பு   கட்டமைப்பின் கீழ்  இந்தியா , அமெரிக்கா, அவுஸ்ரேலியா  மற்றும்  சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த  அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இறுதியில் கூட்டறிக்கை ஒன்றை   வெளியிட தவறினர். அப்பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்ற  நாடுகளினால் தனித்தனியாக வெளியிடப்பட்ட  அறிக்கைகள் அவற்றின் தேசிய முன்னுரிமைகளை பிரதிபலித்தன அந்த நேரத்தில்   சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் கூட்டுச் சேர்வதாக    காணப்படுவதை இந்தியா  விரும்பவில்லை. ஆனால் இப்போது அந்த தயக்கம் மாறி வருகின்றது. போன்று தோன்றுகின்றது. பரஸ்பர ஒழுங்கமைப்பு  ஏற்பாடுகள்  ஆதரவு உடன்படிக்கையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. என்றபோதிலும் அது   பெய்ஜிஙகில் சில சலசலப்பை ஏற்படுத்தவே செய்யும்.

நாடுகள் அவற்றின்  இராணுவத் தயார்நிலையை அதிகரிப்பதற்கு ஒன்றிணைவதில் தற்போது  காட்டி வருகின்ற  தீவிர  விருப்பத்திற்கு  சீனா தன்னை மாத்திரமே குறை சொல்ல வேண்டியிருக்கும் . அண்மைய  காலங்களில்  இந்தியாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்  கோட்டு ஓரமாக  திரும்பத் திரும்ப பதற்ற நிலையை  சீனா  ஏற்படுத்தி வந்துள்ளது. கொவிட் - 19 தொற்று நோயின் விளைவான சுகாதார நெருக்கடியை   சீனா  தவறாகக் கையாண்டமை குறித்து  அவுஸ்திரேலியா  கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலடியாக  அவுஸ்திரேலியாவுடனான  வர்த்தகத்தை  குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக பீஜிங் அச்சுறுத்தியது. அது அவுஸ்திரேலியாவுடனான சீனாவின் உறவுகளில் ஏற்படுகின்ற  பதற்றங்களை வெளிக்காட்டுகின்றது.

உண்மையில்  அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா , பிலிப்பைன்ஸ், வியட்நாம், உடபட  பல நாடுகளுடனான  சீனாவின்  உறவுகள்  சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தனது  ஆக்கிரமிப்பு தனமான  நடத்தைகள் ஏனைய நாடுகள்  தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றிணைந்து ஏற்பாடுகளை செய்வதற்கு  நிர்ப்பந்திக்கின்றன என்ற  உண்மையை சீனா  விளங்கிக் கொண்டு விழிப்படைய  வேண்டும். இந்தியாவும், அவுஸ்ரேலியாவும்  கைச்சாத்திட்டிருக்கும்  பரஸ்பர ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஆதரவு உடன்படிக்கை போன்ற  உடன்படிக்கைகள் சீனா அதன் ஆக்கிரமிப்ப போக்கை  தவிர்த்துக் கொள்ள  வேண்டும் என்று  எச்சரிக்கையை விடுக்கும் நோக்கிலானவையே தவிர  வேறொன்றும்  இல்லை. அவை சீனாவின் ஆக்கிரமிப்புத் தனமான நடத்தைகளை  கட்டுப்படுத்தும் நோக்குடையவையே.

( Deccan Herald )

https://www.virakesari.lk/article/83767

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடப் பிள்ளைகள் சண்டை பிடிக்கின்றபோது நன்றாக அடிவேண்டியவர் ""இரு நான் என்ர அண்ணாவக் கூட்டிக்கொண்டு வாறன் "" என்று சொல்கின்றது போன்று இருக்கிறது டெக்கான் கெறால்டின் கட்டுரை. 😂😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.