Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்”

  • தாயகன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

1-2-142-300x163.jpg2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன் பேச்சாளர் எம்.ஏ .சுமந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்போராட்டத்தையும் போராளிகளையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தும் பயங்கரவாதப் போராட்டமாக சித்திரித்தும் கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டு வருவதுடன் அது தொடர்பிலான மக்களின் எதிர்ப்புக்களைக் கூட கிஞ்சித்தும் கவனத்திலெடுக்காத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்றபெயரில் சிலர் விடுத்துள்ள வேண்டுகோள் மக்களை மேலும் கொதி நிலைக்குள் தள்ளியுள்ளது.

 

விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது, விடுதலைப்புலிகளின் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம். அவர்கள் கொடூரமானவர்கள். அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியமைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. பிரபாகரனையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பகிரங்கமாக தெரிவித்ததுடன் புலிகளின் மௌனிப்புக்கு அடுத்த வருடமே யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக்கொடியை ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தூக்கி அசைத்து ” சிங்கக்கொடி சம்பந்தன்” எனப்பெயரெடுத்த இரா.சம்பந்தன் தலைவராக இருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் கேட்டுள்ளனர்.

 

அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவரும் கட்சியின் பேச்சாளருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கொள்கை, கருத்துக்களும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் முற்றிலும் எதிரானவையாகவே உள்ளன. இறுதிக்கட்டப் போரில் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் எனப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறியதுடன் புலிகள் தொடர்பிலும் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியவர்தான் இந்த சுமந்திரன். அத்துடன் பெரும்பாலும் வருடம்தோறும் இராணுவ வீரர்கள் தினத்தில் சுமந்திரன், பாராளுமன்றத்தில் ஏனைய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று பொப்பி மலரை தன்னுடைய ஆடையில் அணிந்தவாறு இலங்கை இராணுவத்துக்கு தனது கௌரவத்தை வழங்கி வழங்குபவர்.

 

அது மட்டுமன்றி வடக்கு மாகாண முதலைமைச்சராக உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் இருந்தபோது தமிழின இனப்படுகொலை தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தார். ஆனால் இதனை நிறைவேற்ற விடக்கூடாதென்பதில் சுமந்திரன் பெரும் பிரயத்தனங்களை எடுத்திருந்தார். எனினும் தமிழின இனப்படுகொலை தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாலேயே அதன் பின்னர் தனது வடக்கு மாகாணசபை விசுவாசிகளைப் பயன்படுத்தி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து தமிழ்மக்களின் கடும் விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானவர்.

 

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் எதிராகவே தொடர்ந்து செயற்பட்டும் விமர்சித்தும் கருத்துக்களை வெளியிட்டும் வருபவர் சுமந்திரன் . இதன் உச்சக்கட்டமாக அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் எதிராக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களினாலும் இந்தக்கருத்துக்களை நியாயப்படுத்திய இரா.சம்பந்தனினாலும் தமிழ் மக்களிடையே எழுந்த எதிர்ப்புக்களினால் தமிழ் கூட்டமைப்பே கதி கலங்கிப்போயிருக்கும் நிலையில் தான் சிறுபிள்ளைத்தனமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று தொடர்ந்தேர்ச்சியாக கூறிவருவதுடன், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபை, பாராளுமன்றம் என்பவற்றிற்கான தேர்தல்கள் நடந்தபோது முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் கட்சிகளை சார்ந்தவர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்போடு இணைந்து போட்டியிட எடுத்த முயற்சிகளை, விடுத்த வேண்டுகோள்களை, நடத்திய சந்திப்புக்களை எல்லாம் தோற்கடித்த திறமையும் பெருமையும் கொண்ட சம்பந்தனும் சுமந்திரனும் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் தற்போது முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சிலர் தமிழ் மக்களிடம் ஆதரவு கோருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம். அவர்கள் கொடூரமானவர்கள். போர்க் குற்றம் புரிந்தவர்கள், அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியமைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. பிரபாகரனையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பகிரங்கமாக தெரிவித்ததுடன் 2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நடந்த எந்தவொரு தேர்தல்களிலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கட்சிகளையும் ,போராளிகளையும் தங்களுடன் இணைக்க மறுத்ததுடன் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சிலந்தி சின்னத்தில் முன்னாள் போராளிகள் களமிறங்கியபோது அவர்களுக்கு எதிராக தீவிர பிரசாரங்களை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் தான் அண்மையில் தாம் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

உண்மையில் இவர்களுக்கு முன்னாள் போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் எத்தனையோ தேர்தல்கள் நடந்துமுடிந்த நிலையில் ஏன் முன்னாள் போராளிகளை தங்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை? முன்னாள் போராளிகளில் எத்தனையோ துறை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளினால் பட்டை தீட்டப்பட்ட அரசியல் அனுபவம் பெற்றவர்கள் உள்ளார்கள். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபை, பாராளுமன்றம் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடந்தபோது இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம். அல்லது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கூட நியமித்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் புலிகளின் தியாகத்தை கீழ்த்தரமாக விமர்சித்துவிட்டு தற்போது முன்னாள் போராளிகளுடன் சந்திப்புக்களை நடத்துவதற்கும் முன்னாள் போராளிகள் மீது அதிக பாசம், பற்று இருப்பதாக காட்டுவதற்கும் தாம் முன்னாள் போராளிகளை இணைத்து கொள்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு பின்னால் அண்மையில் சுமந்திரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்போராட்டத்தையும் விமர்சித்து வெளியிட்ட கருத்துக்களே உள்ளன.

அதாவது பாராளுமன்ற தேர்தல் ஒன்று நெருங்கிவந்த நிலையில் சுமந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்போராட்டத்தையும் விமர்சித்து வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனத்துக்குள் தள்ளிய நிலையில் அதன் பிரதிபலிப்புகள் பாராளுமன்றத் தேர்தலில் பிரகாசமாக வெளிப்படுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் விடுத்த எச்சரிக்கையையும் சுமந்திரன் தொடர்பில் பங்காளிக் கட்சிகள் பகிரங்கமாக வெளியிட்ட எதிர்ப்புக்களையடுத்துமே முன்னாள் போராளிகள் மீது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு திடீர் அக்கறை ஏற்பட்டு முன்னாள் போராளிகளை தங்களுடன் இணைத்து கொள்வதாக கூறத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் இந்த அறிவிப்பு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பு வெளிவந்து தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் போராளிகள் சிலரின் பெயர்களை இணைத்திருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் அனைத்தும் முடிந்த பின்னரே முன்னாள் போராளிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்து விட்ட நிலையில் முன்னாள் போராளிகளில் ஒருவருக்கேனும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்குவோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினராலும் இதுவரையில் தெரிவிக்க முடியவில்லை. சில வேளைகளில் அப்படி தெரிவித்தால் கூட அது நடக்கப்போவதுமில்லை.

முன்னாள் போராளிகளை தங்களுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் வேலை. சம்பந்தனின், சுமந்திரனின் புலி எதிர்ப்பு நிலைப்பாடுகளினால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான கொதி நிலையை சிறிதேனும் குறைப்பதற்கான ஒரு தந்திரமே இந்த அறிவிப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்துள்ளபோதும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இது தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். தங்களை இதுவரைக்கும் அருகில் கூட எடுக்காத தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை தெரிவு செய்துவிட்ட நிலையிலும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானித்துவிட்ட நிலையிலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தங்களுடன் இணைப்பதன் மூலம் இந்த முன்னாள் போராளிகளுக்கு என்ன நன்மை வந்துவிடப்போகின்றது?

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வைக் குறைப்பதற்கே தங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தப்போகின்றார்கள் என்பது தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டும் வேறு போக்கிடம் இல்லாததாலுமே சூடு சொரணையற்று, முதுகெலும்பற்றவர்களாக,தாங்கள் உயிராக நினைக்கும் தலைவரையும் விடுதலைப்போராட்டத்தையும் பயங்கரவாதியாக,பயங்கரவாதமாக விமர்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என்ற பெயரில் அரசியல் செய்யத்துடிக்கும் சில விலைபோகக் கூடியவர்களின் வேண்டுகோளே இது என்பது பகிரங்கமாகத் தெரிந்தாலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளாக இன்றுவரை அதே கொள்கையுடனும் உணர்வுடனும் உறுதியுடனும் வாழ்ந்து வரும் அரசியல் ஆசையற்ற, உண்மையான போராளிகளை மலினப்படுத்தும் ஒன்றாகவே விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள ”தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவளியுங்கள்”என்ற வேண்டுகோள் நோக்கப்படுகின்றது
 

http://thinakkural.lk/article/48245

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.