Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருவேகம்பமாலை

வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ
எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே.

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.

பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.

பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.

பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.

வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.

ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர

ஹர ஹர சிவ சிவ ஓம்... ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

அருனையின் பெருமகனே

எங்கள் அண்ணாமலை சிவனே

ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2)

அருள்வாய் ஈஸ்வரனே ...

அன்பே அருணாச்சல சிவனே

ஹர ஹர சிவ சிவ ஓம்

அபயம் அபயம் அண்ணாமலையே

ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே

மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2

மலையென எழுந்தவனே

எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர

ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே

பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2

அணிவாய் அவசியமே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்

போற்றிய பரமேசா!

அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2

அணிந்திரு அரவிந்தமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

அண்டம் இருந்திட கண்டம் கருத்திட

நஞ்சினை சுவைதவனே!

அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2

அதை நீ அருந்திடுமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர


ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்

தினம் செல்லும் குருமணியே

ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2

ஏறிட மனதில்லையோ!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா!

எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2

நேரம் உம்மக்கில்லையோ!

சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர

சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே!

அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2

ஆடிடுவாய் உடனே!

எங்கள் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே

உன் திரு வாசலில் 1000 கங்கையை (2

கண்களில் ஊரிடுமே!

அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர

மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே

தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2

நியாயமோ ஈஸ்வரனே?

ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்

அறிவாய் அமரேசா!

உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2

வரமதை உடன் தருமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே

அய்யா!அழைத்திடுக

சிவமே! சிவமே!தருவாய் நலமே!

அபயம் தா அரனே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி |

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர்      குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன      தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு      விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும்      அடிசேராய்!

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி      பவர்சேயே!

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும்     வயலூரா!

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர்     செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை    பெருமாளே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அழைத்தான் திருநபியை ... சங்கீதவித்வான் S M A காதிர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனை ஆளும் மேரி மாதா.....துணை நியே மேரி மாதா- 
எனை  ஆளும்  மேரி  மாதா.....துணை  நியே  மேரி  மாதா 

பரிசுத்த  ஆவியாலே பர  புத்திரன்  ஈன்ற  தாயே (2)
பிரபு  ஏசுநாதன்  அருளால்  புவியோரும் புனிதம் அடைந்தார் 

     எனை  ஆளும்  மேரி மாதா ......துணை  நியே  மேரி  மாதா       என்றும்  துணை  நியே  மேரி  மாதா 

நெறி  மாறி  வந்ததாலே  நகைப்பானதே  என்  வாழ்வே (2)

கணமேனும்  சாந்தி   இலையே ......அனு தினமும்  சோதியாதே 

     எனை  ஆளும்  மேரி  மாதா........துணை  நியே  மேரி  மாதா 
   என்றும்  துணை  நியே  மேரி  மாதா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையுடன் ஞானாட்சியாய்
மனையில் குடியிருப்பாள் சரஸ்வதி நீயே

காலைக் கண்டால் வித்யா காயத்ரி நீ
மாலை வந்தால் சந்தியா சாவித்ரி நீ

ஆயுத மெய்யா உயிர்மெய்யா அறியா வயதில் நெல்மீது
அப்பா சொல்ல அன்போடு எழுதிப் பாத்தோம் உன் பேரு

வாய்மொழியாகும் தாய்மொழி சங்கீதம்
வளர்மதி உன்னாலே வளரும் சந்தோஷம்

பண்டித பிரகஸ்பதி பண்வளர் சரஸ்வதி
அம்மா வருவாய் நவராத்திரி இதுதான் எமக்கு சுபராத்திரி

பாவலர் கவிகேட்டு பாடிடுவோம் தமிழ் பாட்டு
பாமகள் விழிக்கூட்டு பாரினில் வழி காட்டு

புத்தகம் பூஜை இட்டு அச்சத்தை பூப்போட்டு
பக்தியாய் துவங்கும் சுபயோகமே வெற்றியாய் பெருகும் மென்மெலுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்… ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே
 ஓ… ஓ… ஓ…ஓம்

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ…ஓ… ஓ… ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே 
ஓ… ஓ… ஓ…ஓம்

ஓம்... ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்…

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ...

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியது கேட்கும் வடிவடிவேலோய்

அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு 

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு 

நீங்கிப் பிறந்தகாலையும்

ஞானமும் கல்வியும் நயத்தலரிது

ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்

தானமும் தவமும் தான் செய்தல் அரிது

தானமும் தவமும் தான் செய்வராயின்

வானவர் நாடு வழி பிறந்திடுமே...

அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்

விளக்கம் தந்த மூதாட்டியே 

கொடியது என்ன...


கொடியது கேட்கின் வடிவடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை...

அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்

அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால் 

இன்புற உண்பது தானே...

மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்

வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்

திறமை படைத்த ஔவையே 

பெரியது என்ன...


பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமும் நான் முகன் படைப்பு

நான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்

குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண் 

புவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்

அரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்

இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும்

பெரிதே...

ஔவையே... வானவரும் உனது 

வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் 

அதில் வியப்பில்லை

இனியது என்ன...

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியை தொழுதல்

அதனினும் இனிது அறிவினம் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரை

கனவிலும் நனவிலும் காண்பது தானே

அரியது கொடியது பெரியது இனியது

அனைத்திற்கும் முறையோடு 

விடை பகன்ற ஔவையே 

புதியது என்ன...

என்றும் புதியது... ( இசை )

பாடல் என்றும் புதியது

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

முறுவல் காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும்... மயிலும்... 

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும் மயிலும் புதியது....

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும்... 

கந்தன் கருணை புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் 

கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது

முதலில் முடிவது முடிவில் முதலது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு

ஆறுமுகம் புதியது... ( இசை )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ? அம்மா
விதி என்ன கதி என்ன வீண் பிறவி அழிப்பதன்றோ?
உடன் வந்த தமக்கைக்கும் வசை தேடித்தந்த பாவி அம்மா
உனதன்பு அறிவுறையும் உதறி விட்ட பாவியன்றோ? பாவியன்றோ?

ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரே அம்மா
உறுதுணையாம் மனையாளும் நகைத்தாளே இழிவன்றோ?

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எனக்கினி பிறவி வேண்டாம் முருகா 
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி இன்பம் வேண்டும் ஈனமெல்லாம் மறைய வேண்டும்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்+

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீலானி.. அப்துல் காதிர் ஜீலானி || ஜைனுல் ஆபிதீன் பைஜி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஆட்கொண்ட இயேசு

 

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவாயூர் அப்பனே

 

 

ஓம் ஸ்ரீ விஜய கணபதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு பணிந்தேன் ஈரோடு மாரி 

 

ஆடி கிருத்திகை சிறப்பு முருகன் பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் மதியோதி யொலிக்கும் தளிர் மேனியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அணலான மலை காண ...மணம் குளிருதே...


சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி தொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.