Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய பௌர்ணமியும் அரசியல் நிலவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பௌர்ணமியும் அரசியல் நிலவும்

August 3, 2020

10.pngன்று முதல் பிரசார பணிகள் நிறைவடைகின்றன. இன்று பௌர்ணமி நாளும் கூட. அது மாதாந்தம் வருவதுதான். ஆனால், தேர்தல் கால பௌர்ணமிகள் சிறப்பானவை. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசார பணிகள் முடிந்த மறுநாளும் பௌர்ணமியே. இன்றும் பௌர்ணமியே.

இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இன்றைய நேற்றைய பிரச்சினை அல்ல. சுதந்திரத்துக்கு முன்னமே இந்திய வம்சாவளித் தமிழருக்கானதாக வெளிப்பட்டது. சுதந்திரமடைந்ததோடு அவர்களின் வாக்குரிமையைப் பறித்து அந்த வஞ்சம் தீர்க்கப்பட்டது.

 

அடுத்த இலக்காக இலங்கைத் தமிழர்கள் இருந்தார்கள். தரப்படுத்தல் முறைமை மூலம் அவர்களது வளர்ச்சியை தடுக்க நினைத்து அதுவே பின்னாளில் பெரும்போருக்கே வழிவகுத்தது. வடக்கு கிழக்கு பெரும் அழிவுகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் முகம் கொடுத்து இன்று வரை மீள முடியாத நிலையில் ஆரம்ப கால உரிமை கோஷங்களைக் கடந்து பௌதீக அபிவிருத்திகளுக்காக தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

 

அடுத்த இலக்கு முஸ்லிம் மக்களானார்கள். 2009 யுத்தத்தில் இலங்கைத் தமிழரை ஓரங்கட்டியதுடன் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். பள்ளிவாசல் தாக்குதல்கள் முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் எரிப்பு என கிளம்பி 2015 ஆட்சிமாற்றத்தை அதிகம் விரும்பியவர்களாக முஸ்லிம் மக்கள் ஆக்கப்பட்டனர்.

அதே நேரம் அடுத்த ஆட்சி மாற்றத்திற்கான ஆயுதமாக அதே முஸ்லிம்களைக் கொண்டே கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாயின. இதன் பின்னணிகள் குறித்து இப்போது வெளிப்படையாகவே பேச்சுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

 

2019 இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றி கொள்ளச் செய்வது என்பது தொடர்பில் தீர்க்கமான ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதனை நோக்கிய நகர்வில் பௌத்த சிங்கள வாக்குகளை இலக்கு வைத்த பொறியை இந்த பொதுத்தேர்தலிலும் காண முடிகிறது.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த போதும் ஆளும் கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடம் வழங்காமல் பௌத்த சிங்கள மக்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்துள்ளது.

 

அதே நேரம் வட மாகாணமான யாழ்ப்பாணத்துக்கு வெளியே அதிகளவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாவட்டமாக நுவரெலிய மாவட்டம் திகழ்கிறது. 2010 ல் ஏழு ஆசனங்களில் ஐந்தும் 2015 ல் எட்டு ஆசனங்களில் ஐந்துமாக இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டம் கவனமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பு 11 வேட்பாளர்களில் மூன்றே மூன்று சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி தமது மூன்று விருப்பு வாக்குகளும் சிதறாத வகையில் பார்த்துக் கொண்டுள்ளனர். அதே நேரம் அதே அணி எட்டு தமிழ் வேட்பாளர்களை கொண்டுள்ளது. இது தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கானது என்பது தெளிவு. அதில் போட்டி இடுபவர்களுக்கும் தெரியும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்பது உதிரியாக போட்டியிடும் மூவரும் நன்கு அறிவர். அவ்வாறு நடந்து கொள்வதற்கான சன்மானம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

தேசிய வீரர் என புகழ்பெற்ற தமிழ் விளையாட்டுவீரர் வீரர் நன்றாகவே அரசியல் விளையாடுகிறார். தன்னுடைய கட்சி போட்டியிடும் அதே தேர்தலில் அந்த கட்சியின் தமிழ் அமைப்பாளர் எனும் ஒருவர் இந்த அணியில் உள்ளார். சதா கட்சி மாறிக்கொண்டு இருப்பவர் வெற்றி பெற முடியாது என தெரிந்தும் தனது வாக்கு வியாபாரத்தை கடைவிரித்துள்ளார். ஐந்து பேரும் சேர்ந்து ஆறறை லட்சம் கடக்க செய்ய வேண்டும் என்று போட்ட திட்டத்தில் அவர் வீடு பேறு பெற்றுவிட்டதால் அவரின் அந்த தலைமுறைக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துவிட்டு வீடு போக வேண்டி இருக்கும்.

அடுத்தபக்கமாக பேசும் தமிழ் அணியோ தங்கள் சின்னத்துக்கு கேட்கிறார்களோ இல்லையோ மூன்று இலக்கத்துக்கு மாத்திரமே பிரசாரம் செய்து தமது மாவட்ட வெற்றியை சுருக்கிக் கொண்டுள்ளனர். அந்த அணியின் வாக்குகளில் இலக்கத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டு நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு.

ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என என்ற வரிசையின்; பேரில் நவீனம் இருந்தாலும் பழமைப் பேரினவாதமும் அங்கே தெரிவாக வாய்ப்பு உண்டு.

இந்த பின்னணியிலே மலை மாவட்டத்தில் இந்த முறை இன விகிதாசாரம் நான்குக்கு நான்கு என மாற்றப்படும் நிலைமையே உள்ளது. அடுத்த தேர்தலிலும் இருந்து ஐந்து மூன்று அமையுமாறு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் கால காய்நகர்த்தல்களைச் செய்வதில் இரண்டு தேசிய கட்சிகளுமே ஒன்றுக் கொன்று நிகரானதே. கடந்த தேர்தல்களில் சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காமைக்கு தமிழ், முஸ்லிம் சிறுகட்சிகள் தம்முடன் இருந்ததே காரணம் என ஐ.தே. க எண்ணியதும் அவர்களை கழற்றி விட்டு தனி அணியாக நிற்க காரணம். அது மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தை அமைப்பதற்கு துணையாகவும் உள்ளது. அதற்கான மறைமுக உடன்பாடுகள் இவர்களிடையே உண்டு.

அழைப்பு மணி அணி எத்தனை காலத்திற்கு ஐக்கிய சக்தியாக செயற்படும் என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். அதற்குள்ளும் பௌத்தவாத நிகழ்ச்சி நிரலை காணக்கூடியாதகவே உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்களின் சக்தியாக பெயர் மாற்றிக் கொண்டாலும் தேசிய ரீதியாக மக்களை ஐக்கியமாக்குவதற்கு தமிழ் , முஸ்லிம் தலைமைகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு பயணிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. அது நடக்காதவரை ம.வி. முன்னணி விடுதலை முன்னணி அல்ல விமர்சன முன்னணி மாத்திரமே.

வட கிழக்குத் தமிழ் தரப்போ தங்களது பௌத்த பேரினவாத்ததுக்கான தமது எதிர்ப்பை கூட்டாக காட்டுவதில் இருந்து விலகி எவ்வளவு தூரம் பிளவுபடலாமோ அந்தளவு தூரம் பிரிந்து தவல்களை சிதைத்துக் கொள்கின்றனர்.

எது எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெற்று அரசாங்கம் ஒன்று அமையப் போவது இல்லை. ஆனாலும் அதற்கான தேவை 19ஆவது திருத்தத்தை இல்லாமல் ஆக்குவது என்பதற்கு அப்பால் தொகுதி வாரி தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் நேரடியான இனவாத ஒடுக்குமுறைகளில் இருந்து அரசியல் பிரதிநிதித்துவ ஒடுக்குமுறையை அமுல்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளில் பிரயத்தனம் மேற்கொள்ளப்படும்.

அது வடக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழ் தரப்பு அசட்டையாக இருக்காமல் அதனால் பாதிப்படையக்கூடிய வடக்கு, கிழக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் பிரிதிநிதித்துவத்தின் எண்ணிக்கை குறையாத தேர்தல் முறையைப் பாதுகாப்பதிலும் கவனம் எடுக்க வேண்டும்.

தேர்தல் முறை மாற்றம் மூலம் இனவாதத்திசையை பேரினவாத பக்கமாக பாராளுமன்றாலும் வைத்துக்கொள்ளும் தீவிர முயற்சி அடுத்த ஐந்தாண்டு கால அரசியல் நகர்வில் அவதானிக்கலாம்.

எனவே இனவாதத் திசையைத் தீர்மானிக்கும் தேர்தலாகவே இந்த முறை தேர்தல் அமையப்பெறும். தமிழ் முஸ்லிம் சமூகம் நிதானமாக வாக்களித்து தமது பிரதநதித்துவத்தையும் பொருத்தமான பிரதிநிதிகளையும் தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

இன்றைய பௌர்ணமி தினங்களில் இடம்பெறும் ‘பன’ அல்ல இது. அதற்கு மாறானது. இலங்கையில் இனவாதம் என்பதுதான் அரசியல் நிலவு. அது தேயுமாப்போல் தெரியும். ஆனால், திரும்பவும் மலரும். இன்று பௌத்தர்களுக்கு விசேட போதனைகள் இடம்பெறும்.

 

 

http://thinakkural.lk/article/59709

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.